Tagged: மாவட்ட பொறுப்பாளர்கள்

கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் திருப்பூர் 11122016

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கழக தலைவரிடம் முதல் தவணையாக ரூ.1,67,500(ரூபாய் ஒரு லட்சத்து அறுபத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர், வீரபாண்டி பிரிவு, கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, தோழர் சூலூர் பன்னீர்செல்வம், சங்கீதா, யமுனா, கோவை கிருஷ்ணன், நிர்மல், அகிலன், நீதிராசன், கார்த்தி, பரிமளராசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிதி வழங்கியவர்கள் விவரம் : முகில் ராசு – 70,000 (முதல் தவணை) துரைசாமி – 50,000 ராமசாமி – 10,000 முத்து – 10,000 பார்வதி, நீதிராசன் – 5000 சாலினி, சத்யமூர்த்தி – 2000. பிரசாந்த் – 1000 அகிலன் -5,000 இளஞாயிறு...

0

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 06.09.2015 அன்று காலை 09.30 மணிக்கு தக்கலை,ஜோஸ் அரங்கில் நடைபெற்றது. தோழர் நீதிஅரசர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட தலைவர் தோழர் ஜா.சூசையப்பா தலைமை உரை நிகழ்த்த,மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா வாழ்த்திப் பேசினார். மாநில அமைப்புசெயலாலர் தோழர் ரத்தினசாமி அவர்கள் பெரியாரியல் எனும் தலைப்பில் 2 மணிநேரம் உரையாற்றினார்.பிறகு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பிற்பகல் நிகழ்வாக மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் ”கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதீயம்,நாத்தீகம்’ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார். புதிய பொறுப்பாளர்களாக, மாவட்ட தலைவர் : தோழர் சதா, மாவட்ட செயலாளர் : தோழர் தமிழ்மதி, மாவட்ட பொருளாளர் : தோழர் மஞ்சு குமார், பெரியார் தொழிலாளர்கழக மாவட்ட தலைவர் தோழர் நீதிஅரசர், குழித்துறை நகர தலைவர் கே.எஸ்.தாமஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இக்கலந்துயாடல் கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் பெரியார் படம் அச்சிட்ட குறிப்பேடும் வழங்கப்பட்டது.