Tagged: ஜாதிவெறி

ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்!

ஜாதிவெறி தலைதூக்கும் தமிழகம்!

இந்தியாவிலேயே ஜாதிய மோதல்கள் நடப்பதில் இரண்டாவது இடத்துக்கு தமிழகம் வந்து விட்டது. இது தமிழகத்துக்கே அவமானம். தேசிய குற்றப் பதிவு ஆவணம் (நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ) 2015ஆம் ஆண்டுக்கான  அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜாதிய மோதல்கள் நடப்பதில் முதலிடத்தில் உ.பி.யும், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் பீகாரும், நான்காவது இடத்தில் ஜார்கண்ட் மாநிலமும் இடம் பிடித்துள்ளன. 2015இல் தமிழகத்தில் 426 ஜாதிய மோதல்கள் நடந்துள்ளன. உயிரிழந்தோர் 578 பேர். உ.பி.யில் நடந்த 724 மோதல்களில் உயிரிழந்தோர் 808;. பீகாரில் 258 மோதல்களில் உயிரிழந்தோர் 403; 2014ஆம் ஆண்டைவிட தமிழகத்தில் ஜாதிய மோதல் 100 மடங்கு அதிகரித்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2014இல் நடந்த 211 மோதல்களில் உயிரிழந்தோர் 257 பேர். தமிழர் சமூகத்தில் ஜாதிய வகுப்புவாத வெறியூட்டப்படுவது ஆபத்தானது என்று இது குறித்து ‘டிடி நெக்ஸ்ட்’ ஆங்கில நாளேடுக்கு அளித்த பேட்டியில், ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன், சமூக ஆய்வாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ்...