பாஜகவின் ஊழல் ஒழிப்பு நாடகம்
ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடும் பாஜக ஊழல் ஒழிப்பு உத்தமர்களின் ஊழல் பட்டியல் இதோ:
ஜார்கண்ட் மாநில நிலக்கரி ஊழலில் வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்த திலீப் ராய் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
கர்நாடகத்தில் டெண்டர் முறைகேட்டில் கர்நாடக பாஜக அமைச்சர் நேரு கெலேகர் 2 ஆண்டுகள் சிறை.
2013 வியாபம் ஊழலில் உச்ச நீதிமன்றம் சி.பி.அய் விசாரணைக்கு உத்தரவிட்டது. ம.பி பாஜக அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா 18 மாதம் சிறை.
1 கோடி 37 லட்சம் ரூபாய் ஊழல் வழக்கில் மிசோரம் பாஜக எம்.எல்.ஏ புத்த தன்சக்மா உட்பட 12 பாஜகவினருக்கு 1 ஆண்டு சிறை.
2001-ல் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் வாங்கும் ஊழலில் பாஜக தலைவர் பங்காரு லஷ்மணனுக்கு 7 ஆண்டு சிறை.
பெங்களூர் மெகா சிட்டி ஊழலில் கர்நாடக பாஜக அமைச்சர் யோகேஸ்வரர் மீதான ஊழல் வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
ஒரு கோடி ரூபாய் மீன்வள ஒப்பந்த மோசடி வழக்கில் மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த குஜராத் அமைச்சர்கள் பர்ஷோத்தம்பாய் ஓதவ்ஜிபாய் சோலங்கி, திலீப் சங்கனி ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
103 கோடி வங்கி மோசடி வழக்கில் மகாராஷ்டிரா பாஜக தலைவர் மோஹித் கம்போஜ் மீது சிபிஅய் விசாரணை நடைபெற்று வருகிறது.
40 லட்சம் லஞ்சம் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ குருபரக்க்ஷாவுக்கு சிறை.
18 கோடி சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜனார்த்தன ரெட்டி சிறை.
பணி நியமன மோசடி வழக்கில் வங்காளத்தை சேர்ந்த யுவ மோர்ஷா (இளைஞரணி) மற்றும் உள்ளூர் தலைவர் சௌரவ் சவுத்ரிக்கு சிறை
அஸ்ஸாம் காவல்துறை தேர்வு ஊழல் வழக்கில் பாஜக தலைவர் தீபன்தேகாவுக்கு சிறை
மேற்கு வங்காளத்தில் கேஸ் டீலர் ஊழல் வழக்கில் பாஜக தலைவர் ரஞ்சித் பஜுந்தாருக்கு சிறை.
தமிழ்நாட்டில் 2438 கோடி ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் பாஜக உறுப்பினர்கள் ஹரிஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் வழக்கு விசாரணையில் உள்ளனர்.
5000 கோடி நியோ மேக்ஸ் நிதி மோசடி வழக்கில் மதுரை பாஜக உறுப்பினர் வீரசக்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்ராந்த் போர்க்கப்பல் மீது 57 கோடி ஊழலில் மகாராஷ்டிரா பாஜக தலைவர் கிரி சோமையா கைது.
கர்நாடக காவல்துறை தேர்வு ஊழல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏ திவ்யா சிறை
பண மோசடியில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ குமரசாமிக்கு 4 ஆண்டுகள் சிறை.
பீகாரில் சுதாபுரி மாவட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக பாஜக எம்.எல்.ஏ ராம் நரேஷ் யாதவ் 10 ஆண்டு சிறை. இந்தக் கலவரத்தில் 5 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
உ.பி உனாவ் சிறுமி வன்கொடுமை மற்றும் தந்தை கொலை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் 10 ஆண்டு சிறை.
சிறுமி பாலியல் வழக்கில் உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ ராம் துலேவுக்கு 25 ஆண்டுகள் சிறை.
கிரிமினல் வழக்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம் சங்கர் கட்டாரியா 2 ஆண்டுகள் சிறை.
பல்வேறு ஊழல் மோசடி வழக்கில் சிக்கி உள்ள கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தற்போது பிணையில் உள்ளார்.
சி.ஏ.ஜி அறிக்கை மோடி ஆட்சியில் பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது.
இப்படி ஊழல் ஒருபுறம், கிரிமினல் வழக்குகள் ஒருபுறம், நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை விற்பனை செய்வது, நாட்டின் இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவார்பபது என்று இந்தியாவை சிதைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இதையெல்லாம் மறைப்பதற்கு மதவாத அரசியலை பயன்படுத்துகிறார்கள்.
– மனோ தங்கராஜ் (தி.மு.க)
பெரியார் முழக்கம் இதழ் 09042026
