Tagged: இராவண லீலா

‘இராம லீலா’வுக்கு எதிரான அசுரர்களின் கலகக் குரல்!

அறிவியல் ரீதியிலான ஆய்வுகளே இல்லாத காலத்திலேயே  பார்ப்பன புராணங்களை வாசித்து, தனது சொந்த புரிதலின் அடிப்படையில் அரசியல் உள்ளடக்கத்தை வழங்கியவர் பெரியார். பார்ப்பனியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அறிவுத் தளத்தோடு நின்றுவிடவில்லை. மக்கள் மத்தியில் இயக்கங்களாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன. ‘தேவ-அசுர’ப் பேராட்டத்தில் பார்ப்பனியத்துக்கு எதிரான ‘அசுர மரபு’ இன்னும் உயிர்த் துடிப்போடு பழங்குடி மக்களிடம் இருப்பதையும், பார்ப்பன மரபுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் நடத்திய மக்கள் இயக்கங்களையும் வரலாற்று பின்புலத்தோடு, படம் பிடிக்கிறது இக்கட்டுரை. அமர், அசுர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஜார்கண்ட் மாநில பழங்குடியினரிலேயே சிறுபான்மை யிலும் சிறுபான்மையினரான அசுர் பழங்குடியினத்த வரின் மொத்த மக்கள் தொகை சுமார் 26,500. அம் மக்கள் இன்றும் தங்களை அசுர வாரிசுகளாகக் கருதிக்  கொள்கின்றனர். அங்கே மகிஷாகர், அசுர்களின் மூதாதையர்., மகிஷன், இராவணன், சம்பூகன் போன்றோரின் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்த வழிந்தோடிய குருதி, தொன்மங்களாகவும் இனக் குழுச் சடங்குகளாகவும் இன்றும் பழங்குடி மக்களின்...

‘இராமன்’ பட எரிப்பு: த.பெ.தி.க. – தி.வி.க. தோழர்கள் கைது

டெல்லியில் ‘இராவணன்’ உருவத்தை எரித்துக் கொண்டாடும் இராமலீலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ‘இராமன்’ படத்தை எரித்து பதிலடி தந்தனர். இராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தின் அருகே இராமன் படம் எரிக்கப்பட்டது. 11 தோழர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழக இணையதளம் பொறுப்பாளர் விஜயகுமார், காஞ்சி தினேஷ்குமார் ஆகியோரும் வழக்கில் இணைக்கப்பட்டு ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர் பெரியார் முழக்கம் 20102016 இதழ்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் ஆந்திராவில் ‘இராவண விழா’

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் அகில இந்திய தலித் உரிமைகள் அமைப்பு ஆண்டுதோறும் இராவணன் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘இராவண விழா’ அக்டோபர் 9ஆம் தேதி விசாகப்பட்டினத்திலுள்ள ‘அம்பேத்கர் பவனில்’ எழுச்சி யுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, தமிழ் நாட்டில் பெரியார் நடத்திய இராமாயண எதிர்ப்பு இயக்கங்களின் வரலாறுகளையும் ‘இராமன்’ எரிப்புப் போராட்டம் மற்றும் ‘இராமலீலா’வுக்கு எதிராக நடத்திய ‘இராவண லீலா’ நிகழ்வுகளையும் விவரித்து விரிவாக ஆங்கிலத்தில் பேசினார். கழகத் தலைவர் உரையை தெலுங்கு மொழியில் பேராசிரியர் பிரக்ஞா மொழி பெயர்த்துக் கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம். “இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவணனின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, இராமாயணம் என்பது வெறுமனே ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்பதை...