ஜாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் தெருமுனைக்கூட்டம் சென்னை 11092017

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதி சார்பாக…

ஜாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரனின் நினைவு நாள்….பெரியாரின் பிறந்தநாள் தெருமுனைக்கூட்டம் தோழர்.ஜா.உமாபதி அவர்கள் தலைமையில் நேற்று (11.09.2017) மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

இதில், கூட்டத்தின் தொடக்கமாக தோழர்.நாத்திகன் மற்றும் தோழர்.கீர்த்தி அவர்களும் ஜாதி ஒழிப்பு பாடல்களையும், பகுத்தறிவு பாடல்களையும் பாடினார்.

தெருமுனைக் கூட்டத்தில் இமானுவேல் சேகரின் ஜாதி ஒழிப்பு போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், அவரது படுகொலை குறித்தும் பல்வேறு நிகழ்வுகளை குறித்தும் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), தோழர்.ந.அய்யனார்(தலைமைக் குழு உறுப்பினர்), தோழர்.வழக்கறிஞர் துரை அருண்(சென்னை உயர்நீதிமன்றம்) மற்றும் தோழர்.அன்பு தனசேகரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக, சிறப்புரையாற்றிய தோழர்களுக்கும், வந்திருந்த தோழர்களுக்கும், காவல் துறைக்கும், தெருமுனைக் கூட்டத்திற்கு உறுதுணையாக இருந்த தோழமை தோழர்களுக்கும் தோழர்.சுகுமாறன் (சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவுச் செய்தார்.

%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d

You may also like...