Tagged: பொள்ளாச்சி ஆனைமலை திவிக

காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு

காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி காளியப்பகவுண்டன் புதூரில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட தோழர் காசு.நாகராசன் மற்றும் தோழர்களையும் மருத்துவமனையில் சந்தித்து விட்டு பின்னர் ஊரில் சேதமடைந்த பகுதிகளையும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்… பேட்டி பார்க்க இங்கே சொடுக்கவும் பேட்டியில் காவல்துறை இரண்டு நாள் அவகாசம் அளிக்க கேட்டுள்ளனர் அதற்குள் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாடு தழுவிய அளவில் பெரிய போராட்டம் காசு.நாகராசன் க்கு ஆதரவாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.. பின்பு ஊரில் கூடியிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் ஊரில் பொதுகூட்டமாகவே நிகழ்ச்சி நடந்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம், தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமுமுக, இந்திய ஜவ்ஹீத் ஜமாத் கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், மக்கள் விடுதலை முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, அம்பேத்கர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு மாணவர் மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

மத சார்ப்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை வைப்பதும் , ஆயுத பூஜை செய்வதும் சட்டப்படி குற்றமாகும் – பொள்ளாச்சி ஆனைமலை

திராவிடர் விடுதலைக் கழகம்- பொள்ளாச்சி & ஆனைமலை பகுதியில் மதசார்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் வைப்பதும் ஆயுதபூஜை வழிபாடு நடத்துவதும் சட்ட விரோதமாகும் என்றும், அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே என்றும் கழகத் தோழர்களின் பதாகை மற்றும் சுவரொட்டிகள்