Tagged: பெரியார் முழக்கம் 13022014 இதழ்

பிப்.25இல் மேட்டூரில் இரு பெரும் விழாக்கள்!

பிப்.25இல் மேட்டூரில் இரு பெரும் விழாக்கள்!

கொள்கை உறவுகளே!        தோழமை நெஞ்சங்களே! மேட்டூர் பெரியார் இயக்கத்தின் கொள்கைப் பாசறை; தோழர் கொளத்தூர் மணி தலைமையில் சுமார் 40 ஆண்டுகாலமாக நமது சமுதாயத்தின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றுகிறோம்! தாங்கள் அறிவீர்கள். இது ஒரு தொடர் ஓட்டம். பெரியார் தந்த கொள்கைச் சுடரை ஏந்தி ஓடுகிறோம். திராவிடர் கழகமாக, பெரியார் திராவிடர் கழகமாக – இப்போது திராவிடர் விடுதலைக் கழகமாக பயணம் தொடருகிறது. அண்மைக் காலமாக கடந்து வந்த பாதையின் – சில சுவடுகள் இதோ: 2007இல் ஜாதி-தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம். இறுதியில் தீண்டாமையை அடையாளப்படுத்தும் தேனீர்க் கடை இரட்டைக் குவளைகளை உடைத்து – கைது. 2010இல் இரட்டை சுடுகாடுகளை இடிக்கும் போராட்டம் – கைது. 2012இல் ஜாதிய வாழ்வியலை எதிர்த்து ஊர்-சேரி பிரிவினைக்கு எதிராகப் பரப்புரைப் பயணம். 2013இல் 40 நாட்கள் சுயமரியாதை சமதர்மப் பரப்புரைப் பயணம். ஜாதி மறுப்புத் திருமணத் தம்பதியினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில்...

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், “ஐயா, உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கன்னு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க” என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார். உள்ளே… கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும், ‘வணக்கம் ஐயா!’ என்று கும்பிடுகிறோம். “வாங்க… வாங்க… ரொம்ப சந்தோசம்…” எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே, “இப்படி உட்காருங்க” என்கிறார். சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள்...

உயிர் தோன்றியது கடவுள் சக்தியால் அல்ல!

உயிர் தோன்றியது கடவுள் சக்தியால் அல்ல!

உலகப் புகழ் பெற்ற தனது மூலதனம் நூலை “உங்களுடைய தீவிர அபிமானி” என்று கையெழுத் திட்டு கார்ல் மார்க்ஸ் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். அந்த நபர் “பரிணாமவியலின் தந்தை” சார்லஸ் டார்வின். டார்வின் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” என்ற நூலைப் படித்துவிட்டு, வரலாற்றுப் பொருள் முதல் வாதத்துக்கு அந்த நூல் அடிப்படையாக இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வின் கண்டறிதல் அந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தியிருந்தது. கடவுளே மனித இனத்தைத் தோற்றுவித்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில், “இல்லை, அனைத்து உயிரினங்களும் இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப் பரிணாம வளர்ச்சியில் உருவானவை” என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் டார்வின் நிறுவினார். அதற்காக இன்றுவரை தூற்றப்பட்டு வருகிறார். அறிவியல் உலகின் இரண்டாவது புரட்சி என்று டார்வின் பரிணாம வியல் தத்துவத்தைக் கூறலாம். பூவுலகில் உயிரும் மனித இனமும் எங்கிருந்து வந்தன என்ற அடிப் படைக்  கேள்விக்கான விடையை, பரிணாம வளர்ச்சிக் கொள்கை சொல்கிறது. சரி, பரிணாம வளர்ச்சிக்...

