Author: admin

சீர்திருத்தமும்  இந்துமத ஸ்மிருதியும் 0

சீர்திருத்தமும் இந்துமத ஸ்மிருதியும்

திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தற்காலம் ஆலோசனையிலும் கமிட்டி விசாரணையிலும் இருந்து வரும் குழந்தை விவாகத் தடை மசோதாவைக் கண்டித்து ஒரு “ஸ்ரீமுகம்” வெளியிட்டிருக்கின்றார். அதை “சுதேசமித்திரன்” பிரசுரித்துள்ளபடி மற்றொரு பக்கத்தில் எடுத்துப் போட்டிருக்கின்றோம். அதன் காரண காரியங்களைப் பற்றி ஆராயுமுன் திரு. சத்தியமூர்த்தி யார் என்பதையும், அவர் எந்த முறையில் வெளிப் படுத்தியிருக்கின்றார் என்பதையும் முதலில் கவனிப்போம். திரு. சத்தியமூர்த்தியை அவருடைய தனித்த ஹோதாவில் ஒரு சாதாரண மனிதர் என்பதாகச் சொல்லிவிடலாமானாலும் அவருக்கு இம் மாதிரியான ஸ்ரீமுகங்கள் வெளியிட சந்தர்ப்பங்கள் அளித்ததும் அந்த ஸ்ரீமுகங்களை மக்கள் கவனிக்க நேர்ந்ததும், சில விஷயங்களிலாவது அவர் இந்திய மக்கள் பிரதிநிதி என்கின்ற தன்மை அடைந்திருக்கிறார் என்பதே. அதாவது “தேசீய அரசியல்” இயக்கம் என்று சொல்லப்படுவதில் ஒரு குறிப் பிட்ட மனிதராகவும், சென்னை சட்டசபை என்பதில் ஜனப்பிரதிநிதி அங்கத்தினராகவும், அதிலும் படித்த மக்களின் பிரதிநிதியாகவும், அதாவது யூனிவர்சிட்டி பிரதிநிதியாகவும், சென்னை முனிசிபாலிட்டியின் ஒரு அங்கத்தினராகவும்,...

சர்வகக்ஷி மகாநாட்டின் வண்டவாளம் ஐ 0

சர்வகக்ஷி மகாநாட்டின் வண்டவாளம் ஐ

சர்வகக்ஷி மகாநாடு எனப் பெயர் வைத்துக்கொண்டு சிலர் கூடி செய்துவரும் ஜெகஜாலப் புரட்டுகளையும் சூழ்ச்சிகளையும் மக்கள் ஏமாறத்தக்கவண்ணம் வேண்டுமென்றே நம் நாட்டில் சில தேசீயப் பத்திரிகைகள் என்னும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் செய்து வந்த புரட்டுகளெல்லாம் இப்போது வெட்டவெளிச்சமாகி விட்டதை யாவரும் அறிந்திருக்கலாம். இதன் காரணம் அப்பத்திரிகைகள் தங்களுக்கென யாதொருவித கொள்கையும் இல்லாமல், சற்றும் விவகார ஞானமும் இல்லா மல் சமயத்திற்குத் தகுந்தபடியும் காசு கொடுப்பவர்கள் சொல்கின்ற படியும் நடக்க வேண்டியிருப்பதால், சற்றும் மானம் ஈனம் வெட்கமின்றி தினத்திற்கு ஒரு குட்டிக்கரணம் வீதம் போட்டு மாறி மாறி எழுத வேண்டிய வைகளாகவே இருக்கின்றன. உதாரணமாக சர்வகக்ஷி மகாநாட்டைப் பற்றியும் அதன் தீர்மானங்களைப் பற்றியும் இக்கூலிப் பத்திரிகைகள் ஒரே அடியாக வானமளாவப் புகழ்ந்ததும், அதை உலகமே ஒப்புக் கொண்டாய் விட்டது என்றதும், இனி தேசத்திற்கு விடுதலை ஒரு விரக்கடை தூரம் தான் இருக்கின்றது என்றதும், அதில் கலந்து வேலை செய்தவர்களையெல்லாம் பாராட்டி எழுதி...

உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம் 0

உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் இருப்பதாக சிலர் கருதிக் கொண்டு இருக்கின்றார்கள்! இதை தப்பான எண்ணம் என்றே சொல்லுவோம். உலகத்தில் இது சமயம் எங்கு பார்த்தாலும் உண்மை உழைப்பாளிகளும் வீரர்களும் இந்தக் காரியத்தைத்தான் செய்து வருகின் றார்கள்- இந்த இயக்கத்தினால் தான் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நாட்டை விடுதலை அடையச்செய்தும் வருகின்றார்கள். ஆனால் இது கஷ்டப்படவும், நஷ்டப்படவும் துணிந்தவர்களாலும், உண்மை வீரம் உடையவர்களாலும் மாத்திரம் ஆரம்பிக்கக்கூடிய காரியமானதால் சுயநலத்திற்காக பொதுநல சேவையில் ஈடுபட்டிருப்பதாக வேஷம் போடுகின்றவர்கள் இக் காரியத்தைச் செய்ய முடியாததுடன் வேறொருவர் செய்வதையும் அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் மக்களுக்கு உண்மையான காரியத்தில் கவலை ஏற்பட்டு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டால் போலிகளுக்கு இடமில்லாமல் போவதுடன் அவர்களது வாழ்க்கைக்கே ஆபத்தாய் முடிந்து விடும். ஆதலால் அப்படிப்பட்டவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்க வேண்டியவர் களாகி விடுகின்றார்கள். எனவே எவ்வளவு தான் சுய நலமிகளால் இவ் வியக்கம் தாக்கப்பட்டாலும்,...

சைவ சமயம் 0

சைவ சமயம்

சமயம் என்பதைப்பற்றி சென்ற வாரம் ஒரு தலையங்கம் எழுதியிருந்தோம். இவ்வாரம் சைவ சமயம் என்பது பற்றி எழுதுகின்றோம். கொஞ்ச காலமாக சைவ சமயத்தின் பேரால் சிலர் போடும் கூச்சல் அளவுக்கு மேல் போகின்றது. சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக வேண்டும் என்று கட்சி சேர்க்கின்றார்களாம். அரசியல் பிழைப்புக்காரர்கள் சிலர் அப்படித்தான், அதாவது, “சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக வேண்டும் , அதை ஒழிக்காவிட்டால் சுயராஜ்யம் தடைபட்டுப் போகும்” என்று கூச்சல் போட்டார்கள். கூலி கொடுத்தும் கூச்சல் போடச் சொன்னார் கள். அவ்வளவு கூச்சல்களையும் அடக்கிக்கொண்டு இப்போது நமதியக்கம் தலைநிமிர்ந்து நிற்கின்றதையும் அரசியல்காரர்களில் பெரும்பாலோரும் இதை ஆதரிப்பதையும் பார்த்து ஒருவாறு அடங்கிவிட்டார்கள். இப்போது சைவ சமயத்தார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலர் கிளம்பி சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டுமென பிரசாரம் செய்து வருகின் றார்கள். இச்சைவ சமயத்தார்கள் என்பவர்கள், சுயமரியாதை இயக்கம் பார்ப்பனீயத்தையும், பார்ப்பனர்களையும் கண்டிக்கும் பொழுதும், வைணவ சமயத்தையும் வைணவர்களையும் கண்டிக்கும் பொழுதும் ஆனந்தக்...

சுயமரியாதைத் திருமணங்கள் 0

சுயமரியாதைத் திருமணங்கள்

சமீப காலத்தில் எங்கும் சுயமரியாதைத் திருமணங்கள் நூற்றுக்கணக் காய் நடந்ததாக செய்திகள் வந்து கொண்டிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி யடைகின்றோம். அவைகளைப் பூரணமாய்ப் பிரசுரிக்கமுடியா மைக்கும் வருந்துவதுடன் அனேக திருமணங்களுக்குப் போகமுடியாமைக் கும் விசனிக்கின்றோம். ஒவ்வொரு திருமணத்திற்கும் நம்மை அழைத்த தற்காக நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அவ்வளவுக்கும் நம்மால் போகக்கூடியது சாத்தியமின்மையால், வராமைக்கு மன்னிக்கும்படி யும் கேட்டுக்கொள்ளுகின்றோம். இவ்வியக்கம் தோன்றிய இவ்வளவு சீக்கிரத்தில் பார்ப்பனர்களை நீக்கிய திருமணங்களும், மூடச்சடங்கை நீக்கிய செய்கைகளும் சந்தோஷமடையத்தக்க அளவு நடந்து வந்தாலும், விதவா விவாகம், கலப்பு மணம் முதலியவைகள் நாம் எதிர்பார்த்த அளவுக்கு 100 ற்கு 1 – பங்கு கூட நடத்தப்பட்டதாய் சொல்வதற்கில்லை. ஆதலால், நமது நண்பர்கள் ஆங்காங்கு முயற்சித்து விதவைகளுக்கு மணம் செய்விக்க முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டிக்கொள்ளுகின்றோம். மணமக்களுக்கு உத்தியோகங்கள் சம்பாதித்துக்கொடுக்கக் கூட பல நண்பர்கள் முன்வந்தி ருக்கின்றார்கள். சுயமரியாதைத் தொண்டார்கள் இந்தாண்டில் சற்று கவலை செலுத்த விரும்புகின்றோம். குடி அரசு...

‘சித்தாந்தம்’  ஆசிரியரின் சூன்ய நிலை 0

‘சித்தாந்தம்’ ஆசிரியரின் சூன்ய நிலை

மணலி விடுதியில் தருமச் சோறு உண்ணும் ஒரு பார்ப்பனரல்லாத மாணவர் குற்றம் செய்ததாகக் கருதி, அத்தகைய குற்றத்திற்குக் கசை கொண்டு தாக்கிய சைவம் பழுத்த ‘சித்தாந்தம்’ ஆசிரியனார் பாலசுப்ரஹ்மண்யம் “சைவக் குறும்பு” என்னும் தலைப்பொடு தம் அழகிய ‘சித்தாந்தம்’ என்னும் மாசிகையில் ஓர் கட்டுரை வரைந்திருக்கின்றார். இவ்வாசிரியனார் மரக்கறி தின்று மகாதேவனைத் தினம் இறைஞ்சி நிற்கும் ஓர் சைவம் பழுத்த திருமேனியுடையார். சீவகாருண்ய வள்ளல். பிறரை தன்வழிப்படுத்த அருனெறியில் தண்டனை புரிவதில் சிறிதும் பின்னடையார். சட்டம் கற்றவர்; பி.ஏ.பி.எல்,. பட்டம் பெற்றவர்; மரக்கறி உண்டு உடல் பருத்தவர்; அறச்சாலையை மேல் பார்த்தும், உள்பார்த்தும் வருபவர். இவர் கட்டுரையை ஆராய்வோம்:- (1) ‘‘ ‘திராவிடன்’ ‘குடி அரசு’ பத்திரிகைகளில் வெளிவரும்…………. பொருந்தாமை பொய்மை முதலியவற்றை ஆராய்ந்து நாம் (சித்தாந்தம்) வெளியிடத் தொடங்கிய நாள்தொட்டு நமது பத்திரிகை தமிழ் நாட்டுக்குச் செய்துவரும் பணியைப் போற்றி நூற்றுக்கணக்கான சந்தாதாரர்கள் நமது பத்திரிகையை வாங்கத் தொடங்கி ஆதர...

பழியோரிடம் பாவமோரிடம் 0

பழியோரிடம் பாவமோரிடம்

காலஞ்சென்ற தமிழ் தேசீயகவி சி. சுப்பிரமண்ய பாரதியவர்களின் தேசீய நூல்களின் முதலிரண்டு பாகங்களை சென்னை அரசாங்கத்தார் அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார்தான் என்று “தமிழ்நாடு” பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது. சென்னை அரசாங்கத்தார் ³ நூல்களை பறிமுதல் செய்வதற்கு முன்னரே பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று “தமிழ்நாடு” கூறுமா? பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புஸ்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால் ³ நூல்களை சென்னையில் பறிமுதல் செய்ததற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கக்ஷியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ³ ஸ்ரீசுப்பிரமண்ய பாரதியாரின் நூல்களில் ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப் பட்டி ருப்பதால்...

சமயம் 0

சமயம்

சமயம் என்பதைப் பற்றி இவ்வாரம் ஒரு நீண்ட வியாசம் எழுத வேண்டிய அவா ஏற்பட்டதின் காரணம் என்னவென்பதை முதலில் குறிப்பிட்டுவிட்டு பின்னால் சமயத்தைப்பற்றி எழுதுவோம். இதுசமயம் சமயத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்து பாமர மக்களின் அறியாமையை தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டு பத்திரிகைகள் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பிரசங்கங்கள் மூலமாகவும் விஷமப் பிரசாரம் செய்து வருவதோடு சமயத்திற்குத் தகுந்த விதமாய் பேசிக் கொண்டும் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் நமது முயற்சிக்கு இடையூறு விளைவிப்பதெனவே முடிவு கட்டிக் கொண்டுமிருக்கின்றார்கள். இக்கூட்டத்தார் யாவர் என சிலராவது அறிய விரும்பலாம். இக்கூட் டத்தவருள் பெரும்பாலானவர் சமயத்திற்கென ஒரு வினாடி நேரமோ ஒரு அம்மன் காசோ செலவழிக்காத “தியாகிகளும்” அதுமாத்திரமல்லாமல் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கும் பணம் சம்பாதிக்கும் தொழிலுக்கும் இந்த விஷமப் பிரசாரத் தொழிலைத் தவிர வேறு ஒரு மார்க்கமும் அடியோடு இல்லாதவர்களும் என்றே சொல்லலாம். இக்கூட்டத்தார், கோர்ட்டு...

பார்ப்பனப் புதிய தந்திரம் உஷார்!                                                         உஷார்!! 0

பார்ப்பனப் புதிய தந்திரம் உஷார்! உஷார்!!

பார்ப்பனர்கள் பொது ஜனங்களை ஏமாற்றி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக பொது ஜன நன்மைக்குப் பாடுபடுகின்றவர்கள் போல் வேஷம் போட்டு, பொதுமக்களுக்குப் பயன்படாத அற்ப காரியங்களை பிரமாதப்படுத்திப் பேசி, அதுவே மகா முக்கியமானதென்று நம்பும்படி செய்து, அது தங்களால்தான் முடியுமே தவிர மற்றவர்களால் முடியாதென்றும், கடவுள் தங்களை அதற்காகவே படைத்திருக்கிறாரென்றும் சொல்லிக் கொண்டு, அந்த “பொதுத் தொண்டு” தொழிலையே தங்கள் ஜீவனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் உபயோகப்படுத்திக்கொண்டு, நகத்தில் சிறிதுகூட அழுக்குப் படாமல் சௌக்கி யமாயிருந்து வாழ்ந்து வருவது யாவரும் அறிந்த விஷயமாகும். மேலும், இம்மாதிரியான ஏமாற்றும் பிழைப்பை யாராவது தெரிந்து அதை வெளிப்படுத்தி ஒழிக்க முயற்சி எடுத்துக் கொண்டால் உடனே நமது பார்ப்பனர்கள் அவர்கள் மீது சற்றும் ஈவு இரக்கமில்லாமல் பாய்ந்து கடுமையான பழிகளைச் சுமத்தி அவர்களை இராட்சதரென்றும், நாத்திகரென்றும், தேசத்துரோகி என்றும் சொல்லி, பொதுமக்களிடம் அவர்கள் மீது வெறுப்புண்டாகும்படி செய்து எப் பாடு பட்டாவது அவர்களது செல்வாக்கையும் ஒழித்துத் தங்கள்...

கதர் புரட்டு இராட்டின் இரகசியம் 0

கதர் புரட்டு இராட்டின் இரகசியம்

கதர் இயக்கம் என்பது பார்ப்பனர்கள் தங்கள் பிழைப்புக்கும் ஆதிக்கத்திற்கும் மோட்சம் என்றும், சுயராஜ்ஜியமென்றும், தேசியம் என்றும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்து வாழ்ந்து வருவது போலவே, ஏழைகளுக்கு மொத்த உதவி செய்கின்றவர்கள் போல் வேஷம் போட்டுக் கதர் என்னும் பெயரால் பாமரமக்களை ஏமாற்றி வருகின்றதற்கு உபயோகப் படக்கூடியதே தவிர அதனால் உண்மையான பலன் ஒன்றும் கிடைக்காதென்று பலதடவை புள்ளி விவரங்களுடன் எழுதியும் பேசியும், மெய்ப்பித்தும் வந்திருக்கின்றோம். ஆனால் பார்ப்பனரல்லாதார்களிலேயே பலர் நாம் எழுதி வந்ததைச் சரிவர பகுத்தறிவை உபயோகித்துக் கவனித்துப் பார்க்காமல் மேலாக நுனிப் புல்லை மேய்வதுபோல் அலட்சியமாய் இருந்து கொண்டு பார்ப்பனர் களும் அவர்களது பத்திரிகைகளும் சொல்லுவதையே கிளிப்பிள்ளைபோல் திருப்பிச் சொல்லிக் கொண்டு மிக்க பொதுநலக் கவலை இருப்பவர்கள்போல் வேஷம் போட்டு நம்மைக் கண்டித்து வந்தார்கள். இப்பொழுது வேதாரண்யம் மகாநாட்டில் திரு.ராஜகோபாலாச்சாரியார் கதர் கண்காட்சியை திறந்து வைக்கும் போது அவர் செய்த பிரசங்கத்தில் நமது அபிப்பிராயம் முழுதினையும் தாராளமாய்...

‘புண்ணிய ஸ்தலங்கள்’ 0

‘புண்ணிய ஸ்தலங்கள்’

-சித்திரபுத்திரன் “புண்ணிய ஸ்தலம்” என்னும் தலைப்பின் கீழ் புண்ணிய ஸ்தலங்கள் என்பவைகளைப் பற்றி ஏன் எழுதிக் கொண்டு வரப்படுகின்றது என்பது பற்றி முந்தின வியாசத்தின் முதல் பகுதியிலேயே தெளிவாய் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. தவிர முந்தின வியாசத்தில் பண்டரிபுரம் என்னும் “புண்ணிய ஸ்தலத்தின்” யோக்கியதையையும் விளக்கி இருக்கிறது. பண்டரிபுரம் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான ஸ்தலம். அந்த ஸ்தல புராணத்தில் ஒரு சமயம் அந்த முக்கியத்துவத்திற்கு ஏற்ற காரணம் ஏதாவது குறிப்பிட்டிருக்கக்கூடுமோ என்பதாக சந்தேகப்படகூடுமானாலும் வைணவ பக்தர்களின் சரித்திரத்தைப் பற்றிச் சொல்லும் பக்தவிஜயம் என்னும் புஸ்தகத்தின் சுருக்கமாகிய பக்தலீலாமிர்தம் என்னும் புத்தகமானது சைவர்களுக்கு எப்படி சைவ பக்தர்களின் சரித்திரத்தைச் சொல்லக் கூடிய தான சைவபுராணமாகிய பெரிய புராணமோ, அதுபோல் – ஏன்? ஒரு விதத்தில் அதைவிட முக்கியமானதென்று கூட சொல்லலாம். எப்படி எனில், பெரிய புராணம் என்பது சுந்தரமூர்த்திசுவாமி என்கிற ஒருவர் பாடிய ஒரு பாட்டிலிருந்த பக்தர்களின் பெயரைத் தெரிந்து அதற்கு ஆதாரமாக நம்பியாண்டார்...

வேதாரண்யத்தில்  தேசிய (பார்ப்பனர்) மகாநாடு திரு. பட்டேலின் யோக்கியதை 0

வேதாரண்யத்தில் தேசிய (பார்ப்பனர்) மகாநாடு திரு. பட்டேலின் யோக்கியதை

கடந்த மூன்று வருட காலமாக நமது பார்ப்பனர்கள் விடா முயற்சியுடன் பிரயத்தனப்பட்டு வந்த தமிழ் மாகாணத் தேசிய மகாநாடு சென்ற மாதம் 31-ந் தேதி வேதாரண்யம் என்னும் ஓர் கிராமத்தில் கூடிக் கலைந்ததாக பேர் செய்து விளம்பரமும் செய்தாய்விட்டது. ஆனாலும் அம்மகாநாடு நடைபெற்றதன் யோக்கியதைதான் என்ன என்று பார்ப்போமானால், சுருங்கக் கூறுமிடத்து பார்ப்பனரல்லாதார் பணத்தையே இரண்டு பார்ப்பனத் தலைவர்கள் செலவு செய்து, பார்ப்பன ரல்லாதாருக்கு விரோதமாய் இருவரும் படை திரட்டிக் கொண்டு போய் ஒருவருக்கொருவர் தங்கள் சாமர்த்தியத்தை வெளியாக்கிக் கொண்டதுதான் வேதாரண்ய மகாநாட்டின் தத்துவம் என்று சொல்ல வேண்டும். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.எஸ்.சீனிவாசய்யங்கார் அவர்கள் காங்கிரசின் பேரால் பொதுப் பணத்தை அள்ளிக் கொடுத்துச் சேர்த்து வைத்திருக்கும் படைகளான திருவாளர்கள் பழனியாண்டி பண்டாரம், சாமிநாத செட்டியார், அண்ணாமலை பிள்ளை, சத்தியமூர்த்தி, கிருஷ்ண சாமிப் பாவலர் முதலிய தேசீயத் தொண்டர்களாகிய திரு.அய்யங்கார் படைகள் ஒருபுறமும்; கதரின் பேரால் பார்ப்பனரல்லாதார் கொடுத்தப் பொதுப்பணத்...

திருவாங்கூரில் கோஷா விலக்கம் 0

திருவாங்கூரில் கோஷா விலக்கம்

வைதீகச் செருக்கும். பார்ப்பனீயக் கொடுமையும் இராமராச்சிய பரிபாலனமும் தலைவிரித்தாடும் திருவாங்கூரில், முதற்றரப் பார்ப்பனர்களாகிய நம்பூதிரிகளின் பெண்டிர் படுதாவைக் கடந்து வெளியேறி இருக்கின்றனர். படுதா என்பது ஒரு சமூகத்தின் மடமைக்கும் அம் மடமைக்கு அடிப்படையாய் உள்ள மதக் கோட்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள் இவைகளின் அறிகுறியாய் நிலவுகின்றது. ஆடுமாடுகளும் வெளிச் செல்லும் உரிமை பெற்றிருக்கையில் மானுடப் பெண்கள் தம் கொழுநர்தம் வீடுகளில் சிறகிலாப் பறவைகளைப்போல் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதனைக் கடந்து வெளிச் செல்வதென்றால், மடமையே உருவமாக விளங்கும் ஒரு சமூகத்தில் எளியதோர் செயலன்று. நம் இயக்கத்தின் நற்பயனாக நம் தலைவர் அடிக்கடி அந்நாட்டுக்குச் சென்று சமத்துவக் கொடியை பறக்கச் செய்துவரும் அரும்பெரும் அறிவுரை மாரிகளின் பயனாக நம்பூதிரிப் பெண்களின் சமூகத்தில் சுயேச்சையும், சமத்துவமும் காட்டுத் தீப்போல் பற்றிக் கொண்டது. நம்மியக்கக் கதிரொளியால் அறியாமைப்பனி அக்கணமே அகன்று வருகின்றது. ஏனைப் பெண்டிரும் இதனைத் தமக்கோர் வழி காட்டி என மதித்து முன்வருமாறும், ஆடவர்கள்...

இளம் வயது விவாக விலக்கு மசோதா 0

இளம் வயது விவாக விலக்கு மசோதா

தேசீய வாதிகள் யோக்கியதை மக்கள் இளம் வயதில், அதாவது தக்க வயதும் அறிவும் உணர்ச்சியும் இல்லாத காலத்தில் விவாகம் செய்யப்பட்டு வருவதால் மக்கள் சமூக வளர்ச்சிக்கும் உரத்திற்கும் கேடாயிருந்து வருகிறது என்கின்ற உண்மையை நமது வாழ்வில் தினமும் அனுபவத்தில் கண்டு வருவதோடு அவற்றை தடுக்க வேண்டுமென்பதாகவும் முயற்சி எடுத்தும் வருகின்றோம். இதைப்பற்றி பல சமூக மகாநாடுகளிலும், பல சீர்திருத்த மகாநாடுகளிலும் பேசி தீர்மானங்களும் செய்து வந்திருக்கின்றோம். ஆனால் அதை அனுசரித்து அது அமுலில் வரத் தக்க ஏற்பாடுகள் ஏதாவது செய்ய ஆரம் பித்தால் உடனே அங்கு மதம் வந்து குறுக்கே விழுந்து அம்முயற்சிகளை அழிப்பது வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றதும் நாம் அறிவோம். இதன் காரணமாகவே பெரிதும் நாம் மனித இயற்கைக்கு விரோதமான மதங்களும் கண்மூடிக் கொள்கைகளும் மண்மூடிப் போக வேண்டுமென்று முயற்சித்து வருகின்றோம். இம்முயற்சிக்கு யார் எதிரிடையாக இருந்தபோதிலும் நாம் ஒருசிறிதும் லக்ஷியம் செய்யாமல் இடையூறான மதங்களையும் அதற்கு ஆதாரமான சாமிகளையும்...

“சித்தாந்தம்”  ஆசிரியரின் கொடுமை 0

“சித்தாந்தம்” ஆசிரியரின் கொடுமை

சென்னை மணலி விடுதியில் நடந்த அக்கிரமம் நம் மனத்தைப் புண்படுத்துகின்றது. இவ்விடுதியிலுள்ள ஒரு பார்ப்பனரல்லாத மாணவன் தன்னை அறியாமல் ஒரு பார்ப்பன மாணவன் சாப்பாட்டுப் பேழையை (டிபன் பாக்ஸ்)த் தொட்டுவிட்டான், உடனே பார்ப்பனரல்லாதார் தருமத்திலிருந்து தெண்டச் சோறு சாப்பிடும் அப்பார்ப்பன மாணவனுக்கு கோபம் வந்துவிட்டது. என் சாப்பாட்டைத் தொடவா நேர்ந்தது என்று பலவாறு அரற்றி சாப்பாட்டை கீழே கொட்டிவிட்டு, பிராமண சூப்பரின்டெண்டெண்டிடம் போய் முறை யிட்டான். அவர் பார்ப்பனரல்லாத மாணவனைப் பார்ப்பனச் சாப்பாட்டைத் தொட்ட குற்றத்திற்காக வாயால் வசை புராணம் பாடி அனுப்பிவிட்டார். ஆனால், இது அப்பார்ப்பன மாணவனுக்கு ஒப்பவில்லை. தன் சாப்பாட்டைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனுக்கு வெறும் வசை புராணம் மட்டுமா என்று ஆத்திரம் அவனுக்கு அடங்காது கிளம்பிவிட்டது. ஆகையால் அப் பார்ப்பன சூப்பரின்டெண்டெண்டுக்கு மேல் அதிகாரியாய் உள்ள “சித்தாந்தம்” ஆசிரியரும் ஒரு வக்கீலுமான திரு “பாலசுப்ரமண்யம்” அவர்களிடம் சென்று முறையிட்டான், முறையிட்டதுதான் தாமதம். நம் பார்ப்பன முதலியாராய திரு.பாலசுப்பிரமணியத்திற்கு...

தேசீய இயக்கம் 0

தேசீய இயக்கம்

சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை, செல்வாக்கு, அது இதுவரை செய்திருக்கும் வேலை ஆகியவைகளைப் பற்றியும் ஒருவாறு விவரிப்போம். அதன் பொருள் சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால் இந்தியாவில் தேசீயம் என்கின்ற பதமே தப்பான வழியில் மக்களை ஏமாற்றி பிழைக்க ஒரு கூட்டத் தார், அதாவது மேல் ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தாசர்களாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தாரின் சூட்சியாலும் பாமர மக்களை ஏமாற்றி சிலர் பிழைக்க உபயோகப்பட்டு வரும் ஒரு பாதக மும் அபாயகரமுமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும். இன்னும் விளக்கமாக...

சென்னையில் மாபெருங்கூட்டம் 0

சென்னையில் மாபெருங்கூட்டம்

“தற்கால ராஜீயநிலைமை” சகோதரர்களே! இன்று நான், இன்ன விஷயத்தைப் பற்றித்தான் பேச வேண்டுமென்று நான் முடிவு செய்யவில்லை, ஆகிலும் கமிஷன் பகிஷ்காரம் என்னும் பொருள் பற்றிச் சிறிது பேச விரும்புகிறேன். ஏனெனில் அதுதான் இப்போது அரசியல் உலகத்தில் முக்கியமாக அடிபடுகிறது. அதாவது நமக்கு இதற்குமுன் சர்க்காரால் அளிக்கப்பட்டு நாம் அனுபவித்து வருகிற சீர்திருத் தத்தைக் குறித்தும், இந்தியர்களுக்கு இன்னும் அதிகப்படியான சீர்திருத்தம் கொடுக்கலாமா, அவர்கள் அவற்றை அடைய லாயக்குதானா என்பவை களைக் குறித்தும் விசாரித்து அறிவிக்கும்படி பிரிட்டிஷ் பார்லிமெண்டு இப்போது ஒரு கமிஷனை அனுப்பியிருக்கிறது என்பதைப் பொருத்தவரை அரசியல் வாதிகள் ஒப்புக் கொள்ளுகிறார்கள். எனவே, நாம் இதை இப்போது பகிஷ்கரிக்க வேண்டுமா அல்லது அதனிடம் நமது குறைகளைச் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒத்துழைப் பதால் நாட்டுக்கு நன்மையுண்டா அல்லது பகிஷ்கரித்தால் நன்மையுண்டா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். நான் ஆரம்பத்திலிருந்தே ஒரு சிலர் ஆரம்பித்திருக்கும் கமிஷன்...

சுயமரியாதை இயக்கம் 0

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டி லுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மை யான விடுதலையையும், சமத்துவத்தையும் தன் மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான ஒரு இயக்கமாகும். இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கை யெல்லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம். இதன் உண்மை விளங்க வேண்டுமானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும் ஆராய்ச்சிக் கும் உள்ள கட்டுப்பாட்டையும் நிர்ப்பந்தத்தையும் நினைத்துப் பார்ப்பானே யானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும். சாதாரணமாக இவ்வியக்கம் தோன்றி மூன்று நான்கு வருடங்களுக்குள்ளாக மக்களுக்கு அது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த்தாலும் கூட, இவ்வியக்கம் அறிவு விடுதலை இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும். நிற்க, தங்களுடைய சொந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பிழைக்க முடியாமல்...

திரு. மகமது நபி பிறந்த நாள் கொண்டாட்டம் 0

திரு. மகமது நபி பிறந்த நாள் கொண்டாட்டம்

எனது அன்பார்ந்த இந்து முஸ்லீம் சகோதரர்களே! இன்றைய தினமானது ஒரு பெரிய மகானின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படும் தினமாகும். ஆனால், அம்மகான் முகமதியர்களுக்கு மாத்திரம் சொந்த மானவர் என்றும், ஆதலால் அவர்கள் மாத்திரம்தான் அம்மகானின் பிறந்த நாள் கொண்டாட உரிமையுடையவர்களென்றும் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் அக்கூட்டத்தில் ஒரு இந்து என்பவனாகிய நான் எப்படித் தலைமை வகிக்கக் கூடுமென்றுகூட பலர் கருதலாம். மேலும் இவற்றிற்கு நான் சமாதானம் கூறும்போது எனது இந்து சகோதரர்கள் என்பவர்கள் பலர் என் மீதும் சந்தேகப்பட்டு நான் மகமதியர் களுக்கோ, மகமதிய மதத்திற்கோ வக்காலத்து வாங்கிப் பேசுவதாகவும் கருதலாம் என்றாலும் இந்துக்கள் என்பவர்கள் என்னைப் பற்றி எப்படிக் கருதுகிறார்கள் என்பதைப் பற்றி நான் சற்றும் கவலைப்படாமல் எனது மகமதிய சகோதரர்கள் என்னை இவ்விழாவில் கலந்து கொள்ள சந்தர்ப்ப மளித்ததுடன், மிகப்பெருமையான இவ்விழாவிற்குத் தலைமை வகிக்கும் கௌரவத்தையும் எனக்களித்ததற்கு முதன் முதலாக நான் என் மனப்பூர்வ...

திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம் 0

திரு. சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்

திரு. செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர் களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர்(நகைப்பு). பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகின்றது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். (நகைப்பு). மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகுமென்று தைரியமாய்க் கூறினார். நம்நாட்டு மூட பழக்க வழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார்...

காங்கிரசும் – தேசியமும் 0

காங்கிரசும் – தேசியமும்

சென்னை மாகாணத்தில் காங்கிரசின் யோக்கியதையும், தேசியத்தின் யோக்கியதையும் எவ்வளவு தூரம் வெளியாகிவிட்டது என்பதும் அதை பொதுஜனங்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றார்கள் என்பதும் சமீப காலமாக சென்னை நகரிலும் வெளியிடங்களிலும் நடந்துவரும் நடவடிக்கை களிலி ருந்து நன்றாய் அறியலாம். உதாரணமாக “காங்கிரசின் முக்கிய கொள்கைகள் எல்லா ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றுவதுதான்” என்பதாக இருந்தும் மற்றும் எல்லாக் கட்சிகளும் அதாவது சுயராஜ்ஜியக் கட்சி, சுயாட்சி கட்சி, தேசப் பிரதானக் கட்சி, உத்தியோகப் பிரதானக் கட்சி, தேசியக் கட்சி, சுயேச்சை கட்சி என்கின்ற இத்தனை கட்சிகளும் கூட இதையே அதாவது தேர்தல் ஸ்தாபனங்களை கைப்பற்ற வேண்டியதே முக்கிய கடமை என்பதாக இருந்தும் கூட இவ்வளவு கட்சிகளும் சேர்ந்து ஒரே அடியாய் ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்றும் அதன் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும் என்றும் இரவு பகலாய் எழுதியும் தொண்டை கிழிய கத்தியும் போதாக் குறைக்கு கூலி ஆட்களையும் காலி ஆட்களையும் விட்டு கத்தும்படி செய்தும் கலகம்...

ஸ்ரீமதி டாக்டர் மார்த்தா வோகளி ஆரியா 0

ஸ்ரீமதி டாக்டர் மார்த்தா வோகளி ஆரியா

வீரர் திரு. ஆரியா அவர்களின் வாழ்க்கைத்துணை நல்லார் ( பாரியை) ஆகிய ஸ்ரீமதி டாக்டர் மார்த்தா வோகளி ஆரியா ஆ.ஹ.க்ஷ.னு.,ஆ.னு சர்ஜன் அன் பிசிஷன் அவர்கள் குழந்தை வைத்திய விஷயத்திலும் °தீரிகள் வைத்திய விஷயத் திலும் சிறப்பாக மருத்துவ விஷயத்திலும் தேர்ச்சி பெற மேல்நாடு சென்று ஜெர்மனி முதலிய இடங்களில் உள்ள உயர்தர வைத்திய காலேஜுகளில் படித்து டாக்டர் பட்டம் பெற்று இந்தியாவுக்கு இரண்டு மாதத்திற்கு முன் வந்திருக்கிறார்கள். அவர்கள் இது சமயம் அரசாங்க உத்தி யோகம் பெற சம்மதிப்பார்களானால் தக்க பதவியும் உத்தியோகமும் கிடைக் கக்கூடுமானாலும் தேசத்திற்கும் ஏழைமக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்கின்ற அவாவின் பேரில் தனியே சொந்தத்தில் ஒரு வைத்திய சாலை ஏற்படுத்தி இருப்பதுடன், யாவருக்கும் வைத்திய உதவி செய்யவும் தயாராயிருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட தயாளகுணமும் தாராள நோக்கமும் உள்ள அம்மையார் அவர்களை நாம் மனமார பாராட்டுவதுடன் அவர்கள் எடுத்த காரியம் சித்தி பெற்று யாவருக்கும் பயன்படவேண்டுமென்று மனதார ஆசைப்படுகிறோம்....

மதிப்புரை – “விமோசனம்” 0

மதிப்புரை – “விமோசனம்”

திரு.ராஜகோபாலாச்சாரியவர்களால் புதிதாக வெளியிடப்படும் “விமோசனம்” என்னும் மாத வெளியீட்டு முதற்பகுதி ஒன்று நமது பார்வைக்கு வந்திருக்கிறது. அதைப் பற்றி “திராவிடன்” எழுதியிருக்கும் தலையங்கமே “விமோசன”த்தைப் பற்றிய மதிப்புரையாகக் கொண்டு கீழே எடுத்துக் காட்டுகின்றோம். ( ப-ர் ) திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் காந்தி ஆச்சிரமத்தில் இருந்து “விமோசனம்” என்னும் ஒரு மாதப் பத்திரிகையை ஆரம்பித்திருக் கிறார். அதன் இப்போதைய உத்தேசம் மதுவிலக்கையே உறுதி கொண்டதாய் காணப்படுகின்றது. ஆனாலும் மிஸ் மேயோ அம்மையார் இந்தியத்தாய் என்னும் புத்தகத்தை எழுதியிருப்பதில் அதில் உள்ள விஷயங்கள் எவ்வளவு சரியாயிருந்தாலும், இந்தியாவின் மீது வெளிநாட்டார் தப்பர்த்தம் கொள்ள வும், இந்தியா “சுயராஜ்ஜியத்திற்கு” அருகதை இல்லை என்று பிறர் நினைக் கவும் கருதி எழுதப்பட்டதாய் எப்படி சொல்லப் படுகின்றதோ, அப்படிப் போலவே, திரு.ஆச்சாரியாரின் “விமோசனம்” என்னும் பத்திரிகையையும் அதில் உள்ள விஷயங்களை எல்லாம் சரி என்றே வைத்துக் கொள்வதா னாலும் – அது பார்ப்பனரல்லாதார் சிறிதளவாவது இப்போது அரசியலில் பெற்று...

திரு.நடராஜன் 0

திரு.நடராஜன்

தஞ்சை திரு. த.நா. நடராஜனைத் தமிழ் உலகம் நன்கறிந்திருக்கும். அவர் “எனது திடம்” என்னும் தலைப்பின் கீழ் “நேர்வழிகண்டது” என்ற உள் தலைப்பிட்டு எழுதியிருக்கும் ஒரு பகிரங்க அபிப்பிராயத்தை மற்றொரு பக்கம் வெளியிட்டிருப்பதைப் பார்த்தால், அவரது தேச தொண்டின் ஆர்வமும், பொதுநலத் தியாகமும் நன்றாய் தெரியவரும். சுமார் 20 வருடகாலமாய் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுழைத்திருக்கும் அவர், மற்ற இயக்கங்களோடு கலந்து இருந்து ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்த்துக் கடைசியாக சுயமரியாதை இயக்கத்தில் ஒருவாறு பற்றுக் கொண்டு அக் கொள்கைகளில் பலவற்றையும் ஏற்றுக் கொண்டு அவற்றிற்காக தனது வாணாளை உபயோகிக்கத் தீர்மானம் செய்து கொண்டிருக்கின்றார் என்பது விளங்கும். இவ்வித உறுதி கொண்ட மக்களையே இதுபோது உலகம் சிறப்பாக நமது நாடு எதிர்பார்ப்பதுடன் லட்சியம் கைகூடும்வரை ஒரே உறுதியுடன் நின்று அதற்காக சகலவிதமான தியாகத்தையும் எதிர்ப்பார்க் கின்றது. நிற்க அவரது கடிதத்தில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும், அரசியல் கொள்கையையும் தம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை...

“புண்ணியஸ்தலங்கள்” 0

“புண்ணியஸ்தலங்கள்”

பண்டரிபுரம் -சித்திரபுத்திரன் இதிகாசங்களைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் கடவுள்களை பற்றியும் தனித் தனி மகுடமிட்டு “குடி அரசில்” எழுதிக் கொண்டு வருவதை வாசகர்கள் கூர்ந்து கவனித்து வாசித்து வருகின்றார்கள் என்றே எண்ணு கின்றேன். அவற்றை எழுதி வருவதின் நோக்கமெல்லாம், ஒரு சில சுயநலக் காரர்கள் தங்கள் நன்மையின் பொருட்டு எவ்வளவு ஆபாசமானவை களையும் அசம்பாவிதமானவைகளையும் வெகு சாதாரணமானவை களையும் எழுதிவைத்துக்கொண்டு பிரமாதப்படுத்தி, அவற்றையே மதம் என்றும் பக்தி என்றும் மோக்ஷத்திற்கு மார்க்கம் என்றும் பாமர மக்களை நம்பும்படியாகச் செய்து, மக்கள் அறிவையும் சுதந்திரத்தையும் சுயமரியாதை யையும் ஒற்றுமையையும் கெடுத்து வருகின்றார்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி மக்கள் யாவரும் சமம் என்பதையுணர்ந்து சுயமரியாதை யோடு வாழ வேண்டுமென்பதுதான். ³ சுயநலக்காரர்கள் சிற்சில இடங்களைப் பெரிய புண்ணிய ஸ்தலம் என்பதாக பெயர் கொடுத்து அவற்றிற்கு ஏராளமான யோக்கியதைகளைக் கற்பித்திருப்பதை பகுத்தறிவற்ற மூட ஜனங்கள் புண்ணியஸ்தல யாத்திரை என்பதாகக் கருதி வெகு பணங்களைச் செலவு செய்து...

மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டி 0

மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டி

சென்னை மாகாணத்தில் மதுவிலக்குப் பிரசாரம் செய்வற்குச் சென்னை அரசாங்கத்தாரைச் சம்மதிக்கும்படியான நிலைமைக்குக் கொண்டு வந்த பெருமை நமது கலால் மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்களுக்கே உரியதாகும். அதுபோலவே. அப்பிரசார திட்டத்திற்கு வேண்டுமென்றே துர் எண்ணம் கற்பித்து மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் மதுபானம் அதிகமாகுமென்று சொல்லி அதை நிறைவேறாமல் செய்ய முயற்சித்த “புண்ணிய கைங்கர்ய”த்தின் பெருமை காங்கிரஸ் சுயராஜ்ய கட்சிக்கும் தேசீயக் கட்சிக்குமே முழுவதும் போய்ச்சேர வேண்டியதாகும். அது போலவே இவ்விஷம முயற்சியை வெற்றிபெற வொட்டாது தலையிலடித்து ஒழித்து, மந்திரியின் திட்டத்தை நிறைவேற்றிய பெருமை ஜஸ்டிஸ் கட்சியாருக்கே உரித்தானதாகும். கலால் மந்திரி கனம் திரு.முத்தையா முதலியார் அவர்கள் மது விலக்குப் பிரசாரத்திற்காக நான்கு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து அப் பிரசாரத்திற்கென்று மத்திய கமிட்டியைத் தாமாகவே ஏற்படுத்தியிருந்தாலும் அக்கமிட்டி நியமனத்தில் மிக்க கவலையுடனும் பொறுப்புடனும் நடுநிலைமை வகித்து உண்மையான பொறுப்புள்ள கனவான்களாகவும், பொதுநலத்திற்குழைக்கும் சகல ஸ்தாபனங்களுக்கும் வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் உள்ளதாகவும், யாராலும்...

ஒரு பாலிய விதவையின் பரிதாபம்! “ஹிந்து தருமத்தின் மகிமை” 0

ஒரு பாலிய விதவையின் பரிதாபம்! “ஹிந்து தருமத்தின் மகிமை”

17.7.29 ந் தேதி அலகாபாத் ஹைகோர்ட்டில் நீதிபதிகள் எங், பெனட் ஆகிய இருவர் முன்னிலையிலும் ஒரு அப்பீல் வழக்கு வாதிக்கப்பட்டது. தீதுவானி கிராமம் நாராயணசிங்கர் மகள் இருபத்திரண்டு வயதுள்ள பீபியா என்னும் ஒரு பெண்ணுக்கு 5-வது வயதிலேயே மணம் முடிக்கப் பட்டது. அடுத்து ஆண்டில் புருஷன் இறந்து போனான். இவளுடைய ஜாதியில் விதவாவிவாக அநுமதி இல்லாமையால் பீபியா மரண பரியந்தம் விதவையாகவே காலம் கழிக்கும்படி நேரிட்டது. அவள் தன்னுடைய புருஷன் குடும்பத்திலேயே வாழ்ந்து வந்தாள். சென்ற ஆண்டில் கருத்தரித்து விட்டாள். இவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது பிரசவ வேதனை கண்டு குழந்தையைப் பெற்றுக் குழி தோண்டிப் புதைத்துவிட்டாள். மாடு மேய்ப்பவர்கள் மூலம் பரவின செய்தி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் பீபியாவை சிசுக் கொலை செய்ததாக நீதிபதி முன்பாக நிறுத்தி னார்கள். பீபியாவுக்கு நீதிபதிகள் தீவாந்திர சிட்சை விதித்து மாகாண அரசாங் கத்தார் கருணைக்கும் சிபார்சு செய்திருக்கின்றனர். இந்து தருமத்தின் மகிமையே...

கடவுளும் மதமும்                                                  ( 2 ) 0

கடவுளும் மதமும் ( 2 )

இத்தலைப்புக் கொண்ட முதலாவது வியாசத்தில் கடவுளைப் பற்றி அதாவது கடவுள் என்கின்ற உணர்ச்சி மக்களுக்கு எப்போது எப்படி உண்டாயிற்று என்பதைப்பற்றியும், அவ்வுணர்ச்சி மக்களுக்கு எதுவரையில் இருக்க முடியும் என்பதைப்பற்றியும் சுருக்கமாகச் சிறிது எழுதி இருந்தோம். அதாவது மனிதன் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்ளுவதும், உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவதும் சகஜம் என்பதாக குறிப்பிட்டு இருந்தோம். இந்த முறையிலேயே கொஞ்ச காலத்திற்கு முன் அநேக விஷயங்கள் கடவுள் செயல் என்று எண்ணியிருந்த மக்கள் விஞ்ஞான (சையன்ஸ்) ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு அநேக விஷயங்களை மனிதன் செயல் என்று சொல்ல தைரியம் கொண்டுவிட்டார்கள். உதாரணமாக, கம்பியில்லாத் தந்தி விஷயத்தை எடுத்துக் கொள்ளுவோம். கம்பியில்லாத் தந்தி ஏற்படுத்தி இருக்கும் விஷயமும், அது எப்படிச் செய்யப்படுவது...

வைதிகர்களின் இறக்கம் 0

வைதிகர்களின் இறக்கம்

பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவ னையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது என்று சனாதன தருமத்தின் பேராலும், சாஸ்திரத்தின் பேராலும், கடவுளின் பேராலும் இதுவரை கண்மூடித்தனமாகக் கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாகப் புத்தி உதயம் ஆகி வருவதாகத் தெரிகிறது. நமது சுயமரியாதை இயக்கத்தைப் பார்ப்பனர் களும் அவர்களுடைய கூலிகளும், “நாஸ்திக” இயக்கம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரசாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேகமில்லை. நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங் கள் செய்தும் போராடி வருவது எல்லாருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடி...

கண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழா 0

கண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழா

நேரம் மிகுதியாகி விட்டதால் நான் உங்களை அதிகமாகக் காத்திருக் கச் செய்ய விரும்பவில்லை. எனினும், நீங்கள் என்னை முக்கியமாய் பேசும்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதை முன்னிட்டு உங்களுக்கு ஒன்றை மட்டும் குறிப்பாக எடுத்துக்காட்டிப் பேச விரும்புகின்றேன். ஆதி திராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஓப்புக் கொள்வீர்களென்று நம்புகின்றேன். உங்களுள் சிலர் ராவ் பகதூர்களாயும், ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சு களிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயுமிருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம். எவ்வாறிருந் தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியை யொட்டித் தாழ்மையாகத் தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையே யாகும். ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலரு கிலும் வரக்கூடாதென்கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப்பட்டபோதிலும் அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவதில்லை. இந்து...

காந்தியின் கண் விழிப்பு 0

காந்தியின் கண் விழிப்பு

கதர் விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் பயன்படாதென்றும், இது ஒரு பெண்மணிக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு பை வீதம் தான் கூலி கிடைக்கக் கூடியதாய் இருக்கின்றதென்றும், அதுவும் அக்கதர்த் துணியை வாங்கி கட்டுகின்ற மக்கள் ஒன்றுக்கு இரண்டாகவோ மூன்றாகவோ அதிகப் பணம் கொடுத்து வாங்கினால் தான் முடியுமென்றும் மற்றபடி மில் துணி களுடனும் வெளிநாட்டுத் துணிகளுடனும் போட்டி போடுவதாயிருந்தால் நூற்கின்ற பெண்மணிகள் தங்கள் நூற்புக் கூலியையும் விட்டு மேல் கொண்டு மணிக்கு ஒரு பை வீதம் கையிலிருந்து காசு கொடுத்தால் தான் கட்டுமென்றும் சொல்லி வந்ததைச் சிலர் கதரின் மீதுள்ள மூடப்பக்தியால் நம்மீது ஆத்திரங் கொள்ளத் தொடங்கினார்கள். சிலர் நம்மீது பொது மக்களுக்குத் துவேஷம் உண்டாக்கக் கருதி தங்கள் விஷமப் பிரசாரத்திற்கு இதை ஒரு ஆயுதமாகவும் உபயோகித்தார்கள். நாம் எதற்கும் பின் வாங்காது உண்மையை தைரியமாய் எடுத்துச் சொல்லி கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டிய பிறகு...

பழிவாங்கும் குணம் 0

பழிவாங்கும் குணம்

திருச்சி ஜில்லா நியாயாதிபதியவர்கள் திரு. ஞானப்பிரகாசம் என்கின்ற ஒரு தொழிலாளருக்கு 10 வருஷம் கடின காவல் தண்டனை விதித்ததாக தெரியவருகின்றது. இந்த வழக்கில் நியாயம் வழங்கப்பட்டதா அல்லது பழிவாங்கும் பேய்தன்மை நியாயம் வழங்கப்பட்டதா என்பது நமக்கு விளங்கவில்லை. என்ன சமாதானம் சொன்னபோதிலும் இத் தீர்ப்பு எழுதிய நியாயாதி பதி மனிதத்தன்மையுடன் நடந்துக்கொன்டிருக்கிறாரா என்பதை வாசகர் கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வேலைநிறுத்தத்தில் ஏற்பட்ட சம்பவங்களின் பலனாக சற்றும் ஈவு இரக்கமற்று பழி வாங்கும் தண்மையோடு வழக்குகள் ஜோடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்கள் யாவருக்கும் வெட்டவெளிச்சமாய் தெரிந் திருக்கும். நியாயாதிபதிகள் என்பவர்கள் தங்களுக்கு கிரமமாய் இருக்க வேண் டிய மனிதத்தன்மையை மறைத்துவிட்டு ஏதோ சில சுயநலப் பத்திரிகை காரர்கள் சுமத்திய அநியாயப் பழியையும் சில சுயநல அதிகாரிகள் ஜோடித்த விஷயங்களையும் ஆதரவாய் கொண்டு இம்மாதிரி நடப்பதென்றால் பிறகு வாயில்லா பூச்சிகளுக்கு எங்குதான் விடுதலை இருக்கின்றது என்பது நமக்கு விளங்க வில்லை. அஸெஸர்கள் ஏகோபித்து...

ராமனாதபுரம் ஜில்லாபோர்டு 0

ராமனாதபுரம் ஜில்லாபோர்டு

ராமனாதபுரம் ஜில்லாபோர்டு பிரசிடெண்டாயிருந்த ராமனாதபுரம் ராஜா அவர்கள் காலமானதின் மூலம் இப்போது அந்த பிரசிடெண்ட்°தானம் காலியாக இருந்து வருகின்றது. சர்க்காரார் அந்த °தானத்தை பூர்த்தி செய்வதற்கு இதுவரை யாதொரு முடிவும் செய்திருப்பதாகத் தெரியவில்ல. ஆனாலும் அந்த °தானத்தை தேர்தலுக்கு (எலக்ஷனுக்கு) விட்டுவிடலாமா அல்லது தாங்களே ஒருவரை பிரசிடெண்டாக நியமனம் ( நாமிநேஷன்) செய்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. தற்கால நிலைமையில் அதுவும் ராமனாதபுரம் ஜில்லாவைப் பொருத்தவரை அந்த °தானத்தை எலக்ஷனில் விடுவதைவிட நாமிநேஷனில் தக்க ஒருவரை நியமனம் செய்வதே யோக்கியமும் அறிவுடைமையுமான காரியம் என்று சர்க்காருக்கு யோசனை கூறுவோம். மதுரையில் சில பாகம், திருநெல் வேலி, இராமனாதபுரம் ஆகிய ஜில்லாக்களிலும் ஜாதிக் கர்வமும் ஜாதிக் கொடுமையும் தலைசிறந்து விளங்குவது யாவரும் அறிந்த ஒன்றாகும். உதாரணமாகப் பார்ப்பனர்களின் கொடுமையோ சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அதற்கடுத்ததான தெற்கத்திய சைவ வேளாள சமூகத் தாரின் கொடுமையோ பார்ப்பனரல்லாதார் சமூகமே வெட்கப்படத்தக்கதாகும். இவ்விரு சமூகக்...

0

குக்கிராமங்களை குலுக்கிய பெரியார் பிறந்தநாள் வாகனப் பேரணி

தந்தை பெரியாரின் 137 -வது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அழங்கரித்துக்கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகணப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் (மாவட்ட கழக ஏற்பாட்டில்) கலந்துகொண்டு, நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, கொல்லப்பட்டி வழியாக சுமார் 10-00 மணியளவில் இரும்பாலை சென்றடைந்தது வாகணப் பேரணி. அங்கு மூத்த பெரியார் தொண்டர் இரும்பாலை பழனிச்சாமி அய்யா அவர்கள் தோழர்களை...

திரு. தண்டபாணியின் தொல்லை  சென்னை, ஆக°டு, 2 0

திரு. தண்டபாணியின் தொல்லை சென்னை, ஆக°டு, 2

‘திராவிடன்’ பத்திரிகைக்கு விளம்பரம் பிடித்துக்கொடுக்கும் ஏஜண்டாயிருந்த திரு.என். தண்டபாணிபிள்ளை திராவிடன் பத்திரிகைக்கு விளம்பரம் பிடித்துக்கொடுத்ததன் சம்பந்தமாக தமக்கு கமிஷனாகவும் தம் ஏஜண்ஸியை நிறுத்தித் தம்மை நீக்கியதன் சம்பந்தமாகத் தமக்கு மூன்று வருட நஷ்ட ஈடாகவும் மொத்தத்தில் பன்னீராயிரத்துச் சொச்சம் ரூபாய் சேர வேண்டுமென்று ஐகோர்ட்டில் திரு.ஈ.வெ.ராம சாமியார் மீது அசல் தரப்பில் கொண்டு வந்துள்ள வழக்கு சம்பந்தமாய் திரு. ராமசாமியார் திரு.ஸி.ஜெயராம் நாயுடுவுக்கு 13 ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டுமென்று பலவாறு புகார் சொல்லி அவ்வழக்கில் தீர்ப்பு சொல்லுமுன் திராவிடன் ஆபீ° சொத்துக்களை உடன் ஜப்தி செய்து வைக்க உத்தரவாக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் சொத்துக்களை பராதீனம் செய்து விட்டு ஊரைவிட்டு ஓடி விடுவாரென்றும் திரு. தண்டபாணி போட்டி ருந்த மனு நீதிபதி பண்டலே முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் சம்பந்தமாக செங்கல்பட்டு ஜில்லா போர்டு உபதலைவரான திரு.ஸி.ஜெயராம் நாயுடு அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண வாக்கு மூலமொன்றில்,...

0

எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்

எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதலில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் மட்டும் நடத்துவதற்காக காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்தும், ஒரு மாத காலத்திற்கு எந்த நிகழ்ச்சிகளுக்குமே அனுமதி இல்லை என்றும் கடிதம் கொடுத்தார். (ஆனால் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியது) மாவட்ட கழக பொருப்பாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்ட பின்னால், நாள் ஒன்றிற்கு ஒரு கூட்டம் வீதம் பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் எழுதி கொடுக்கப்பட்டது. முதலில் மணுவை பெற மறுத்த உதவி ஆய்வாளர், உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு மணுவை பெற்றுக்கொண்டார். பின்னர் கூட்டங்களின் எண்னிக்கையை அல்லது நாட்களை குறைத்து கொள்ள வேண்டினார். அதை ஏற்க மறுத்த தோழர்கள்...

