கடல்தாண்டும் ‘பிராமணர்கள்’ அர்ச்சகர்களாக முடியாது -உயர்நீதிமன்றம்!

ஆகம சாஸ்திர விதிகள், சிருங்கேரி சாரதா பீட வழிகாட்டுதல்கள் மற்றும் கடந்த காலத்தில் மாநில அறநிலையத்துறையால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகியவற்றை கடுமையாக அமல்படுத்த உத்தரவிடக்கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதை உயர்நீதிமன்ற நீதிபதி நிம்மகடா வெங்கடேஸ்வரலு விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில், விதிகளின்படி அர்ச்சகர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அவசர தேவைக்காக சென்றாலும், திரும்பி வந்தவுடன் கருவறையில் பூஜைகள் செய்யும் உரிமையை இழந்துவிடுவார்கள் என்றார். சிருங்கேரி பீடத்தின் விதிமுறையின்படி, மூன்று நாள் சந்தியா வந்தனத்தை கடைபிடிப்பவர்கள், வேதங்களை படிப்பவர்கள், குருவின் மந்திரங்களை உச்சரிப்பவர்கள் மற்றும் கடுமையான உணவு விதிகளை பின்பற்றுபவர்கள் மட்டுமே கருவறையில் பூஜைகள் செய்ய தகுதியுடையவர்கள். பாரம்பரியத்திற்கு மாறாக வெளிநாடு சென்று, சவரம் செய்து, தலைமுடியை வெட்டிக் கொண்டவர்களும் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை கேட்டறிந்த நீதிபதி அமர்வு, இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துமாறு அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையருக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதன்மூலம், மாநிலத்தில் உள்ள கோயில்களில் வெளிநாடு சென்று வந்த அர்ச்சகர்கள் கோயில் கருவறைக்குள் பூஜைகளை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் கடல்தாண்டக்கூடாது என்பது சனாதனம். இப்போது பார்ப்பனர்கள் கடல்தாண்டி சென்று அங்கே பார்ப்பனியத்தை பரப்புகிறார்கள்.
பெரியார் முழக்கம் இதழ் 30042026

You may also like...