Tagged: பெரியார் முழக்கம் 03032016 இதழ்

காதலர் நாளில் கழகத் தோழர் குமரேசன்-தரணி ஜாதி மறுப்பு மணவிழா வரவேற்பு

காதலர் நாளில் கழகத் தோழர் குமரேசன்-தரணி ஜாதி மறுப்பு மணவிழா வரவேற்பு

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் குமரேசன்-தரணி, ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு நிகழ்வு காதலர் நாளான பிப்.14 அன்று மாலை 7 மணியளவில் இராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகத் தோழர் குமரேசன், கழகத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்றவர். கழக மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்ற, தபசி. குமரன், வழக்கறிஞர்கள் துரை.அருண், திருமூர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 03032016 இதழ்

வினா… விடை…!

வினா… விடை…!

‘கிங்’ ஆக இருப்பதையே எனது கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். – விஜயகாந்த் ஜனநாயகம் – தேர்தல் – கூட்டணி எல்லாத்துக்கும் முழுக்குப் போட்டுட்டு மன்னராட்சிக்கு உங்களை போராட அழைக்கிறாங்க… புரியுதா, கேப்டன். 16,000 முன்னாள் இராணுவ வீரர்கள் ரிலையன்ஸ் அம்பானியின் சொத்துக் களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். – செய்தி அன்று ‘தேசத்தை’ காக்கும் பணி; இன்று தேசத்தின் ‘முதுகெலும்பை’க் காக்கும் திருப்பணி! என்னே தேசபக்தி…! முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் நானும் இருக்கிறேன். – சரத்குமார் வாங்க… வாங்க… உட்காருங்க… இதோ, டி. இராஜேந்தர், வந்துகிட்டே இருக்காரு… ஜெயலலிதா முதல்வராக, சபரிமலை அர்ச்சர்கள் தமிழகக் கோயில்களில் பூஜை. – செய்தி அதுதான், அய்யப்பனுக்கு பெண்கள் என்றாலே ஆகாதே; முதலமைச்சராக மட்டும் அனுமதிச்சிடுவானா? ஊழலே செய்யாத கட்சியுடன் கேப்டன் கூட்டணி அமைக்க பிரேமலதா கோயிலில் பிரார்த்தனை. – ‘தினமலர்’ விஜய்காந்துகிட்ட நேராக சொன்னா நிச்சயம் கேட்க மாட்டாருன்னு அவ்வளவு நம்பிக்கை. பாகிஸ்தான் பரோட்டா...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (13) ம.பொ.சி. ஆதரித்து விட்டால்-தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (13) ம.பொ.சி. ஆதரித்து விட்டால்-தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா? வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி அடுத்தக் குற்றச்சாட்டு “சேதுரத்தினம் அய்யரை அமைச்சராகச் சேர்த்துக் கொண்டது”. 1926இல் சுயேச்சை அமைச்சரவை அமைத்த சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சுயராச்சிய கட்சியை சேர்ந்த அரங்கசாமி முதலியார் ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் சைமன் கமிஷனை டாக்டர் சுப்பராயன் வரவேற்றதை கண்டித்து பதவி விலகினர். டாக்டர் சுப்பராயன் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டது. அன்றைய ஆளுநர் நீதிக்கட்சியினரை அழைத்து டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண் டார். நீதிக்கட்சியைச் சார்ந்த முத்தையா முதலியாரையும் சுயராச்சிய கட்சியில் இருந்து விலகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு வந்த சேதுரத்தினம் அய்யரையும் அமைச்சரவையில் சுப்பராயன் சேர்த்துக் கொண்டார். 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தது. சுய ராஜ்ஜிய கட்சி தான் வெற்றி பெற்றிருந்தது. நீதிக்கட்சியில் 21 சட்டமன்ற உறுப்பினர்களும், சுயராச்சிய கட்சியில் 41 சட்டமன்ற உறுப்பினர்களும்...

“பெரியாரின் பெண் விடுதலை இன்னும் நிறைவேறவில்லை!”

“பெரியாரின் பெண் விடுதலை இன்னும் நிறைவேறவில்லை!”

கோவை ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டுள்ள ‘இந்துத்துவத்துக்கு எதிரான 5 நூல்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு க.வி. இலக்கியா எழுதிய நீண்ட முன்னுரையின் – ஒரு பகுதி. “மனிதன் ஏன் பிறந்தானோ, ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். அது புறமிருந்தாலும் மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும்.” இது பெரியாரின் வார்த்தைகள். ‘கல்யாண விடுதலை’ என்ற கட்டுரையின் இறுதி பத்தி களில் இருந்து எடுத்துள்ளேன். பெரியார் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வரும் வார்த்தையாக இருப்பது ‘வெங்காயம்’ என்பதுதான். ஆனால், எனக்கு நினைவிற்கு வருவது ‘இன்பமும் திருப்தியும்’ என்ற வாக்கியமே. இரண்டு வார்த்தைகளை உடைய இந்த அழகான வாக்கியம், “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தில் மட்டும் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. மக்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், பகுத்தறிவுடனும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று மட்டும் பெரியார் நிற்கவில்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையில் இன்பமும் திருப்தியும்...

மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரையில், ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை 27.2.2016 அன்று ஒபுளா படித் துறையில் சிறப்புடன் நடத்தியது. மாவட்ட செயலாளர் மா.ப. மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்ற, மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பகத்சிங், கழகப் பிரச்சார செயலாளர் பால். பிரபாகரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா. செல்வம், கம்யூனி°ட் மா.லெ. மாவட்டச் செயலாளர் மேரி ஆகியோரைத் தொடர்ந்து எஸ்.டி.பி.அய். மாநில செயலாளர் நெல்லை முபாரக், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். சகாயராஜ் நன்றி கூறினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, விருதுநகர் கணேசமூர்த்தி, விஜயகுமார், சூலூர் பன்னீர்செல்வம், காளையார் கோயில் முத்துகுமார், தனபால், சங்கீதா, வழக்கறிஞர் பொற்கொடி ஆகியோர் மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினர். காவல்துறை விதித்த தடையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு...

‘ஜனநாயகம்’ பெரியார்

‘ஜனநாயகம்’ பெரியார்

கேள்வி : உலகத்தில், மகா பித்தலாட்ட மான சொல் எது? பதில் : அதுவா, அதுதான் ஜனநாயகம் என்கின்ற சொல். கேள்வி : அது என்ன, கடவுள் என்பதை விட மகா பித்தலாட்டமான சொல்லா? பதில் : அய்யய்யோ, கடவுள் என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ஜனநாயகம் என்கின்ற பித்த லாட்டச் சொல் அப்படி அல்ல; தந்திரக் காரனுக்கு – அயோக்கியனுக்கு – இவர்களே சேர்ந்த கோஷ்டிக்குத்தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்தலாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி – ஜனநாயகம்தான். கேள்வி: இதுவே இப்படியானால் – ஜன நாயக முன்னணி, ஜனநாயக அய்க்கிய முன்னணி, ஜனநாயக முற்போக்கு முன்னணி, ஜனநாயக தீவிர முன்னணி, ஜன நாயக அதிதீவிர முன்னணி, ஜனநாயக சுயேச்சை முன்னணி, சுயேச்சை ஜனநாயக முன்னணி, ஜனநாயகக் கூட்டணி – என்பது போன்ற சொற்களின் தன்மை என்ன...