பெரியார் தொண்டர் கோபி தோழர் நாகப்பன் மறைவு

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நமது கழக தோழர் மணிமொழி அவர்களின் தந்தையும், நம் கழகத்தோழர் நிவாஸ் அவர்களின் மாமனாரும் ஆன தோழர் நாகப்பன் அவர்கள் கடந்த 12.01.2017 அன்று உடல்நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். அவரின் இறுதி நிகழ்வு உறவினர்களின் பெரும் ஒத்துழைப்புடோடு எந்த  விதமான சடங்குகள் இல்லாமல் கழக மகளிர் முன் நின்று உடல் அடக்கம் நிகழ்வினை செய்தனர்.வீட்டில் இருந்து உடல் அடக்கம் செய்யும் சுடுகாடு வரைக்கும் பெண்களே சுமந்து சென்று உடல்அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்திற்கு பின் கருப்பு, கருமாதிஉள்ளிட்ட எந்த நிகழ்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. தோழரின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் கழக தலைவர் கொளத்தூர் மணி, மாநில அமைப்பு செயலாளர் இரத்தினசாமி,மாநில வெளீயீட்டு செயலாளர் இராம.இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, தபெதிக ஈரோடு மாவட்ட தலைவர் குணசேகரன், திராவிடர் கழகம் யோகனந்தம், இந்திய கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் சோமசுந்தரம்,மா. கம்யூனிஸ்ட் அய்யாவு,மதிமுக மாவட்ட துணை செயலாளர்  வழக்கறிஞர் கந்தசாமி, தாய்தமிழ் கல்வி நிறுவனங்களின் தலைவர் குமணன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர் நிவாஸ் நன்றி கூறினார்.முன்னதாக தோழர் நாகப்பன் அவர்களின் இறுதி நிகழ்வில் உறவுகள்  அவர்க்கு சடங்குகள் செய்ய முற்பட்ட போது தோழர்கள் அதனை தடுக்க அவர்  திராவிடர் கழகத்தில் இருந்த போதுஎழுதி வைத்து சுவரில் மாட்டி இருந்த மரண சாசனம் அட்டை எடுத்து உறவினர் கொடுத்து படிக்க வைத்ததால் அவர்கள் அமைதி ஆயினர். இதன் மூலம் ஒவ்வொரு பெரியார் தொண்டர்கள் வீட்டில் மரண சாசனம் என்பது அவசியம் இருக்க வேண்டும்.-செய்தி நிவாஸ் .

 

இறுதி ஊர்வலம் பகுதி 1

இறுதி ஊர்வலம் பகுதி 2

img_20170117_132550 img-20170113-wa0000 img-20170113-wa0001 img-20170113-wa0011 img-20170113-wa0012 img-20170113-wa0015

 

You may also like...