மரு.பெரியார் செல்வி அவர்களுக்கு தமிழக ஆளுநர் விருது

அழுத்தமான பெரியாரியல்வாதியும், கோவை KG மருத்துவமனை மருத்துவருமான ‘மரு.பெரியார் செல்வி’ அவர்களுக்கு 25.02.2016 மாலை 6 மணிக்கு கோவை Le Meridian விடுதி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் DOCTOR OF EXCELLENCE என்ற விருதினை தமிழக ஆளுநர் திரு.ரோசைய்யா அவர்கள் வழங்கினார்.

பெரியார் செல்வியை அறிமுகப்படுத்திய KG GROUPS Chairman மரு.பக்தவச்சலம் அவர்கள்
She doesn’t believe in god, but acts like a god என அறிமுகப்படுத்தியதோடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியார் செல்விக்கு பெயர் வைத்ததையும் நினைவு கூர்ந்தார்.

மரு.பெரியார்செல்வி , கவிஞரும்,பொறிஞருமான தோழர் அ.பா.சிவாவின் வாழ்விணையர் ஆவார்

1927751_1708165602800666_8652106114092183636_n

பெரியார் முழக்கம் 10032016 இதழ்

You may also like...