Tagged: ராஜபக்சே

தலையங்கம்: அவமதிக்கிறது, இந்திய ஆட்சி!

தலையங்கம்: அவமதிக்கிறது, இந்திய ஆட்சி!

ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை களுக்கு உள்ளான வரலாற்றின் கொடூரத்துக்கு நீதி கேட்டால், ‘ஓட்டு அரசியல்’ என்று சிறுமைப்படுத்து கின்றன பார்ப்பன ஏடுகள். இனப்படுகொலை நடந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு கூட்டப்படுகிறதே என்பது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை. மன்மோகன் சிங் பங்கெடுக்காமல் தவிர்த்து விட்டாரே என்பதற்காக, அனலில் இட்ட புழுவாகத் துடிக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 11 முறை காமன்வெல்த் மாநாடு கூடியிருக்கிறது. இதில் 5 முறை இந்தியாவின் பிரதமர் பங்கேற்றது இல்லை; இது 6 ஆவது முறை. அவ்வளவு தான்! மன்மோகன் சிங் பங்கேற்காமல் போனதால் இலங்கை யுடனான உறவு துண்டிக்கப்பட்டுவிட்டதுபோலவும், அதற்குப் பிறகு எப்படி, தமிழர் உரிமைக்கும், மீனவர் பாதுகாப்புக்கும் இலங்கையிடம் பேச முடியும் என்றும் ‘இந்து’வின் ஆங்கில மற்றும் தமிழ் ஏடுகள் குடம் குடமாக கண்ணீர் வடிக்கின்றன. 2009 இல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தில் நடந்த நேரத்தில்கூட ராஜபக்சே தரப்பு நியாயங்களை எழுதிக் கொண்டிருந்த ஏடுதான் ‘இந்து’...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அமைப்புகள் எங்கள் நாட்டில் இருக்கின்றன. புகார் தெரிவித்தால் அரசு விசாரிக்கும். – ராஜபக்சே பேட்டி அப்படியா? இராணுவத்துக்கே மனித உரிமைப் பிரிவு என்று பெயர் மாற்றம் செய்து விட்டீர்களா? சொல்லவே இல்லை! இலங்கை தமிழர் பகுதியை பார்வயிடச் சென்ற ‘சேனல்-4’ தொலைக்காட்சிக் குழுவினர் ரயிலை சிங்களர்கள் மறித்து குழுவினரை திருப்பி அனுப்பினர்.  – செய்தி ஓகோ! ராஜபக்சே கூறிய மனித உரிமைக் குழு, இது தானா? இப்பத்தான் விளங்குது! கேரள முதல்வர் உம்மன்சாண்டி – மக்கள் சந்திப்பு திட்டத்தின் வழியாக மாவட்டந் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.       -செய்தி முதலமைச்சரை மக்கள் நேரிலேயே பார்க்கலாமா? என்ன சொல்றீங்க? நம்பவே முடியவில்லையே; எங்க தமிழ்நாட்டு மக்களும் கேரளாவுக்கு வந்து முதலமைச்சரை நேரிலேயே பார்க்க அனுமதிப்பீங்களா… ப்ளீ°….. பாட்னாவில் மோடி கூட்டத்தில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக நான்கு இந்து இளைஞர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கைது...

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

‘பன்னாட்டு விசாரணை’ குறித்த பல்வேறு தகவல்களை எளிமையாக விளக்குகிறது, இக்கட்டுரை. ஒரு நாடு தனது நாட்டில் நடக்கும் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க முடியாத நிலை ஏற்படும்போது, அங்கு பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடும் கடமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு. எனவே நியூயார்க்கில் உள்ள அய்.நா. பாதுகாப்புச் சபை, ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமைப் பேரவை ஆகிய அமைப்புகள் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றன. இவையன்றி அய்.நா. பொதுச் செயலர் /அய்.நா. மனித உரிமை ஆணையர், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்ற சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றனர். பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளே அதிக அதிகாரமிக்கதாகக் கருதப்படுகின்றன. பன்னாட்டு விசாரணை எவ்வாறு நடக்கும்? அய்.நா.வின் சார்பில் நடத்தப்படும் பன்னாட்டு விசாரணைக்கு என குறிப்பிட்ட ஒரு வடிவம் ஏதும் இல்லை. ஒரு நாட்டில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வு அல்லது தற்போதும் தொடரும் நிகழ்வுகள் குறித்த உண்மை நிலையை அறியும்...

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!:- 45 அமைச்சர்களுடன் (23 பேர் கேபினட் அமைச்சர்கள்; 22 இணை அமைச்சர்கள்) மோடி பிரதமராக மே 26 அன்று பதவி ஏற்றார். தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் கூட  ‘கேபினட்’ அமைச்சராகவில்லை. வெற்றி பெற்ற ஒரே பா.ஜ.க. வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இணை அமைச்சராகியுள்ளார்.  திருச்சியில் படித்து, டெல்லியில் தங்கிவிட்நிர்மலா சீதாராமன் (பார்ப்பனர்) தேர்தலில் போட்டியிடாமலேயே இணை அமைச்சராகி விட்டார்.  சுஷ்மா சுவராஜ், மேனகா, நஜிமா ஹெப்துல்லா, ஹர்ஸ்மிரத் கவுர் பதல், உமாபாரதி, ஸ்மிருதி ராணி என 6 பெண்கள் கேபினட் அமைச்சர்களாகி யுள்ளனர்; மேலே குறிப்பிட்பெண் இணை அமைச்சர்.  பா.ஜ.க. வைச் சார்ந்த அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் இல்லாமலேயே இந்தூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க, அமைச்சராக இருந்தபோது அன்புமணி அனுமதித்ததற்காக அவர் மீது சி.பி.அய். வழக்கு உள்ளது. அதன் காரணமாகவே பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது....