மாட்டுக்கறி உண்ணும் விழா – இந்துமகா சபாவின் அறிக்கைக்கு ஈரோடு மாவட்ட கழகம் பதிலடி

அன்பார்ந்த தமிழர்களே ! கீழ்கண்ட அழைப்பை பாருங்கள்.
_____
அகில பாரத இந்து மகாசபாவின் அறிக்கை :

வரும் 23:04:2017 அன்று சேலத்தில் கொளத்தூர் மணியின் பெரியார் திராவிடர் விடுதலை கழகம் நடத்த இருக்கின்ற மாட்டுக்கறி உண்ணும் விழாவைக் கண்டித்து அன்றைய தினமே பெரியாரின் சிலைக்கு அவர் பிறந்த மண்ணில் (ஈரோடு) செருப்பு மாலை அணிவிக்கும் விழா…. அழைக்கிறோம்..
உணர்வுள்ள இந்துக்களே பெரியார் திராவிடர் கழகத்தை விரட்டியடிக்க ஒன்று கூடுவோம்….

இடம் : ஈரோடு
நாள் : 2⃣3⃣–0⃣4⃣–2⃣0⃣1⃣7⃣

தலைமை:

காவிப்படைத் தளபதி
திரு.தொல்காப்பியன் ஜி
மாநிலத் துணைத்தலைவர்,
அகில பாரத இந்து மகாசபா.

அழைக்கின்றார் அகில பாரத இந்து மகாசபாவின் தமிழ் மாநிலத் தலைவர் காவித்தளபதி கலியுலக கல்கி K.இராஜசேகர் ஜி அவர்கள்….

அழைப்பில் மகிழ்வது;
அ.விஜயகுமார்.
மாநில ஊடகப்பிரிவுச் செயலாளர்,
மாவட்டத்தலைவர்,
திருப்பூர் மாவட்டம்

@@@@

வாருங்கள் தமிழர்களே !!

அய்யா தந்தை பெரியாரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கிறார்களாம்… கடும் வெய்யிலில் செருப்பில்லாமல் இருக்கும் அனைவரும் வாருங்கள் ! அய்யா சிலைக்கு போடப்படும் செருப்புகளை எடுத்து இலவசமாக வழங்கப்படும்..!

இப்படிக்கு

ஈரோடு பெரியார் தொண்டர்கள் …!!

You may also like...