Tagged: நிறைவு விழா பொதுக்கூட்டம்

பயணம் வெற்றி: மகிழ்ச்சிப் பூரிப்பில் கழகத் தோழர்கள் மாநாடுபோல் நடந்த ஆத்தூர் விழா

“நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க  சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆகஸ்டு 7 முதல் 12 வரை நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம்,  ஆகஸ்டு 12 வெள்ளி மாலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் எழுச்சியுடன் நடந்தது.  6 நாள் பயணத்தையும் முடித்துக் கொண்டு ஆத்தூரில் கழகச் செயல் வீரர்கள்  திரண்டிருந்த காட்சி ஒரு மாநாடு போலவே இருந்தது. பேய், பில்லி, சூன்யம், சோதிடம், தீ மிதித்தல் உள்ளிட்ட மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை ஊர்  ஊராகச் சென்று தோழர்கள் வீதி நாடகம், மந்திரமா-தந்திரமா பாடல்கள் வழியாக விளக்கியபோது மக்கள் தந்த ஆதரவு,  தோழர்களை உற்சாகக் கடலில் மூழ்கச் செய்து விட்டது. பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் இசை  நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சிகளை சில நிமிடங்கள் நடத்தினார். சேலம் பிரபு குழுவினர் இரண்டு வீதி  நாடகங்களை நடத்தினர். தொடர்ந்து ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினரின் ‘ஒன்றுமில்ல’...

எழுச்சியுடன் நடைபெறும் பரப்புரை பயணம் ஆத்தூரில் சுவரெழுத்து

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கக்தோடு திவிக முன்னெடுக்கும் நான்கு திசைகளிலிருந்தும் அறிவியல் பரப்புரை பயணத்தின் நோக்கத்தை வலியுறுத்தி 12082016 அன்று நடைபெற உள்ள நிறைவுரை பொதுக்கூட்டத்தின் சுவரெழுத்து  இராணிப்பேட்டை ஆத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் சிறப்புரையோடு.