Tagged: குமுதம் ரிப்போர்ட்டர்

இன விடுதலைப் போராளி மண்டேலா – விடை பெற்றார்!

இன விடுதலைப் போராளி மண்டேலா – விடை பெற்றார்!

கறுப்பினப் போராளி, இன விடுதலை இயக்கங்களின் நாயகர், சிறைப் பறவை மண்டேலா, அம்பேத்கர் முடிவெய்திய அதே டிசம்பர் 6 ஆம் நாளில் விடைபெற்றுக் கொண்டுவிட்டார். “வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதியான வழியில்தான் எங்கள் போராட்டங்களை தொடங்கினோம். ஆனால், அரசு வன்முறையை ஏவியது. வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்பதால் நாங்களும் எங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொண்டோம். நாங்கள் தேர்ந் தெடுத்தது வன்முறையைத் தானே தவிர, பயங்கரவாதத்தை யல்ல” என்று கூறிய மண்டேலா, பிறகு அந்த வன்முறைப் போராட்டத்தையும் கைவிட் டார். வரலாறாகிப் போன அந்த விடுதலை வீரர் பற்றிய சுருக்கமான வரலாறு இதுதான்: (நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்) 18 ஜூலை 1918 அன்று தென்னாப்பிரிக்காவின் வெஸோ என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ரோலிலாலா மண்டேலா. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் காட்லா. பள்ளி ஆசிரியருக்கு ரோலிலாலா வாயில் நுழையவில்லை போல. “இனி உன் பெயர் நெல்சன்” என்று சொல்லி விட்டார். கருப்பின மக்களை...

அன்புமணி மீதான வழக்கு என்ன?

அன்புமணி மீதான வழக்கு என்ன?

அன்புமணி மீதான சி.பி.ஐ. வழக்குகள் குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம். “அவர் மீது முதல் வழக்கு, ம.பி. மாநிலம் இந்தூரில் பதிவு செய்யப்பட்டது. இங்கு கடந்த 2007 ஆம் ஆண்டு ‘இன்டெக்° மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரில் சுரேஷ் சிங் என்பவர் புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கினார். 2008-2009 ஆம் கல்வியாண்டில் இந்தக் கல்லூரி எம்.பி.பி.எ°. இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக, இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பித்து. இந்திய மருத்துவக் கவுன்சில் குழு அங்கு சென்று ஆய்வு செய்து, ‘கூடுதல் மாணவர்களை சேர்க்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என அறிக்கை கொடுத்துவிட்டது. பின்னர் சுரேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதன் பேரில் நீதிமன்றமே ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய, அந்தக் குழுவும் முதல் குழுவைப் போலவே அறிக்கை தாக்கல் செய்தது. இதன் பிறகுதான் சுரேஷ் சிங், அன்புமணியின் இலாகாவை நாடியிருக்கிறார். மத்திய சுகாதாரத்...