Tagged: கோபி

திப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது!

திப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது!

கோபி கழக மாநாட்டில் அப்துல் சமது ஆற்றிய உரை கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) இன்றைக்கு ‘பாரதமாதா கி ஜே’ எனும் கோசம் போடும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக் கும்பலை பார்த்துக் கேட்கின்றேன், இந்த பாரதமாதா அடிமை சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்தபோது அதை உடைப்பதற்கு நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட போரிட்டவர்களில் எத்தனை பேர் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக்கும்பல்கள்?  ஒருவர் கூட இல்லையே! விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ் கும்பல், பார்ப்பனக் கும்பல் இன்றைக்கு இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணமான பார்ப்பனீயம் ஒடுக்கப்பட்டிருக்கிறதா அல்லது நசுக்கப்பட்டிருக்கிறதா? எனக் கேட்கிறோம்.  இந்த கும்பலுக்குதான் இன்றைக்கு தேசபக்தி பீறிட்டு கொண்டு வருகிறது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல காட்டிக்கொடுத்தது...

தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு!

தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு!

சென்ற இதழ் தொடர்ச்சி எச். ராஜா, இராம. கோபாலன், சுப்பிரமணிய சாமி பார்ப்பனர்கள் தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்க உருவாக்கிய குறுந் தகட்டை தமிழக அரசு தடை செய்திருக்கிறது என்ற தகவலை அப்துல் சமது வெளியிட்டார். கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) மராட்டியத்தில் கோவிந்த் பன்சாரே என்கிற பொதுவுடைமை இயக்கத் தலைவர், எழுத்தாளர் இருந்தார்.  அவரை நடைப்பயிற்சியின் போது சுட்டுக் கொன்றது பார்ப்பன காவிக்கும்பல். எதற்காக இந்த படுகொலை நடந்தது என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ‘யார்  இந்த சிவாஜி?’ என்ற ஒரு புத்தகத்தை கோவிந்த் பன்சாரே எழுதினார். சிவாஜி என்று சொன்னால் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு மன்னர். சத்ரபதி சிவாஜி, முஸ்லீம்களுக்கு எதிராகக் களமாடியவர்; இந்துக்களின் தலைவர்; அவுரங்கசீப் போன்ற...

பிப்ரவரி 27, 28இல் மதுரை, கோபியில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்

பிப்ரவரி 27, 28இல் மதுரை, கோபியில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்

மதுரையில் பிப்.27 அன்றும், கோபியில் பிப்.28 அன்றும் திராவிடர் விடுதலைக் கழகம், பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகளை நடத்துகிறது. ஏற்கெனவே ஈரோடு, சென்னை, சேலம், சங்கராபுரத்தில் கழகம் மாநாட்டை நடத்தி முடித்துள்ளது. 27ஆம் தேதி மதுரை ஓபுளா படித்துறையில் மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எஸ்.டி.பி.அய். கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித் தமிழர் பேரவை இரா. செல்வம் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் வழியாக மாநாட்டுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. கோபியில் பிப்.28 மாலை 4 மணியளவில் பெரியார் திடலில் மாநாடு, டி.கே.ஆர். குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அப்துல் சமது, செந்தலை ந. கவுதமன் ஆகியோர்...

கோபியில் காவல்துறை தடைகளைத் தகர்த்து, பார்ப்பன மத சூழ்ச்சிகளை தோலுரித்த கழக மாநாடு

பார்ப்பன கும்பல் தங்களது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள கல்வியை காவி மயமாக்கி சமஸ்கிருதத்தைத் திணித்து,இந்துத்துவ போர்வையில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குஎதிராக சதிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஜாதி அமைப்பே இந்துமதத்தின் அடிப்படை தத்துவமாகும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்துக்கள் தான் என கூறும் பார்ப்பனர்கள் அவர்களை பல்வேறு ஜாதிகளாக கூறுபோட்டு அவர்களின் உரிமைகளை பறிக்கின்றனர். இந்த நாட்டில் ஜாதியம் தான் பார்ப்பனியம் என சரியாக பிளந்து காட்டியவர் பெரியார். இந்த சமூகத்தில் ஜாதியமைப்பை நியாயப்படுத்தும் பாசிச தத்துவமான பார்ப்பனியத்தின் கோரமுகத்தை வெகு மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் ஈரோடு,சேலம், சென்னை, சங்கராபுரம், மதுரை, கோபி செட்டிபாளையம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன. ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில், ‘மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு’ பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோபி...