Tagged: யோகா

‘யோகா’வை முன்னிறுத்தி மதப் பிரச்சாரமா?

‘யோகா’வை முன்னிறுத்தி மதப் பிரச்சாரமா?

‘யோகா’வை சர்வதேச அளவில் அங்கீகரிக்கச் செய்து விட்டதில் மோடிக்கு அப்படி ஒரு பெருமை. ஜூன் 21 ‘யோகா நாள்’! மோடி அமைச்சர்கள் அத்தனை பேரும் ஆங்காங்கே ‘யோகா’ செய்யும் நிர்ப்பந்தம். ‘யோகா’ என்பது மூச்சுக் கலை பயிற்சி என்கிறார்கள். இதை ஏற்பதும் ஏற்க மறுப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. பிரச்சினை எங்கே வருகிறது என்றால், இதை இந்து மதத்தோடு முடிச்சுப் போடும் போதுதான். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் இந்திய தூதரகங்கள், சர்வதேச நாளில் நடத்தும் ‘யோகா’ நிகழ்ச்சிகளுக்கு  ‘சங் பரிவார்’ முன்னணி அமைப்புகளுடன் இணைந்து செயல் படுகின்றன. இந்துத்துவ அரசியலுக்கு யோகாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் இவர்களின் உள்நோக்கம் மிகவும் அற்பமானது. மோடியின் யோகா குரு எச்.ஆர். நாகேந்திரா. இவர் பெங்களூருவிலுள்ள ‘விவேகானந்தா யோகா அனுசந்தான் சமந்தானா’ என்ற பல்கலைக்கழகத்தின் வேந்தராக வும் இருக்கிறார். அரசு ஆலோ சனைப்படி இவரது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ‘யோகா’வை பாடத் திட்டத்தில்...

‘ஈஷா’ ஜக்கி வாசுதேவ் ‘கிரிமினல்’ பின்னணி

2011ஆம் ஆண்டு சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு ‘ஈஷா’ மய்யத்தின் ஜக்கி வாசுதேவ் உரையாற்ற  அழைக்கப்பட்டதை எதிர்த்து சேலம் நகர பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட துண்டறிக்கை – ‘ஜக்கி வாசுதேவ்’  மோசடிகளை கிழித்துக் காட்டுகிறது. இந்த செய்திகள் ‘இலஷ்மி நரசிம்மா’ என்ற மாத இதழில் (15.4.2011)  வெளிவந்துள்ளது. இத் துண்டறிக்கை, “யோக்கியன் வருகிறான்… சொம்பெடுத்து உள்ளே வையுங்கள்!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ஈஷா மய்யத்தில் தங்களுடைய இரண்டு மகள்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு  சன்யாசியக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மய்யத்திலிருந்து மீட்டுத் தர வேண்டும் என்றும் கோவை வடவள்ளியைச் சார்ந்த பேராசிரியர் காமராஜ், கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் தந்துள்ளார். இந்த நிலையில் ஜக்கி வாசுதேவ் என்பவர் , யார் என்பதை விளக்குகிறது இந்தத் துண்டறிக்கை. “சேலம் அரசு கலைக் கல்லூரியில் வருகிற 30.9.2011 முதல் 2.10-2011 வரை ஈஷா யோகா என்கிற பெயரில் தியானலிங்கம் என்கிற மதப் பிரச்சாரம் செய்ய ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ணமூர்த்தி’...

ஈஷா மையத்தில் குழந்தைகள் சித்திரவதை: அதிர்ச்சித் தகவல்கள்

ஈஷா யோகா மையத்தில் அத்துமீறல்கள் நடப்பது உண்மைதான் என அந்நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விலகி வந்த நிர்வாகி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். மதுரை திருப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் ஞாயிறு அன்று ஈஷா யோகாமையம் குழந்தைகளின் சித்தரவதைக் கூடமாக செயல்படுவதாகவும், அதிலிருந்து தனது மகன்களை மீட்டு வந்து விட்டதாகவும், மற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு மதுரையில்  இருந்து தனது பிள்ளைகளையும் அழைத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் ஈஷா யோகா மையம்  குறித்தும், அங்குள்ள சமஸ்கிருத குருகுல பள்ளிகளின் சிறப்புகள் குறித்தும் தொடர்ச்சியாக வந்த செய்திகள்  எனது பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. இதனையடுத்து எனது  மூத்த மகனை ஐந்து இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஈஷா யோகா மையத்தில் செலுத்தி 2012 ஆம் ஆண்டு சமஸ்கிருத பள்ளியில் சேர்த்தோம்....