செங்கற்பட்டு ஜில்லாவில் பார்ப்பனீய மகாநாடு 0

செங்கற்பட்டு ஜில்லாவில் பார்ப்பனீய மகாநாடு

செங்கற்பட்டில் மாகாண சுயமரியாதை மாநாடு நடந்த பிறகு சில பார்ப்பன தாசர்களுக்கு அடியோடு செல்வாக்குப் போய்விட்டபடியால் அதை மறுபடியும் சம்பாதிப்பதற்கென்று சமீபத்தில் காங்கிரசின் பேரால் ஒரு மகாநாடு கூட்டினார்கள். அம்மகாநாடு கூட்டுவதற்கு சில நாளைக்கு முன்பிருந்தே திரு.இராஜகோபாலாச்சாரியாரைக்கொண்டு அவர் தனது தாசர்களுடன் அச்சில்லாவில் பல பாகங்களிலும் மதுவிலக்கின் பேரால் சுயமரியாதை இயக்கத்தையும் ஜ°டி° கட்சியையும் நினைத்தபடிக்கெல் லாம் தூஷித்தும் பழி சுமத்தியும் விஷமப்பிரசாரம் செய்தும் பார்த்தார்கள். என்னசெய்தும் வழிவழியாக வந்த பார்ப்பனதாசர்களைத் தவிர வேறுயாரும் அம்மகாநாட்டிற்கு செல்லவில்லை என்றே தெரிய வருகின்றது. சென்னையில் இருந்து திரு. எ°. சீனிவாசய்யங்கார் மாத்திரம் தன் சொந்த செலவில் ஒரு கூலிப்படையைத் திரட்டிக் கொண்டு போனார். மற்றபடி அம்மகாநாட்டில் நடந்த பிரசங்கங்களும் தீர்மானங்களும் பெரிதும் ஜ°டி° கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் செங்கற்பட்டு ஜில்லா போர்டு பிரசிடெண்ட் திரு. ராவ்பகதூர் எம்.கே. ரெட்டியையும் அய்யங்கார் மெச்சும்படி வைததைத் தவிர வேறு ஒன்றும் செய்ததாக அவர்களாலேயே சொல்ல முடியாது...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

நமது இந்திய நாடானது சுதந்திரமும் சுயமரியாதையும் பெற வேண்டுமானால் முதலாவது இந்திய மக்களுக்குள் ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் ஏற்பட வேண்டும் என்பதும், அவ்வித ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் ஏற்படுவதற்கு இடமில்லாமலிருக்கும்படியான அளவுக்கு இந்தியாவானது பல்வேறு மதங்களாகவும், தேசத்தார்களாகவும், ஜாதி களாகவும், அவற்றுள் அளவற்ற வகுப்புகளாகவும் பிரிந்திருக்கின்றது என்பதும் யாவருமே அறிந்த விஷயமாகும். இவ்வித்தியாசங்களை ஒழிப்ப தற்கென்று வெகு காலமாகவே அநேக பெரியார்கள் அரசியலில் பேராலும், சமூக இயலின் பேராலும் எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தும் சிறிதும் பயன்படாமல் நாளுக்குநாள் புதிது புதிதாக மதங்களும் ஜாதிகளும், வகுப்பு களும் வளர்ந்து கொண்டு போவதல்லாமல் குறைந்து வந்ததாகவோ, அல்லது குறைவதற்குள்ள குறிகள் காணப்படுவதாகவோ சொல்லுவதற்கில்லாமலும் இருந்து வருகின்றது. இவைகளை யாரும் மறைத்துப் பேச முடியாதென்பதே நமது அபிப்பிராயம். அதிலும் என்று முதல் அரசாங்கத்தாரிடம் இந்தியர்கள் அரசியல் சுதந்தரம் கேட்பதென்றும், அரசாங்கத்தார் நமக்குச் சிறிது சிறிதாய்ச் கொடுப்பதென்றும் ஏற்பட்டதோ, அன்று முதல் அப்படிக் கொடுப்ப தென்பதும் பெருத்த...

கடவுளும் மதமும்                                                   ( 1 ) 0

கடவுளும் மதமும் ( 1 )

இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப்புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்று செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குள் தானாகவே ஒருவித குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை உணர்கின்றோமாத லினாலேயாம். அதோடுகூட பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல், தேசீயம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர் களும், சமயம், புராணம், பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர்களும் இவ்வியக்கத்தை எதிர்க்கக் கடவுளையும் மதத்தை யும் பற்றிய பொது மக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக் கொண்டும் விஷமப் பிரசாரம் செய்து வருவதானாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக் கொண்ட உண்மை நண்பர்களில் சிலர் இவ்விஷமப் பிரசாரத்தைக் கண்டு பயப் படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சில பெரியோர்களும், சமய சம்பந்தமாக மனத் துடிப்புக் கொள்வதாலும் நமது நிலையையும், கடவுள் மதம் என்பது பற்றி நாம்...

ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு 0

ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு

சென்னை நேபியர் பார்க்கில் (தில்லை வனத்தில்) ஆதி திராவிட சுயமரியாதை மகாநாடு கூடிய விபரம் மற்ற பக்கத்தில் வெளியாயிருக் கின்றது. அதில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதாவது:- “ஆறரைக் கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும் இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியாமலிருக்கும்படியும், சர்க்கார் தஸ்தாவேஜுகளிலும் எங்களை இந்துக்கள் என்கின்ற பதவியிலிருந்து நீக்கிவிடும்படிக்கும் செய்யும்படி சர்க்காரையும், சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது.” என்பதாக தீர்மானித்திருக்கின்றது. திருவாங்கூர் ராஜ்யத்திலும் சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக முதுகுளத்தூர் என்கின்ற இடத்தில் கூடிய ஒரு எஸ்.என்.டி.பி. யோகத்தில் அதாவது ஈழவ சமுதாய மகாநாட்டில் இதை அநுசரித்து ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது “இந்து மதத்தில் மனித சுதந்திரம் இல்லாததால் இம்மதத்தை விட்டு வேறு மதத்திற்கு போய்விட வேண்டும்”...

0

தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்

தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணோஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் பெயர்பலகை யைமாநில பொருளாளர் தோழர்துரைசாமிஅவர்கள்திறந்துவைத்தர் ,அறிவியல் மன்றம் பொருப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் கழ்க கொடி யேற்றி வைத்தார்கள் கிளை திறப்பு விழா நடை பெற்றது இன்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட சார்பில் திருப்பூர் மாவட்ட சொயளாளர் தோழர் முகில்ராசு அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் திருமணி மாவட்ட செயளாளர் தோழர் நிர்மல்குமார் புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர்த் தோழர் ராமசந்திரன் சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் மாநகரப் பெருளாளர் தோழர் கிருட்டிணனசமூக நீதி இயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு திவிக தோழர்கள் ராசாமணி , லோகு அன்னூர் முருகேசன் , பிரபாகரன் விவேக் ராஜசேகர் மற்றும்...

கோவில் பிரவேசம் 0

கோவில் பிரவேசம்

வங்காளத்தைச் சேர்ந்த குல்னாகாளி கோவிலுக்குள் தீண்டாதார் எனப்படுவோர் செல்ல வேண்டுமென்று சத்தியாக்கிரகம் செய்து வந்ததும், அதனால் சிலர் கைதியானதும் சென்ற வாரப் பத்திரிகையில் தெரிந்திருக் கலாம். இப்போது இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் தீண்டாதார் எனப்படுவோர் உள்பட தாராளமாய் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்பதாக மேல் ஜாதியார் என்பவர்கள் ஒப்புக் கொண்டு ராஜி ஏற்பட்டு கைதியாக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்துவிட்டார்கள். குடி அரசு – செய்திக் குறிப்பு – 21.07.1929

சென்னை காங்கிரஸ் கமிட்டி 0

சென்னை காங்கிரஸ் கமிட்டி

இந்த வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் கூடுமிடங் களிலெல்லாம் தகராறு இல்லாமல் நடைபெறுவதாகக் காணவில்லை. வேதா ரண்ய மகாநாட்டுத் தலைவர் தேர்தல் சூழ்ச்சிகள் தமிழ்நாடு பத்திரிகையில் இருந்து தெரிந்திருக்கலாம். சென்னை காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சென்னை மவுண்ட்ரோட் மகாஜன சபை மண்டபத்தில் திரு. சீனிவாசய்யங்கார் காலிகளைக் கொண்டு போய் வைத்துக் கொண்டு கூட்டங்கூட்டியிருப்பதாய்த் தெரிகின்றது. அப்படி இருந்தும் அய்யங்காருக்கு விரோதமான கூட்டமே மெஜாரிட்டியாக வந்து கூடிவிட்டார்கள். திரு.சத்தியமூர்த்தி அக்கிராசனம் வகித்து, நமக்கு வேண்டிய வர்கள் போக, மற்றவர்கள் ஓட்டுச் செய்யாமலிருக்கும்படியாக தந்திரமாய் இத்தனையாந் தேதிக்குமேல் அங்கத்தினரானவர்கள் தவிர மற்றவர்கள் ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று ரூலிங் கொடுத்துவிட்டாராம். அதன் பேரில் திரு.சத்தியமூர்த்தி, திரு. கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரை ஏவிவிட்டுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை கன்னா பின்னா என்று வையச் சொன்னாராம். கூட்டம் தைரியமாய் எதற்கும் தயாராயிருந்து எதிர்க்கவே திரு.அய்யங்காரும் அவரது தாசர்களும், கூலிகளும் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம். பிறகு மற்றவர்கள் இருந்து...

சென்னை ஆதிதிராவிடர்  சுயமரியாதை மகாநாடு 0

சென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு

சகோதரர்களே! ஆதிதிராவிட சமூகத்தின் பேரால் சுயமரியாதை மகாநாடு கூட்டப் பட்டிருப்பதைக் கண்டு நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றேன். சிலர் சுயமரியாதை என்கின்ற பெயர் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், ஆனால் அதன் கொள்கைகள் எல்லாம் சரியென்றும் மிக்க அவசியமான தென்றும் சொல்லுகின்றார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் அந்த பெயரிலிருந்து தங்களுக்குச் சுயமரியாதை இல்லை என்று அர்த்தம் ஏற்படுகின்றதாம். இதற்கு நான் சொன்ன பதில் என்ன வென்றால் நமக்குச் சுயமரியாதை இருக்கின்றதா இல்லையா? என்பது வேறு விஷயம் என்றும் சுயமரியாதை சங்கம் என்று பெயரிடுவதாலேயே அதில் சேர்ந்தவர்கள் சுயமரியாதை அற்றவர்கள் என்கின்ற அருத்தமாகாதென்றும் அப்படியானால் இப்போது பலர் சன்மார்க்க சங்கம் என்பதாக பல சங்கங்கள் ஏற்படுத்து கின்றார்களே அச்சங்கங்களில் அங்கத்தினர்களாயிருப்பவர்களுக்குச் சன்மார்க்கமில்லை யென்பது பொருளா? என்றும், அச்சங்கம் ஏற்படுத்துபவர் கள் துன்மார்க்கர்களா? என்றும்தான் பதில் கேட்டேன். தவிர உண்மை யிலேயே நமக்குச் சுயமரியாதை உணர்ச்சி இருக்கின்றதா என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள். முதலாவது உங்களைப்...

