Tagged: திராவிடர் கழகம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்!

காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று – திரும்பத் திரும்பப் பரப்பப்படும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு பதில் தருகிறார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. திராவிடர் கழகம் – பெயர் மாற்றம் ‘துருளுகூஐஊநு’ என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்றும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பாக ‘நீதிக்கட்சி’ என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற, அதன் 14 ஆவது மாகாண மகாநாட்டில், அதுவரை நீதிக்கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகக் கூட இல்லாதிருந்த பெரியாரை, தன் தலைவராக தேர்ந்தெடுத்தது. இராஜாஜி அமைச்சரவை பதவியை விட்டு விலகி யிருந்ததால், எதிர்க் கட்சியான நீதிக்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் கவர்னர் ஜெனரலும், கவர்னரும் இருமுறையும், தானும்...

தி.க. பொருளாளர் கோ. சாமிதுரை முடிவெய்தினார்

தி.க. பொருளாளர் கோ. சாமிதுரை முடிவெய்தினார்

  திராவிடர் கழகப் பொருளாளர் மானமிகு கோ. சாமிதுரை (81), 9.11.2013 அன்று சென்னையில் முடிவெய்தினார். தி.மு.க. தலைவர் கலைஞர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரது உடல், சொந்த ஊரான கல்லக்குறிச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடந்தன. தி.க. தலைவர் கி.வீரமணி இறுதி மரியாதை செலுத்தினார். வழக்கறிஞரான கோ. சாமிதுரை, வழக்கறிஞர் தொழிலைவிட்டு, முழு நேரம் திராவிடர் கழகத் தலைமைக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். அவரது குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பெரியார் முழக்கம் 14112013 இதழ்

உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்

உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்

‘இந்த ஊருக்கு சுமார் 20, 25 வருடங்களுக்கு முன்பு (அதாவது 1922, 23) இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறேன். அப்போது காங்கிர°காரனாய் வந்தேன். அதன் பிறகு இப்போதுதான் வர வாய்ப்புக் கிடைத்தது. இதுவும் நீங்கள் ஒரு வருஷ காலமாய் எங்களை அடிக்கடி வந்து அழைத்ததன் பயனாக இன்று வர முடிந்தது. நாட்டின் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல், கிராமங்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு கிராமத்தையும் அங்குள்ள செல்வாக்குள்ள யாரோ ஒருவர் இருவர் அடக்கி ஆண்டு தங்கள் நலனுக்கு ஏற்ற வண்ணம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கள் வரவு மிகவும் கஷ்டமாகவும் அதிருப்தியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. இந்த வெறுப்பு நான் ஊர்வலம் வந்தபோது நன்றாய்த் தெரிந்தது. எப்படியெனில் பல சுவர்களில் என்னைப் பற்றி நீங்கள் புகழ்ந்து எழுதி வரவேற்புக் கூறியிருக்கிறீர்கள். ஆனால் சில சுவர்களில் ‘சாமி இல்லை என்னும் பாவி இராமசாமி ஒழிக’ என்று எழுதப்பட்டிருந்ததையும் நான் பார்த்தேன். இதன் காரணம் என்ன?...

எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதான் – இளவேனில்  

பயனற்ற வாதங்களால் பொழுதழிக்கும் வேலையற்றதுகளின் போக்கை `மயிர் பிளக்கும் வாதம்’ என்று மக்கள் எள்ளலாய்க் குறிப்பிடுவார்கள். உடலும் பொருளும் தேய்ந்துபோன ‘மைனர்’களுக்குத்தான் இம்மாதிரியான மயிர் பிளக்கும் வாதங்கள் உற்சாகம் தரும் என்றில்லை. புலமைப் பகட்டர்களுக்கும் இதில் போதை ஏறுவதுண்டு. சித்தினி பத்தினியாக இருக்க முடியுமா? ‘இலை’ வடிவம் எம்மாதிரியானது? என்கிற ஆராய்ச்சியில் மைனர்களுக்கு உற்சாகம் என்றால், பெரியார் தாடியில் எத்தனை மயிர்? திராவிட இயக்கம் என்பது விஞ்ஞான வகைப்பட்டதா? என்பன போன்ற வாதங்களில் புலமைப் பகட்டர்களுக்கு உற்சாகம். இவர்கள் `அறிவுப் பூர்வமாகவும்’ ‘ஆதாரப் பூர்வமாகவும் திராவிட இயக்கத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? `திராவிட மாயை’யிலிருந்து தமிழர்களை விடுவித்து, தமிழ்த் தேசிய உணர்வை வளர்த்தெடுத்து, விடுதலை பெற்றதொரு புதிய நாட்டை உருவாக்கப் போகிறார்களா? ஏறத்தாழ எண்பது ஆண்டுகளாக அதாவது திராவிடர் கழகம் என்றோர் அமைப்பு தோன்றிய நாள் முதலாகவே இம்மாதிரியான திராவிட இயக்க எதிர்ப்புக் குழுக்களும் விவாதங்களும் இருந்து கொண்டுதான்...

திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

பெரியார் – தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்று கூறியது குறித்து வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தி.க. தலைவர் கி.வீரமணி ‘உண்மை’ இதழில் (ஜன.1-15) கீழ்க்கண்ட பதிலை அளித்துள்ளார். “சமூக இழிவு ஒழிப்பு மாநாடுதான் அவர் கடைசியாக நடத்தியது; பேசியது. அதற்காக விடுத்த அறிக்கையில் ‘நானே பிரிவினை கேட்கவில்லையே!’ என்று அறிக்கையை விடுத்தார். அது விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது. ‘விடுதலை’க்கான தேவை அவசியம் வேறு – கழகம் விடுதலை கேட்டது என்ற நிலை வேறு’ என்று பதிலளித்துள்ளார். பெரியார் தமிழ்நாடு தனிநாடாக பிரிய வேண்டும் என்று வலியுறுத்தியது உண்மை. தி.க. தலைவர், அதை ஏற்கிறாரா? இல்லையா என்பது, அவரது கொள்கை. அதற்காக பெரியார் கருத்தை மறைக்க முயல்வது வரலாற்றுத் துரோகம். தி.க. தலைவர் கூறுவதுபோல் பெரியார் கடைசியாக பேசியது சமூக இழிவு ஒழிப்பு மாநாடு அல்ல. பெரியார் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தியது 1973 டிசம்பர் 8,...