Tagged: ஆந்திர காவல்துறை

முதலாம் ஆண்டு நினைவு மற்றும் தோழமை உறுதி ஏற்பு தினம்

ஆந்திராவில் அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட ”முதலாம் ஆண்டு நினைவு மற்றும் தோழமை உறுதி ஏற்பு தினம்.” கடந்த ஆண்டு இதே ஏப்ரல் 7ந்தேதி ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப் படையால் அநியாயமாய் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்களின் முதலாமாண்டு நினைவும், அவர்கள் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்கான தோழமை உறுதி ஏற்பு நாளும், 7-4-2016 வியாழன் அன்று, திருவண்ணாமலை சாரண சாரணியர் பயிற்சிக் கூடத்தில், மக்கள் கண்காணிப்பகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடந்தது. நினைவேந்தலைத் தொடர்ந்து நடந்த தோழமை உறுதியேற்பு நிகழ்வு மக்கள் கண்காணிப்பின் இயக்குநர் ஹென்றி திபேன் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் கல்விமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். உரைகளில் இது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இனி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டன.  

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி 20 தமிழக கூலி தொழிலாளர்களின் முதலாம் ஆண்டு, தோழமை உறுதி ஏற்பு தினம்

ஆந்திர படுகொலை, ”முதலாம் ஆண்டு தோழமை உறுதி ஏற்பு தினம்.” 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ம்தேதி ஆந்திர மாநில செம்மரகட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால்,கடத்தி சுட்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி 20 தமிழக கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்கான ”முதலாம் ஆண்டு தோழமை உறுதி ஏற்பு தினம்.” நாள் : 07.04.2016, காலை 09.30 இடம் : சாரண சாரணியர் இயக்க கூட்ட அரங்கு, திருவண்ணாமலை. தலைமை : வழக்கறிஞர் ஹென்றி டிபேன், நிர்வாக இயக்குனர்,மக்கள் கண்காணிப்பகம், உரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம், பேராசிரியர் கல்வி மணி, இருளர் பாதுகாப்பு நலச்சங்கம், அ.மார்க்ஸ்,எழுத்தாளர், பேராசிரியர் சரஸ்வதி PUCL, மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். நிகழ்சி ஏற்பாடு : மக்கள் கண்காணிப்பகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்.