Tagged: அறநிலையத் துறை

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

“கூழுக்கு குழந்தைகள் அழும்போது குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகமா?” என்ற கேள்வியை பெரியார் இயக்கம், மக்கள் முன் வைத்தது. முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி சுவரெழுத்து சுப்பையா இதை சுவரெழுத்துகளில் தார் கொண்டு எழுதினார். பக்தியின் பெயரால் பொருள், பணம், நேரம் வீணாக்கப்படும் அவலம் உலகில் இந்த நாட்டைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. கடந்த ஏப்.8ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வந்த ஒரு செய்தி வியப்பிலாழ்த்தியது. சென்னையில் பெசன்ட் நகரில் ‘அஷ்டலட்சுமி’ கோயில் இருக்கிறது. கூட்டம் அதிகம் வரும் கோயில். பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள்; தேங்காய்க்குள் உள்ள ‘இளநீர்’ வீணாக தரையில் ஓடும். பெசன்ட் நகர் குடியிருப்புகளில் வாழும் 50 மூத்த குடிமக்கள் ஒன்று சேர்ந்து இப்படி சிறந்த உணவான இளநீர் வீணாகிறதே என்று கவலைப் பட்டார்கள். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததோடு, தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதப் போவதாகக் கூறுகிறார்கள். முதலமைச்சரே மூடத்தனத்தில் உறைந்து கிடக்கும்போது அவருக்கு கடிதம்...

தில்லை நடராசன் வழக்கு: தீட்சதர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆட்சி சதி

தில்லை நடராசன் வழக்கு: தீட்சதர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆட்சி சதி

28.11.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதம் குறித்த சுருக்கமான குறிப்புகள்: சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறை 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோற்ற தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, சுப்பிரமணிய சாமி இந்த வழக்கில் இணைத்துள்ளார். கோயிலை அறநிலையத் துறை மேற்கொண்டதற்கு ஆதரவாக ஆறுமுகசாமி (சிவனடியார்), வி.எம். சவுந்தரபாண்டியன் (சிதம்பரம்) ஆகியோர் வழியாக மனித உரிமை பாதுகாப்பு மையமும் சத்தியவேல் முருகனாரும் இவ்வழக்கில் தலையிட்டுள்ளனர். இவ்வழக்கு சௌகான், பாப்டே ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நவம்பர் 28 அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களான தீட்சிதர்கள் சார்பில் யாரும் வாதிடவில்லை. மாறாக, சுப்பிரமணிய சாமி வாதத்தை துவக்கி வைத்தார். சுப்பிரமணிய சாமியுடைய வாதங்களின் சுருக்கம்: “பிராமணர்கள்” எனப்படுவோர் பிறப்பினால் தோன்றுபவர்களல்ல. குணம் தான் ஒருவர் “பிராமணரா” என்பதைத் தீர்மானிக்கிறது என்று கீதை கூறுகிறது. அதனால்தான்...

அறநிலையத் துறையை ஆட்டிப் படைக்கும் கேரள ஜோதிடர்

அறநிலையத் துறையை ஆட்டிப் படைக்கும் கேரள ஜோதிடர்

இந்து அறநிலையத் துறை, பல ‘புரட்சி’களை நடத்தி வருகிறது. “அறநிலையத் துறையின் செயல்பாடுகளில் மிஞ்சி நிற்பது கடவுள் நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? அம்மா நம்பிக்கையா?” என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் போலிருக்கிறது. கேரள நம்பூதிரிப் பார்ப்பன சோதிடர் ஒருவர் ஆலோசனைப்படி அறநிலையத் துறை தொன்மையான கோயில்களை இடித்து வருகிறதாம். நாமக்கல் மாவட்டம் திருமான்குறிச்சியில் உள்ள 100 ஆண்டுகால பழமையான மருதகாளி அம்மன் கோயில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலுள்ள 330 ஆண்டு பழமையான பெரிய நாயகி அம்மன் கோயில், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்திலுள்ள மாரியம்மன் கோயில் என்று கோயில்களை அறநிலையத்துறையே இடித்துத் தள்ளுகிறது. இந்தக் கோயில்கள் ‘அபசகுணமாக’ இருப்பதாக கேரள பார்ப்பன ஜோதிடர் கூறிய ஆலோசனைப்படி இந்த இடிப்பு நடக்கிறதாம். ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த ஒரு பார்ப்பனர் உயர்நீதிமன்றத்தில் இப்படி இடிப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் ‘அபசகுணம்’ என்ற காரணத்தைக்...