தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம் தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு: தமிழ்நாடு கடனில் தவிக்கிறதா? எடப்பாடிக்கு மறுப்பு
தமிழ்நாட்டு தற்போது 5 இலட்சம் கோடி கடன் இருப்பதாக கதை சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது சகாக்கள். 2011-2020 வரை 9 ஆண்டுகள் எடப்பாடி ஆட்சியின் கடனே வாங்காது போலவும் திமுக 5 ஆண்டுகளில் கடன் வாங்கி குவிப்பது போல் பேசி வருகிறார்கள்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா? 2006-2011 திமுக ஆட்சியில் ரூ.43,893 கோடி கடன்; 2011-2016 அதிமுக ஆட்சியில் ரூ.1,09,717 கோடி கடன். அதாவது முந்தைய ஆட்சியை விட 150 விழுக்காடு அதிகம் கடன் வாங்கியது அதிமுக ஆட்சி தான். எடப்பாடி முதலமைச்சராக இருந்த 2016-2021 அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் ரூ.2,74,436 கோடி இது முந்தைய ஆட்சியை ஒப்பிட்டு பார்த்தால் 150 விழுக்காடு அதிகம் கடன் வாங்கியது எடப்பாடி ஆட்சி தான். 2021 ஆண்டு அறிக்கையின் படி தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.4,85 இலட்சம் கோடி.
தற்போது திமுக ஆட்சி (2021-2026) ஆண்டில் வாங்கப்பட்ட கடன் 4,67,457 இலட்சம் கோடி. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தால் 70 விழுக்காடு தான் கடன்.
ஆக கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கட 150 விழுக்காடாக இருந்தது. தற்போது திராவிட மாடல் ஆட்சியில் 70 விழுக்காடாக கடன் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மொத்த வளர்ச்சியில் கடன் எவ்வளவு என்று பார்த்தால் கடந்த அதிமுக ஆட்சியின் இடைக்கால பட்ஜெட்டில் 26.69% விழுக்காடு. திமுக ஆட்சியில் ஜிடிபி விகிதப்படி 26.43 விழுக்காடு. ஆகவே கடன் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பது தான் உண்மை. ஒரு மாநிலத்தின் கடன் என்பது அந்த மாநிலத்தின் பலவீனத்தை காட்டக் கூடிய குறியீடு அல்ல. கடன் என்பது பொருளாதாரத்தின் ஒரு அங்கம். குறைவான கடன் வாங்கினால் பொருளாதார புலியும் அல்ல! அதிக கடன் வாங்கினால் அவமானம் என்று கணக்கு செய்தால் அதானி, அம்பானியை விட சாமானிய மக்கள் தான் பெரும் பணக்காரர்கள்.
பெரியார் முழக்கம் இதழ் 16042026
