Tagged: மாட்டுக்கறி

கவிஞர் சுகிர்தா ராணி கவிதை தொகுப்பு – மாட்டுக்கறி

மாட்டுக்கறியே என் வாழ்க்கை மாட்டுக்கறியே என் கொண்டாட்டம் மாட்டுக்கறியே என் திருவிழா மாட்டுக்கறியே என் வாழ்வு மாட்டுக்கறியே என் உணவு நான் பிறந்து கண்விழித்தபோது உலர்ந்த உப்புக்கண்டத்தின் பெருவாசனையே எனக்கு முதல் சுவாசம். கைகால்களை உதைத்து உதைத்து நான் வீறிட்டு அழுதபோது என் குடிசைவீட்டுத் தாழ்வாரத்தில் செருகியிருந்த எலும்புத் துண்டுகளே எனக்குக் கிலுகிலுப்பை. பசிக்காக உதடுகளைச் சப்புக் கொட்டியபோது இரவடுப்பில் வேக வைக்கப்பட்ட மாட்டிறைச்சிச் சாறே எனக்குத் தாய்ப்பால். கறியின்மீது கவிழ்ந்திருக்கும் மஞ்சள்நிற கொழுப்புத் துண்டுகளை உச்சிவெயிலில் உலர்த்தியெடுத்து பனியென உருகும் ஊன்நெய்யில் சுட்டு எடுப்பதே என் பலகாரம். மாட்டுக்கறித் துண்டுகளை நீளவாக்கில் அரிந்தெடுத்து வீட்டின் முற்றத்தில் கொத்தாக வெட்டப்பட்ட முட்செடியின் நெருங்கிய கிளைகளில் பரப்பிவைத்து உலர்த்துகையில் கருப்புத் துணியேந்தி காகம் விரட்டுவதே எனக்குப் பொழுதுபோக்கு. களிமண்ணால் தேய்த்துக் குளித்து ஆடையணிந்து வெளிச்செல்கையில் என்மீது வீசும் புலால் நாற்றமே எனக்கு நறுமணத் தைலம். . வார்களால் இழுத்துக் கட்டப்பட்டு இடுப்பு இறக்கத்தில்...

உண்ணாவிரதத்தில் உயிர் நீத்த ‘கோமாதா’க்கள்!

‘வடக்கிருந்து உயிர் நீத்தல்’ என்று ஒரு வழக்கம் உண்டு. உணவு உறக்கமின்றி அப்படியே ‘உயிர் விடுதல்’; வேதாந்திகளைக் கேட்டால் இது ‘ஆன்மீகம்’ என்பார்கள். இப்படி உயிர் விடுவோர் மீது தற்கொலைக்கு முயற்சித்தார்கள் என்று வழக்குகள் தொடர்ந்ததாகத் தெரியவில்லை. இப்போதெல்லாம் ‘ஒரு நாள் உண்ணாவிரதம்’, ‘அடையாள உண்ணாவிரதம்’ எல்லாம் வந்து விட்டன. ‘சாகும் வரை உண்ணாவிரதம்’கூட அவ்வப்போது நடக்கிறது. அதாவது இரண்டு நாள் கழித்து காவல்துறை கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். முன்பெல்லாம் வியாழக்கிழமை, செவ்வாய் கிழமை, சனிக்கிழமை என்று வாரத்துக்கு ஒரு நாள் விரதம் இருப்பது  உண்டு. இது பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் விரதம். இப்போது அந்த ‘விரதம்’ புதிய உருமாற்றம் பெற்று விட்டது. அதாவது அந்த நாள்களில் ‘அசைவம்’ சாப்பிடுதல் கூடாது; மற்றபடி சைவ சாப்பாட்டை மூச்சுமுட்ட ஒரு பிடி பிடிக்கலாம். இப்படி சாப்பிடாமல் இருப்பது அகிம்சை போராட்டம் என்கிறார்கள். சொன்னால் கோபிக்கக் கூடாது. உண்மையில்...

மாட்டுக் கறி உண்ணும் 3000 ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள்

  கேட்ச்நியூஸ் என்னும் இணையதள செய்தி சுட்டிக்கு    திசம்பர் 13, 2015 மூன்று நாள் பயணமாக அருணாச்சல பிரதேசம் வந்திருந்த ஆர்.எஸ்.எஸ் அனைத்திந்திய பிரச்சார செயலர் மன்மோகன் வித்யா டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஆர்.எஸ்.எஸ் பீப் உ உண்ணுவதற்கு எதிராக இருக்கும் தோற்றத்தை போக்குவதற்காக செய்யப்படும் முயற்சி. ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராவதற்கு பீப் உண்ணுவது ஒரு தடையாக இருக்க கூடாது. இங்கே 3000 சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் பீப் உணவை எடுத்துகொள்வோர். மேலும் ஆர்.எஸ்.எஸ் பீப் தடைக்கு எவ்விதத்திலும் காரணமில்லையென்றும் தேச விரோத சக்திகளுக்கு எதிரான இயக்கமென்றும் கூறினார். முத்தாய்ப்பாக மக்களின் உணவு பழக்க வழக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் குறுக்கே நிற்காது என்றார். (இடத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பேசி ஆள்சேர்க்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்பது நிரூபணமாகிறது)