Tagged: வாகனப் பேரணி

ஜூன் 11  வாகனப் பேரணி கழகத் தோழர்கள் பங்கேற்பீர்!

ஜூன் 11 வாகனப் பேரணி கழகத் தோழர்கள் பங்கேற்பீர்!

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு ஜூன் 11ஆம் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர்  கைது செய்யப்பட்ட நாள் 1991 ஜூன் 11. இதை நினைவு கூர்ந்திடவும் தமிழக அரசு ஏற்கெனவே எடுத்துள்ள 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவான முடிவை மீண்டும் நினைவூட்டியும் ஜூன் 11 அன்று வேலூர் சிறை வாயில் முன்பிருந்து காலை 8 மணிக்கு வாகனப் பேரணி புறப்படுகிறது. வேலூரிலிருந்து சென்னை கோட்டை நோக்கி வரும் இந்தப் பேரணியில் இரு சக்கரவாகனங்களும், நான்கு சக்கரவாகனங்களும் இடம் பெறுகின்றன. 7 தமிழர் விடுதலலைக்கான கூட்டமைப்பு ஏற்பாடு செய் துள்ள இந்தப் பேரணியில் கழகத் தோழர்கள் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். – கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 09062016 இதழ்

ஏழு தமிழர் விடுதலை கோரி வாகன பேரணி – ஜூன் 11 வேலூர்

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : ”ஏழு தமிழர் விடுதலை கோரி ஜூன் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு வேலூர் சிறைச்சாலை முன்பு துவங்கி சென்னை கோட்டை வரை நடைபெற உள்ள வாகன பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க கோரி இப்பேரணி நடைபெறுகிறது. 25 ஆண்டுகளாக தன் மகனுக்காக மட்டுமல்லாமல் அனைத்து சிறைவாசிகளுக்காகவும் நீண்டதொரு மனித உரிமைப் போராட்டத்தை நடத்திவரும் அற்புதம் அம்மாள் அவர்கள் தலைமையில் 7 தமிழர் விடுதலை கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் இந்த பேரணியை 7 பெண்கள் துவங்கி வைக்கின்றனர். சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 11 ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்ததமாக காவல்துறை விசாரணைக்கு...