Tagged: இராவணன்

இராவணன் – கழக மாநாட்டில் தோழர் மணி அவர்களின் ஆண் குழந்தைக்கு கழக தலைவர் பெயர் சூட்டல்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயண நிறைவுவிழா திருச்செங்கோடு மாநாட்டில் சம்பூகனை கொன்று ஒரு குலத்துக்கு ஒரு நீதி வழங்கியவன் அயோக்கியன் இராமன். தன் எதிரியின் மனைவி தனக்கு அடிமையாக இருந்தும் ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்ற சமூகநீதி காத்தவன் இராவணன் எனக்கூறி தோழர் மணி அவர்களின்மகனுக்கு இராவணன் என்ற பெயர் சூட்டலுடன் இனிதே முடிந்தது மாநாடு “இராவணன்” திருச்செங்கோடு நிறைவு விழா மாநாட்டு மேடையில் மணி – பிரியா இணையரின் ஆண் குழந்தைக்கு ‘இராவணன்’ என்று தோழர் கொளத்தூர் மணி பெயர் சூட்டினார். பெரியார் முழக்கம் 17082017 இதழ்

2 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் கழகத் தோழர்கள்

2 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் கழகத் தோழர்கள்

ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை கைது செய்து, இரண்டு மாதங்கள் உருண் டோடி விட்டன. சேலம் சிறையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்கள் கிருஷ்ணன், அருண் குமார், அம்பிகாபதி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 2 ஆம் தேதி விடியற்காலை தோழர் கொளத்தூர் மணி, அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 30 ஆம் தேதி மற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 29 ஆம் தேதி சென்னையில் தோழர்கள் உமாபதி, இராவணன், மாரிமுத்து, மனோகரன் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதங்களாகவும் தீர்மானங்களாகவும் வலியுறுத்திய கோரிக்கையை கழகத் தோழர்கள் வலியுறுத்தினால் அது தேசப் பாதுகாப்பு என்ற குற்றமாகி விடுகிறது. இது ஜெயலலிதா ஆட்சியின் இரட்டை வேடம்!...