Tagged: மனிதநேயப் போராளி தோழா் எஸ்.வி.ஆா்.

காவல்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிரடியாக நடைபெற்ற எஸ்.வி.ஆர். ஆவணப்பட வெளியீடு !

கழக தலைவர் வெளியிட தோழர் நல்லக்கண்ணு பெற்றுக்கொண்டார் ! 04.06.2016 சனிக்கிழமை, மாலை ”மனிதநேயப் போராளி தோழா் எஸ்.வி.ஆா்.” எனும் ஆவணப்பட வெளியீடு மற்றும் திரையிடல் சென்னை மேற்கு மாம்பலம்,சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்சிகள் துவங்கும் நிலையில் திடீரென வந்த காவல்துறை நிகழ்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த திருமண மண்டபத்தில் நிகழ்சியை நடத்தக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்தது.அப்பட்டமான ஜனநாயக விரோதமாக நடந்து கொண்ட காவல்துறையின் அடாவடித்தனத்தை முறியடித்து குறும்பட வெளியீட்டை,திரையிடலை எப்படியும் நடத்தி விடுவது என தோழர்கள் முடிவு செய்தனர். உடனடியாக கழக தோழர் அன்பு தனசேகர் அவர்களின் இல்லத்தின் மேல் மாடியில் நிகழ்சியை நடத்த மாற்று ஏற்பாடு செய்தனர்.தோழர் அன்பு தனசேகர் அவர்கள் காவல் துறையின் மிரட்டகளை புறந்தள்ளி தன் வீட்டில் நிகழ்சியை நடத்த மகிழ்சியுடன் ஒப்புக்கொண்டு நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். உடனடியாக நாற்காலி, ஒலிபெருக்கி, விளக்கு அனைத்தும் தயார் செய்யப்பட்டு 100 பேர்...