தலைமை அறிக்கை- மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மாவட்டந்தோறும் கீழ்க்கண்ட திட்டப்படி கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர் பங்கேற்கும், கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த கழக செயலவை தீர்மானித்தது.
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை மாவட்ட வாரியாக கழகத் தலைவர்,கழகப் பொதுச்செயலாளர், மாவட்டக் கழகக் கூட்டங்கள் வழியாக நேரில் சந்தித்து கழக அமைப்புகளை மேலும் முனைப்பாக நடத்திடவும் அமைப்புகளை மாற்றி அமைக்கவும், கீழ்க்கண்ட சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு மாவட்டக் கூட்டங்கள் நடக்கும். முதல் கூட்டம் முற்பகல் 10 மணிக்கும், இரண்டாவது கூட்டம் பிற்பகல் 4 மணிக்கும் கீழ்க்கண்ட வரிசையில் தொடங்கும்.

ஜூலை 29 – ஈரோடு (தெற்கு ) – ஈரோடு ( வடக்கு ); ஜூலை 30 – திருப்பூர் -கோவை; ஜூலை 31 – பொள்ளாச்சி – திண்டுக்கல்;ஆகஸ்டு 5 – சேலம் ( மேற்கு ) – சேலம் ( கிழக்கு ); ஆகஸ்டு 6 – நாமக்கல் – கரூர்;ஆகஸ்டு 7 – பெரம்பலூர் – திருச்சி; ஆகஸ்டு 12 – திருவாரூர் – தஞ்சாவூர்; ஆகஸ்டு 13- நாகை – கடலூர்; ஆகஸ்டு 14 – விழுப்புரம்- திருவண்ணாமலை; ஆகஸ்டு 18 -புதுக்கோட்டை – சிவகங்கை; ஆகஸ்டு 19 – மதுரை – தேனி; ஆகஸ்டு 20 – விருதுநகர்- தூத்துக்குடி; ஆகஸ்டு 21 – திருநெல்வேலி – கன்னியாகுமரி; ஆகஸ்டு 29 – தருமபுரி- கிருட்டிணகிரி; ஆகஸ்டு 30 – வேலூர் – காஞ்சிபுரம்; ஆகஸ்டு 31 – சென்னை.

பெரியார் முழக்கம் 23072015 இதழ்

You may also like...

Leave a Reply