Tagged: ஜெயேந்திரர்

நீதிபதிக்கு இலஞ்சப் பேரம்: ஜெயேந்திரர் சிக்குவாரா?

நீதிபதிக்கு இலஞ்சப் பேரம்: ஜெயேந்திரர் சிக்குவாரா?

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? அவருக்கும் நீதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக புதுச்சேரி, தமிழக அரசுகள் இன்று விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சி ஜெயேந்திரர், ரவி சுப்பிர மணியம், ரகு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி மாநில அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதியும், ஜெயேந் திரரும் தொலைபேசியில் பேசிய தாக உரையாடல் ஒன்று வெளியானது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் கூடுதல் காவல் துணை ஆணையர் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....

சிறப்பு வினா… விடைகள்…

சிறப்பு வினா… விடைகள்…

சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன், விஜயேந்திரன் விடுதலை.  – செய்தி ‘ஆன்ம விடுதலை’ கிடைக்கிறதோ இல்லையோ; இந்த ‘பூத’ உடலுக்காவது விடுதலை கிடைத்ததே! நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டபோது ஜெயேந்திரர் முகம் இறுக்கத்துடன் காணப் பட்டது. விஜயேந்திரர் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். – செய்தி அப்படி என்ன சிந்தித்துவிடப் போகிறார்கள்? போயும் போயும் ஒரு ‘சூத்திர’ நீதிபதி நம்ம ‘தலைவிதி’யை நிர்ணயிக்கிறானே என்று சிந்தித்திருப்பார்கள்! தீர்ப்பு வெளிவந்தவுடன் செய்தியாளர்கள், ஜெயேந்திரனிடம் பேச முற்பட்டபோது அவர் கையை மட்டும் அசைத்தார். ‘சுவாமிகள் மவுனவிரதம்’ இருப்பதாக சீடர்கள் தெரி வித்தனர்.  – செய்தி மவுன விரதம் இருப்பதாக – சாமிகள் சீடர்களிடம் கூறியிருப்பார் போல! தீர்ப்பு வந்தவுடன் ஜெயேந்திரர் புதுச்சேரி யிலிருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து காரில் திருச்செந்தூர் போய் சாமி தரிசனம் செய்தார்.  – செய்தி ஆதி சங்கரர் நடந்தே போனார்; அவரது ‘வாரிசு’ தனி விமானத்தில் பறக்கிறது. பாரத வரலாற்றில் மகான்கள் தங்கள் தவவலிமையில் இன்னல்களைக்...