Tagged: மகாமகம்

‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே!

‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே!

1933ஆம் ஆண்டில் ‘குடிஅரசில்’ மாமாங்கம் குறித்து ‘சித்திரபுத்திரன்’ என்ற பெயரில் பெரியார் எழுதிய உரையாடல்: புராண மரியாதைக்காரன் கேள்வி: ஐயா, சுயமரியாதைக்காரரே! கும்பகோண மாமாங்கக் குளத்தில் ஒரு அற்புதம் நடக் கின்றதே அதற்குச் சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன் பதில்: என்ன அற்புதமய்யா? பு.ம.: மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும், அதில் எவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே, அந்தக் குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை. இதற்குப் பதில் சொல் பார்ப்போம். சு.ம.: இது ஒரு நல்ல புத்திசாலித் தனமான கேள்விதான். இதன் காரணம் சொல்லுகிறேன். சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது, மாமாங்கக் குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசி பாலிட்டியார் இறைத்து விடுவார்கள். பிறகு ஓர் இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும். அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்பு மாதிரி...

‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!

‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!

71 ஆண்டுகளுக்கு முன் பெரியார் எழுதிய கட்டுரை ‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு! 1945ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் கும்பகோணம் ‘மகாமகம்’ குறித்து பெரியார் எழுதிய கட்டுரை இது. 71 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கருத்துகள் இன்றைக்கும் பொருந்தி வருவதை இக்கட்டுரையைப் படிக்கும்போது புரிந்துணர முடியும். கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்குத் திராவிட மக்களை வரும்படியாக, கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்த வண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன. பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றிப் பிரமாதப்படுத்தி மக்களை அங்குச் சேர்ப்பிக்க – தள்ளிவிட முயற்சிக்கின்றன. இந்த 20 ஆவது நூற்றாண்டுக்குப் பக்கத்தில் வாழும் திராவிட மக்கள் இப்படி ஓர் அறிவும், மானமும் சூன்யமான ஓர் உற்சவத்தை மதித்து, கும்பகோணம் சென்று கூமட்டைகள் ஆவதென்றால், இதை உலகின் 8ஆவது அதிசயமென்றுதான் சொல்ல வேண்டும். கும்பகோணத்தில் இவ்வளவு கூட்டம் சேர்க்கப்படுவதற்கு மாமாங்கத்தன்று அங்கு என்ன புதிய சங்கதி காணப்படப் போகிறது என்பதை யோசிப்போம்....

இந்து மதப் பண்டிகைகள்

சொர்க்கவாசல் மகிமை மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச்செலவு செய்து கொண்டு போவதும்,  தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் றீக்கிக் கொண்டு  பழனி முதலிய மலைகளுக்குப் போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச்  சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்ப தும், வெட்டித் துண்டாக்கப்பட்ட  குழந்தை உயிர்பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்க மில்லாமல், சொல்லுவதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும்  `பஞ்சாமிர்தம்’ எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டது தானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன? சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே,  அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள் : நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின்...