Tagged: பொது உரையாடல்

மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பொது உரையாடல் தருமபுரி 07042017

செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரால், ஆந்திர காவல், வனத்துறை அதிகாரிகளால் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு, ஆந்திர வனப்பகுதிக்குள் கொண்டு சென்று 20 அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் 06042015 அன்று சுட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவாய் 07042017 அன்று மாலை, தருமபுரி வள்ளலார் திடலில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு அமைப்பு, கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து பொது உரையாடல் நடைபெற்றது. கலை நிகழ்வுகளுடன் தொடங்கிய அந்நிகழ்வில் மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆணைகள், திருப்பதி, ஆந்திர உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்துகொண்டுள்ள வழக்கின் நிலவரம், தேவைப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாற்றினார். அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செய்லாளர் மல்லை சத்யா,...

மக்கள் கண்காணிப்பகம் நடத்தும் “பொது விவாதம்”

மக்கள் கண்காணிப்பகம் நடத்தும் “பொது விவாதம்” நாள் : 07.04.2017. வெள்ளி. நேரம் : மாலை 6 மணி. இடம்: தர்மபுரி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்பின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று ஆந்திரமாநில செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டு சுட்டுபடுகொலை செய்யப்பட்ட அப்பாவி20 தமிழக கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் 20 தமிழர்கள் படுகொலையான வழக்கில் தமிழக அரசு தலையீடு செய்யக் கோரியும் புலம் பெயரும் தமிழக கூலிதொழிலாளர்களின் பாதுகாப்பைஉறுதிப்படுத்தக் கோரியும் 07.04.2017 தர்மபுரியில் பொதுஉரையாடல் நடைபெற உள்ளது.