Tagged: பேராசிரியர் அருணன்

வானியல் அறிவு: அன்றும் இன்றும்

இதுவொரு நுணுக்கமான விஷயம். நமது முன்னோர்கள் வானத்தைக் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறார்கள். தினசரி மாறும் காட்சியையும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முன்பு கண்ட காட்சியே மீண்டும் தோன்றுவதையும் அவர்கள் ஆச்சரியத்தோடு நோக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து நாள்காட்டி (calendar) ஒன்றை உருவாக்கவும் அவர்களால் முடிந்தது. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் ஒரு நீள் வட்டப் பாதையில் (Ecliptic) சுற்றி வருகிறது. இதற்கு அது 12 மாதங்களை எடுத்துக் கொள்கிறது. அந்தக் காலத்தில் சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கான காலம் 12 மாதங்கள் என்பதை அறிந்திருந்தனர். சந்திரனைப் பொறுத்த  வரை பிரச்சினை இல்லை. இதே  தளத்தில் அதுதான் பூமியைச் சுற்றி வருகிறது. இதற்கு அது எடுத்துக்கொள்ளும் காலம் 27 நாட்கள். சூரியனை பூமி சுற்றி வரும் நீள் வட்டப் பாதையை ஒட்டியுள்ள ஒரு பகுதியைத்தான் zodiac என்கிறார்கள். ‘இது நாமே கற்பிதம் செய்து கொள்கிற பகுதி’ (lntroducingAstronomy-j.B.Sidgwick ) என்கிறார்கள்...

கிரகங்களிலும் ஜாதி

கிரகங்களைப் பற்றிய ஜோதிடர்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை. கிரகங்களை ஆண், பெண் என்று மட்டுமல்ல ‘அலி’ என்றுகூட வகைப்படுத் தியிருக்கிறார்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் அது நிஜமே. சூரியன், செவ்வாய், குரு ஆண்கள்! சந்திரன், சுக்ரன், ராகு பெண்கள்! புதன், சனி, கேது ‘அலி’கள்! மனிதர்களைப் போல் கிரகங்களைப் பாவிக்க  ஆரம்பித்து விட்டால் பிறகு சகல கல்யாண குணங்களையும் கொடுத்துவிட வேண்டியது தானே. எந்தக் கிரகம் உயரம், குட்டை, சமம்? எது வெள்ளை, கருப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை? எது எதற்கு என்ன உடைவாகனம் யாது? என்றெல்லாம்   பட்டியலிட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சாதிப் பாகுபாடுகூட வகுத்து விட்டார்கள்!  குரு, சுக்ரன் – பிராமண ஜாதி; சூரியன், செவ்வாய்- ஷத்திரிய ஜாதி; சந்திரன், புதன் – வைசிய ஜாதி; சனி – சூத்திரஜாதி; ராகு, கேது – சங்கிரம ஜாதி – என்று எழுதி வைத்திருக்கிறார்கள். படுமோசமான கிரகம் என்றும், ஏழரை...

சோதிடத்தில் 9 கிரகங்களில் பூமி இல்லை!

பேராசிரியர் அருணன் எழுதிய ‘மூடநம்பிக்கை களிலிருந்து விடுதலை’ நூலிலிருந்து. ஜோதிடம் ஓர்அறிவியல் என்று கதை விடுகிறார்கள். இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவருக்கு – ஜோதிடருக்கு – ‘கடவுள் அருள்’ இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். ‘ஜோதிடமும் ஒரு விஞ்ஞானமே’ என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே. எனினும் பலரது நெஞ்சங்களிலும் எழுகிற ஒரு கேள்வி என்னவென்றால் ‘கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு தானே சோதிடம் கணிக்கிறார்கள். நாம் வாழுகிற இந்த பிரபஞ்சத்தில்தானே கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அவற்றின் நிலை மாற்றங்கள் மனிதனை பாதிக்காதா?’ என்பதாகும். இது சற்று விரிவாக விசாரணை நடத்த வேண்டிய விஷயம். முதலில் கிரகங்கள் குறித்து இந்த  ஜோதிட வித்வான்கள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்போம். ‘சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு,கேது என்று ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. இவற்றின்...

சீமானின் அநாகரீகம்: பாண்டேயின் பார்ப்பனியத்துக்கு கழகம் கண்டனம்

‘தந்தி’ தொலைக்காட்சியில் மூத்த பொதுவுடைமைவாதி அருணனை ஒருமையில் இழிவாகப் பேசிய சீமானையும், இதை கண்டிக்காத ‘தந்தி’ தொலைக்காட்சி நெறியாளர் பாண்டேயையும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டித்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கை. ‘தந்தி’ தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு நேரலை விவாதத்தில் பங்கு கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தை முன் வைத்த மூத்த பொதுவுடமைவாதி, எழுத்தாளர், பேராசிரியர் அருணனை அருவருக்கத்தக்க வகையில் தடித்த வார்த்தைகளால் பேசியது கண்டிக்கத்தக்கதாகும். தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தையோ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கும் போது அதற்கு தக்க பதிலை, தன் நிலைப் பாட்டை நாகரீகமாக வெளிப்படுத்துவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்தில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். மாற்றுக் கருத்துக்கு தக்க பதில் சொல்ல இயலாத நிலையில் ஒரு மூத்த பொதுவுடமைவாதியை நோக்கி, ‘உனக்கு தத்துவம் என்ன உள்ளது?’ என கேட்பதும், ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசுவதும், மோசமாக...