சம்மத வயது கமிட்டி  மதமும் சீர்திருத்தமும் 0

சம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்

இளங்குழந்தைகளின் கலியாணங்களைத் தடுப்பதற்காக நமது நாட்டில் வெகு காலமாகவே முயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் அவை பயன்படாதிருக்க எதிர்முயற்சிகளும் செய்யப்பட்டு காலம் கடத்திவரும் விஷயம் தமிழ் மக்கள் அறிந்ததாகும். ஆனால் சமீப காலத்தில் மற்ற மேல் நாடுகளின் முற்போக்கைப் பார்த்த சிலர் இப்போது இதுவிஷயமாய் தீவிர கிளர்ச்சி செய்ய ஆரம்பித்ததன் பலனாகவும், தேக தத்துவ சாஸ்திரத்தின் முறைப்படியும், வைத்திய சாஸ்திர முறைப்படியும், குழந்தை மணங்களினு டையவும், குழந்தைச் சேர்க்கைகளினுடையவும், குற்றங்களை மக்கள் அறியத் தொடங்கியதன் பயனாகவும், பாமர மக்களுக்குச் சற்று கல்வியும் உலக அறிவும் எட்டுவதற்கு இடமேற்பட்டதன் பலனாகவும், குழந்தைகள் விவாகத்தைத் தடுக்க வேண்டுமென்கின்ற முயற்சியோடு குழந்தைகளின் சேர்க்கையையும் அதாவது சரியான பருவம் அடைவதற்கு முன் ஆண் பெண் சேர்க்கை கூடாது என்பதாகவும் கருத இடமேற்பட்டு, அவற்றைத் தடுக்க சட்டங்கள் செய்யவும் முற்பட்டு, சட்டசபைகளில் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நமது அரசாங்கத்தார் என்பவர்கள் நம் நாட்டைப் பொறுத்தவரை நமது நாட்டுப் பார்ப்பனர்களைப் போலவே சுயநலக்காரரும்...

தேவஸ்தானக் கமிட்டி              ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா 0

தேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா

திரு. ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு அவர்களுக்கும், மெம்பர் கனவான்கள் அவர்களுக்கும், மேற்படி கமிட்டி வைஸ் பிரசிடெண்டு ஈ.வெ.ராமசாமி வணக்கமாய் எழுதிக் கொண்டது:- கனவான்களே! மேற்படி கமிட்டியின் பொது மீட்டிங்குக்கும் ஸ்பெஷல் மீட்டிங்குக்கும் 4. 7. 29 ம் தேதி போடப்பட்டிருக்கும் அஜண்டா நோட்டீஸ் எனக்கு சென்னையில் கிடைத்தது. மேற்படி நோட்டீசானது என் கைக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே அந்த தேதியில் ஒரு முக்கியமான காரியத்திற்காக நான் சென்னையில் இருக்க வேண்டியதாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால் குறிப்பிட்ட மீட்டிங்குகளுக்கு ஆஜராக முடியாததற்கு வருந்துகிறேன். நிற்க, மேற்படி 4-ந் தேதியில் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு மீட்டிங்கான ஸ்பெஷல் மீட்டிங்கில் குறிப்பிட்ட தீர்மானமானது சற்று முக்கியமானதென்றும், ஒரு தடவை இதே கமிட்டியாரால் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கான்சல் செய்யத்தக்கதாய் இருப்பதால் அப்படி கான்சல் செய்யப்படுவதானது எனது முக்கிய கொள்கையை பாதிக்கக் கூடியதென்றும், மேலும் தேசத்தின் பொதுநல முற்போக்குக்கும், மனிதத்தன்மையின் உரிமைக்கும் நீதிக்கும் விரோதமானதென்றும் நான்...

காங்கிரசின் யோக்கியதை 0

காங்கிரசின் யோக்கியதை

இந்திய தேசீய காங்கிரசின் யோக்கியதைக்கும் கட்டுப்பாட்டிற்கும் தேசத்தில் எவ்வளவு மதிப்பும் செல்வாக்கும் பின்பற்றுபவர்களும் இருக்கின்றார்கள் என்பதற்குக் காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டியினுடையவும், திரு.காந்தியவர்களுடையவும் தீர்மானங்களின் கதியும் பின்பற்றுபவர்களின் யோக்கியதையும் பார்த்தால் விளங்காமற் போகாது. முதலாவது சர்வ கட்சி மகாநாட்டு தீர்மானம் என்பதை முஸ்லீம்களில் நூற்றுக்கு 97 பேர் மறுத்தும், தாழ்த்தப்பட்ட மக்களில் 100-க்கு 99 முக்காலே மூன்று வீசம் பேர் மறுத்தும், பார்ப்பனர்களில் 100-க்கு 95 பேருக்கு மேலாகவே வைதீகர்கள் என்பவர்களும் மறுத்ததோடு மற்றும் பார்ப்பனரல்லாதவர்களிலும் இந்து மகாசபையின் மூலமும் பார்ப்பனரல்லாதார் சபையின் மூலமும் அது மறுக்கப்பட்டு விட்டது. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் 33 கோடி இந்தியர்களில் அரசியல் பேரால் பிழைக்க இருக்கும் சிலராகிய விரல் விட்டெண்ணத் தக்கவர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஆட்சேபித்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அதுவும் எந்தக் காரணத்தால் மறுத்தார்கள் என்று பார்ப்போமானால் அது எல்லாவற்றையும் விட வேடிக்கையான சங்கதியாகவே தோன்றும். உண்மையில் அரசியல் திட்டம் என்பதாகிய குடியேற்ற...

ஈரோடு ஆலயப் பிரவேசம் 0

ஈரோடு ஆலயப் பிரவேசம்

ஈரோடு சர்க்கிள் தேவ°தானக் கமிட்டியார் 30-3-29 ல் செய்த தீர்மான மானது இதுவரையில் மாற்றப்படவில்லை. ஆனால் “தமிழ்நாடு” பத்திரி கையாலும், அதன் நிருபர்களாலும் திரு. வரதராஜுலுவாலும் இவ்விஷயத் தில் தங்களுக்கு ஏற்பட்ட பொறாமையால் எவ்வளவு தூரம் கேவலமான முறைகளில் மேற்படி தீர்மானத்திற்கு எதிரிடையாக விஷமம் செய்யப்பட முடியுமோ அவ்வளவும் விடாமல் செய்யப்பட்டு வருகின்றது. முதலாவதாக இத்தீர்மானம் செய்யப்பட்டபொழுதே இதைத் திரித்துக்கூறி தலையங்கம் எழுதிற்று. பிறகு சென்ற மாதத்தில் திருப்பூரில் கூடின தேவ°தான கூட்டத் தில் இத்தீர்மானம் நீக்கப்பட்டு விட்டதென்றும், சுயமரியாதைக்காரர்கள் குட்டிக்கரணம் போட்டுவிட்டார்கள் என்றும் மனதறிந்த பொய்யை வேண்டு மென்றே திரு. ராமசாமி மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்க பிரசாரம் செய்தது. இதை நாம் மறுத்து எழுதிய பிறகும், அது மனிதத் தன்மை முறையில் நடைபெறும் பத்திரிகையாயிருக்குமானால் அது தனது தவறு தலுக்கு வருந்தியிருக்கும். அப்படிக்கில்லாமல் மேலும் அதே காரியத்தை செய்யும் துறையில் முனைந்து நிற்கின்றது. அதாவது 8-7-29 ல்...

காங்கிரஸ்காரர்களின் துரோகம் 0

காங்கிரஸ்காரர்களின் துரோகம்

தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்த சம்மந்தமாக சர்க்காரார் ரயில்வே அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர்களை இம்சைப்படுத்தி வருவதைப் பற்றி சென்னை சட்டசபையில் விவாதிப்பதற்காக மற்ற விஷயங்களை ஒத்திப்போட வேண்டுமென்று ஒரு அவசரப் பிரேரேபணைக் கொண்டு வரப்போவதாக கோயம்புத்தூர் திரு.சி.எ°. இரத்தினசபாபதி முதலியார் பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தது யாவரும் அறிந்த விஷயமேயாகும். இதை அறிந்த காங்கிரஸ்காரர்கள் என்னும் அரசியல் பிழைப்புக் கூட்டத்தார்கள் திரு.முதலியார் இந்தப்பிரேரேபணையைக் கொண்டு வந்து பேசுவார்களேயானால் பார்ப்பன சூழ்ச்சியும் தேசீய புரட்டும் காங்கிரஸ் குட்டும் வெளியாகிவிடுமே என்பதாகக் கருதி திரு. சத்தியமூர்த்தி மூலம் திரு. முதலியாரால் இப் பிரேரேபணை பிரேரேபிக்கக் குறிப்பிட்டிருந்த காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் பிரேரேபிக்கப் போவதாக நோட்டீஸ் கொடுத்தார்கள். இதை உண்மை என்று நம்பிய முதலியாரும் மற்றும் தொழிலாள அனுதாபிகளும் அதில் கலந்து கொள்ளத் தீர்மானித்துத் தங்கள் பிரேரேபிப்பதற்கென்று தனிச்சமயம் கேட்காமல் இருந்து விட்டார்கள். இந்த நிலையில் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் பொறுப்பில்லாமல் தாங்கள் சூழ்ச்சிக்கு ஏற்றவிதமாய்...

தமிழ்நாடு மாகாண மகாநாடு 0

தமிழ்நாடு மாகாண மகாநாடு

தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண்யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும், ஆடம்பரங்களும் நடைபெற்றன. தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926-ல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக்கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர்களால் வேதாரண்யத்தில் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரசாரமும் செய்யப்பட்டது என்றாலும், அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்பனரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டு விட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும், அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரசாரம் செய்து திரு.சத்தியமூர்த்தியைத்...