ஈரோடு வடக்கு மாவட்டக் கலந்துரையாடல்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 10.09.2017 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது. மாநில வெளியீட்டு செய லாளர் இளங்கோவன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் செப். 17 அய்யா பிறந்தநாள் விழாவை மாவட்ட கழகத்தால் சிறப்பாக சத்தியமங்கலத்தில் துவங்கி மாவட்ட முழுவதற்கும் அனைத்து பகுதியில் கழக கொடியினை ஏற்றுவது; கோபி நகர,ஒன்றிய கழகத்தின் சார்பாக 24.09.2017 அன்று கொடியேற்று விழா நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா செலவிற்காக மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் மகன் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் தனது உண்டியல் சேமிப்பு தொகையாக ரூ. 750/-ஐ மாவட்ட செயலாளர் வேணுகோபாலிடம் வழங்கினார்.

பெரியார் முழக்கம் 14092017 இதழ்

You may also like...