Tagged: பெரியார் முழக்கம் 02012014 இதழ்

பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

‘தி இந்து’ தமிழ் நாளேடு, பெரியார் நினைவு நாளன்று திருத்தங்களுடன் வெளியிட்ட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரையின் முழு வடிவம் இங்கே வெளியிடப்படுகிறது. பெரியாரின் பொது வாழ்க்கை எதிர் நீச்சலிலே தொடங்கியது. காந்தியின் தீண்டாமை, மதுவிலக்கு, கதர் பரப்புதல் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளே அவரை காங்கிரசுக்குள் இழுத்தது. அவர் காங்கிரசில் இருந்தது 5 ஆண்டுகாலம் தான். இரண்டு முறை மாநில தலைவர், இரண்டு முறை மாநில செயலாளர். அந்த 5 ஆண்டுகாலமும் வைக்கத்தில் தீண்டாமை எதிர்ப்பு; காங்கிரஸ் கட்சியே நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனக் குழந்தைகளுக்கு தனி இடத்தில் சாப்பாடு போட்டதற்கு எதிர்ப்பு; ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பைப் பகிர்ந்து அளிக்கும் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை’ காங்கிரஸ் கொள்கையாக ஏற்க வேண்டும் என்ற போராட்டம் – என்று போராட்டம் தான்! மாகாண தலைவர், செயலாளர் பதவி கட்சியில் கிடைத்ததற்காக அவர் திருப்தி...

திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சி மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக திருவெறும்பூர் தி.மு.க. தொழிற்சங்கக் கட்டிடத்தில் 29.12.2013 அன்று ஒரு நாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட கழக அமைப்பாளர் குணாராஜ் அறிமுக உரை யாற்றினார். திருச்சி, பெரம்பலூர் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் பயிற்சியில் பங்கேற்று, கேள்விகளை எழுப்பி, உரிய விளக்கங்களைப் பெற்றனர். முனைவர் ஜீவா, ‘உலக மயமாக்கல்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் மதிமாறன், ‘பெரியார்-அம்பேத்கர்’ என்ற தலைப்பிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியார் இயக்கம் எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முனைவர் ஜீவா உரையின் சுருக்கம்: உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று உலகமெங்கும் பரவிவரும் கொள்கை, இந்தியாவில் சமஸ்கிருதமயமாக்கலையும் சேர்த்துக் கொண்டு மக்களை சுரண்டி வருகிறது. 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, இந்தியா ‘உலகமயமாக்கல்’  என்ற வலைக்குள் சிக்கியது. டங்கல் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அதன்படி, அன்னிய நாட்டு உற்பத்திகளை...

நம்மாழ்வார் முடிவெய்தினார்

நம்மாழ்வார் முடிவெய்தினார்

வேளாண் துறையில் பன்னாட்டு ஊடுருவலை எதிர்த்தும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் அரசுப் பதவிகளை உதறிவிட்டு, மக்களோடு மக்களாக இணைந்து போராடிய நம்மாழ்வார் (75) 30.12.2013 திங்கள் கிழமை அன்று முடிவெய்தினார். செயற்கை உரங்களற்ற இயற்கை விவசாயத்தை மக்களிடையே பரவச் செய்வதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். கிராமப் புத்துருவாக்கம், கிராம வாழ்க்கை போன்ற கருத்துகளில் நமக்கு மாறுபாடு உண்டு என்றாலும்,  அவரது எளிமையும், அர்ப்பணிப்பு உணர்வும் போற்றத் தகுந்தது. வேளாண் துறைகளையும் கடந்து ஈழத் தமிழர்களுக்கும் மனித உரிமைக்கும் குரல் கொடுத்து வந்தவர் நம்மாழ்வார். திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது பெரியார் முழக்கம் 02012014 இதழ்

சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

கறுப்பினப் போராளி நெல்சன் மண்டேலா, பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம், மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மந்தைவெளியில் 27.12.2013 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜான், மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், வழக்கறிஞர் துரை, அருண், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். கறுப்பர் இனத்தின் மீதான நிற ஒதுக்கல் என்ற அடிமைத்தனத்துக்கு எதிராக போராடி, 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு, உலக நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக, விடுதலைப் பெற்று, வெள்ளை நிறவெறி அரசின் இனஒதுக்கல் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த மண்டேலா வின் போராட்ட வாழ்க்கையை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார் ரிவோலியா. நீதிமன்றத்தில் மண்டேலாவின் பிரகடனம், எந்த இனமும் மற்றொரு இனத்துக்கு அடிமையாவதை எதிர்த்தது. கறுப்பர், வெள்ளையர் என்ற இரு பிரிவினரும் சம உரிமைகளோடு வாழக்கூடிய ஒரு ஜனநாயக தாராள சுதந்திரக் கொள்கையையே அவர் வலியுறுத்தினார். வெள்ளை நிறவெறி ஆட்சி திணித்த இன ஒதுக்கல்...

தூற்றலுக்கும் ஆத்திரத்துக்கும் ஆளானேன்: பெரியார்

தூற்றலுக்கும் ஆத்திரத்துக்கும் ஆளானேன்: பெரியார்

பெரியார் தனது எதிர்நீச்சல் பயணம் குறித்து செய்துள்ள சுயமதிப்பீடு இது. வாழப்போவது இன்னும் சிலகாலம்தான் என்று எழுதும் பெரியார், அதற்குப் பிறகு 45 ஆண்டுகாலம் சமுதாயத் துக்காகவே உழைத்திருக்கிறார். “பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், ‘குடி அரசி’னாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித் தேன். அரசியல் தலைவர் என்பவர்களைக் கண்டித் தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலவர்கள் என்பவரைக் கண்டித்தேன். மதச் சடங்கு என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன். கோவில் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். சாமி என்பதைக்  கண்டித்திருக்கிறேன். சாத்திரம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். வேதம் என்று சொல்வதைக்  கண்டித் திருக்கிறேன்.  பார்ப்பனீயம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். சாதி என்பதைக்  கண்டித்திருக்கிறேன். அரசாங்கம் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். நீதி ஸ்தலம் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். நியாயாதிபதி என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக் கிறேன். ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். தேர்தல்...

மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு

மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு

மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்வு 30.12.2013 திங்கள் மாலை 6.30 மணியளவில் புத்தகச் சோலை மேல் தளத்தில் உள்ள பெரியார் அரங்கில் சிறப்புடன் நடந்தது. கழக மாவட்டத் தலைவர் மா.மகாலிங்கம் தலைமை தாங்கினார். டி.பன்னீர்செல்வம் (ம.தி.மு.க.), வழக்கறிஞர் வேலு. குபேந்திரன் (வி.சி.), சுப்பு மகேசு (தமிழர் உரிமை இயக்கம்), வழக்கறிஞர் ஜெ. சங்கர் (கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), தனவேந்திரன் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), எஸ். சுந்தர் (உழைக்கும் விவசாயிகள் இயக்கம்), ந. கலிய பெருமாள் (திருக்குறள் பேரவை) ஆகியோர் உரையைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆவணப்படம் குறித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்கள் மீதான வழக்குகளின், உச்சநீதிமன்ற விசாரணைகள் குறித்தும், ராஜீவ் கொலை வழக்கில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமை குறித்தும், அரிதிலும் அரிதான வழக்குகளை தீர்மானிப்பதில் நீதிமன்றங்களில் நடக்கும் குழப்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார். தொடர்ந்து ஆவணப்...

தோழர்களின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை போடுகிறது

தோழர்களின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை போடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், மக்கள் சந்திப்புத் திட்டத்தின் கீழ் முனைப்போடு மக்களை சந்தித்து, கழகத்தின் செயல்பாடுகளை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, 10 ரூபாய் நன்கொடை திரட்டும் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் தோழர் சிவானந்தம்  600க்கும் அதிகமான மக்களை சந்தித்துள்ளார். மக்கள் ஆதரவு தருவதாகவும், கொடுக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாக மக்களை சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். முதல் தவணையாக ரூ.5000, பொருளாளரிடம் கொடுத்துள்ளார். பவானியில் தோழர் வேல்முருகன், மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடர்ச்சியாக செய்து வருகின்றார். தி.க. தலைவர் வீரமணி தாக்கப்பட்டபோது, கண்டனம் தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறையை பாராட்டியதோடு உண்மையான பெரியாரியக்கம் என தெரிவித்து தோழர்கள் நன்கொடை அளித்தனர். கோபி கோட்டாம்பாளைய தோழர் கார்த்திக்,  திருப்பூர் பேருந்து நிலையத்தில் 1 மணி நேரத்தில் 100 பேரை சந்தித்து முடித்தார். மேலும் நன்கொடை ரசீது புத்தகம் கேட்டு பொறுப்பாளர்களிடம் தொலைபேசியில் பேசினார். திருவாரூரில் காளிதாஸ், செந்தமிழன், முருகன் ஆகிய தோழர்கள்...

2 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் கழகத் தோழர்கள்

2 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் கழகத் தோழர்கள்

ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை கைது செய்து, இரண்டு மாதங்கள் உருண் டோடி விட்டன. சேலம் சிறையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்கள் கிருஷ்ணன், அருண் குமார், அம்பிகாபதி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 2 ஆம் தேதி விடியற்காலை தோழர் கொளத்தூர் மணி, அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 30 ஆம் தேதி மற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 29 ஆம் தேதி சென்னையில் தோழர்கள் உமாபதி, இராவணன், மாரிமுத்து, மனோகரன் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதங்களாகவும் தீர்மானங்களாகவும் வலியுறுத்திய கோரிக்கையை கழகத் தோழர்கள் வலியுறுத்தினால் அது தேசப் பாதுகாப்பு என்ற குற்றமாகி விடுகிறது. இது ஜெயலலிதா ஆட்சியின் இரட்டை வேடம்!...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

12 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.   – செய்தி அப்படியா? 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி எல்லாம் விரிவாக அலசியிருப்பாங்க. திருப்பதி, திருமலையில் அடிக்கடி கம்ப்யூட்டர் கோளாறு ஏற்படுவதால், பக்தர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.  – ‘தினமலர்’ செய்தி இதை ‘ஏழுமலையான்’ கவனத்துக்குக் கொண்டு செல்லலாம் என்றால் அதற்கும் ‘மின்னஞ்சல்’ வேலை செய்ய வேண்டுமே! என்னதான் செய்வது? உ.பி.யில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும்.   – மோடி அமைக்கலாம்! தேர்தல் ஆணையத்தில் ‘ஸ்ரீராமன்’ கட்சியை பதிவு செய்து விட்டீர்களா? எனக்காக வைக்கப்படும் பேனர்களை விழா முடிந்ததும் உடனே அகற்றச் சொல்லி விட்டேன்.  – அதிகாரிகள் கூட்டத்தில் ஜெயலலிதா சரிங்க மேடம். இதையும் ஒரு பேனரில் எழுதி, பேனர்களோடு பேனர்களாக வைத்து விடலாம். ஆம் ஆத்மி கட்சித் தலைவரான கேத்ரிவால் என்ற சாதாரண மனிதரை முதல் வராக்கியது காங்கிரஸ்.  – அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பெருமிதம் காங்கிரஸ் தனிமைப்பட்டு...