தாரமங்கலத்தில் ” உஷாரய்யா, உஷாரு .. “ என்னும் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் குறுந்தகடு வெளியீடு

image
1-8-2015 சனிக்கிழமை மாலை 5-00 மணியளவில், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அங்காள பரமேஸ்வரி சமுதாயக் கூடத்தில், ” உஷாரய்யா, உஷாரு .. “ என்னும் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் குறும்படத் திரையிடலும், குறுந்தகடு வெளியீடும் நடந்தது.

image
தோழர் கோகுலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். குறும்படத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, தாரமங்கலம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சின்னாமி பெற்றுக் கொண்டார்.கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கவிஞர் அ. முத்துசாமி, மேட்டூர் முல்லைவேந்தன் மற்றும் பல்துறை சான்றோர் பாராட்டுரைக்குப் பின்னர், திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பாராட்டுரை வழங்கினார்.
image

image
நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர்.

You may also like...

Leave a Reply