உடன்கட்டை ஏற முடியாது…

உடன்கட்டை ஏற முடியாது…

ஒரே மதம்; ஒரே ஜாதி உனக்கும் எனக்கும் ஒரே ஊர் – வாசுதேவ நல்லூர்… நீயும் நானும் ஒரே மதம்… திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பும்கூட… உன்றன் தந்தையும் என்றன் தந்தையும் சொந்தக் காரர்கள்… மைத்துனன் மார்கள். எனவே செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே. – மீரா   ‘சாமி’க்கு மாலை போட… என்னை விட்டுவிட்டு சாமிக்கு மாலைபோட உனக்கு உரிமை உண்டென்றால் உன்னை விட்டுவிட்டு வேறு ஆசாமிக்கு மாலைபோட எனக்கும் உரிமை உண்டுதான் – அறிவு மதி   இல்லாத போது… நான் உன்னை நேசிக்கிறேன் ஏற்றுக் கொள்கிறேன் நான் உன்னைப் புரிந்து கொள்கிறேன் நான் உன்னை சுதந்திரம் உள்ளவளாக்குகிறேன் நீ இங்கே இல்லாதபோது மட்டும் – மனுஷ்ய புத்திரன்   அலையும் மீன் அகப்பட்டுக் கொள்ளத்தான் இந்த மீன் அலைகிறது! தொட மாட்டோம் என்று தூண்டில்கள் சொல்லிவிட்ட பிறகும்! – மு. மேத்தா  ...

பிப்.14 காதலர் நாள் – சிந்தனைகள் : காதல் பற்றி பெரியார்

பிப்.14 காதலர் நாள் – சிந்தனைகள் : காதல் பற்றி பெரியார்

உணர்ச்சிகளால் உந்தப் படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரித லோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து. “உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண் களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங் களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமை யாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காத லாகும்!”      – குடிஅரசு 21.7.45 “திடீரென்று காதல் கொள் வது, பிறகு கஷ்டப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது; என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக் காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல் வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால் – காதலும் பொய் கடவுளும் பொய் என்றுதான் அர்த்தம்.”  – விடுதலை 24.5.47 “ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொரு வர் அறிந்து...

உலகத் தமிழர்களின் ஒற்றை கோரிக்கை :இலங்கை போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை!

உலகத் தமிழர்களின் ஒற்றை கோரிக்கை :இலங்கை போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை!

மீண்டும் மார்ச் மாதம் அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரப் போவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா என்ற இரண்டு கேள்விகளுக்குள் பிரச்சினைகளை முடித்து விடுவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. அமெரிக்க தீர்மானத்தின் உள்ளடக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டியது அவசியமாகும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்து முடிந்த வுடனேயே 2009இல் அய்.நா. மனித உரிமைக் குழுவில் சுவிட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம், இனப்படுகொலை என்றுகூட குறிப்பிடப்படவில்லை. மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. அந்தத் தீர்மானத்தை முடக்கி தோல்வியடையச் செய்வதில் இந்தியா, அய்.நா.வில் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு இலங்கைக்காக ஆதரவைக் கேட்டது. தீர்மானத்தை முடக்கியதோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசு, “பயங்கரவாதத்தை” ஒழித்துவிட்டதைப் பாராட்டி, ஒரு பாராட்டுத் தீர்மானத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தது. அய்.நா.வில் அத்தீர்மானம் நிறைவேறியது. 2012 ஆம் ஆண்டில் அய்.நா.வில்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

நாய் வளர்த்தால் குடும்பப் பிரச்சினை வராது; அது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது.  – அமைச்சர் ஜெய்பால் அரசு விழாவில் பேச்சு நல்ல யோசனை. அப்படியே அம்மா விடம் சொல்லி விலை இல்லா நாய் வழங்கும் திட்டத்தை அறிவிக்கச் சொல்லுங்க. தேர்தலில் குடும்பம் குடும்பமா மகிழ்ச்சியா வாக்களிப் பாங்க! மும்பையில் ஏழுமலையான் கோயில் கிளையை கட்ட – மகாராஷ்டிரா அரசிடம் நிலம் வாங்க தேவஸ்தானம் முடிவு. – செய்தி அரசிடம் நிலம் வாங்கிடுவீங்க! ஏழுமலையானை யாரிடமிருந்து வாங்கப் போறீங்க? முடிகொட்டும் புற்று நோயாளிகளுக்கு ‘விக்’ தயாரிச்சு சென்னை கல்லூரி மாணவிகள் தங்கள் தலையை மொட்டைப் போட்டு முடிக் கொடை வழங்கினார்கள்.       – செய்தி “காணிக்கை”யை, “கொடை”யாக மாற்றிய சகோதரிகளே! நீங்களே அழகானவர்கள்! கெஜ்ரிவால் ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும்; சென்னையில் ஆம் ஆத்மி கட்சி அலு வலகம் முன் காங்கிரஸ் போராட்டம். – செய்தி ஒரு சந்தேகம்! இதுக்குப் போராட வேண்டிய இடம் காங்கிரஸ்...