Tagged: நிதி

வெள்ள மீட்பு பணியில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் பெய்துள்ள வரலாறு காணாத பெருமழையின் காரணாமாக அனைத்து தரப்பு மக்களும் தாங்கொணா துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற வெள்ள மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.இந்த மக்கள் பணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பணிகளை செய்து வரும் கழக தோழர்கள் உணவு தயாரித்து வழங்குதல்,உடைகளை விநியோகித்தல், படகு மூலம் வீடுகளில் சிக்கிகொண்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கழகத்தின் இப்பணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியாகவும், உடைகள்,உணவு பொருட்களாகவும் தோழர்கள் பலர் வழங்கிவருகிறார்கள். நிதியாக, கடலூர் பகுதிக்காக கத்தார் நாட்டைச் சேர்ந்த தோழர் காதர் மீரான் அவர்கள் வழியாக ரூ 1,10,000 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார்கள். அத்தொகை கடலூர் ஆலப்பாக்கம் பகுதிக்காக செலவிடப்படுகிறது. சென்னை பகுதிக்காக குவைத்தில் உள்ள கழக...