சேலம் மாநாடு: களப்பணிகளில் தோழர்கள் தீவிரம்

ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டையொட்டி சேலம் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் மார்ச் 04 ஆம் தேதி கொங்கனாபுரம் பகுதியில் கடைவீதி வசூல் மேற்கொள்ளப்பட்டது.

முதல்நாள் வசூல் ரூ.5490/- ஆனது. மாநாட்டுத் துண்டறிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாநாட்டையொட்டி சுவரெழுத்துப் பணி களையும் சேலம் மாவட்டக் கழகத் தோழர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையத்தில் மாவட்டத் தலைவர் பா.இராமசந்திரன்  ஏற்பாட்டில் சுவரெழுத்துப் பணிகள் நடைபெறுகிறது.

மாநாட்டு நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டு வருகிறது.  மாநாட்டு நிதி திரட்டலுக்கான நன்கொடை சீட்டுகள் மாவட்டக் கழகங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  தோழர்கள் குடும்பத்தோடு திரள ஆயத்தமாகிறார்கள்.

மாநாட்டின் தலைப்பையும் கருப்பு-சிவப்பு-நீலம் இணைந்து நிற்பதையும் பல்வேறு அமைப்புகள் வரவேற்றன.

பெரியார் முழக்கம் 09032023 இதழ்

You may also like...