Tagged: திராவிடர்

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம்  (2) கொளத்தூர் மணி

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (2) கொளத்தூர் மணி

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) மொழித் தூய்மைவாதம் என்பது தன் மொழி மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தை எதிர்ப்பது. சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் என்று நம் மீது செலுத்தப்படும் எல்லா ஆதிக்கத்தையும் எதிர்க்கும் நாம், நம் மொழி மீது வேற்று மொழி ஆதிக்கம் செலுத்துவதை எதிர்ப்பது நியாயம் தான். பெரியாரும் பேசியிருக்கிறார் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்கும்போது னுளைiகேநஉவயவே என்ற சொல்லுக்கு பூத நாசினி என்று சொல்லுகிறார்கள். நச்சு நீக்கி என்று சொன்னால் என்ன? நுடநஉவசடிடலளளை என்ற சொல்லை ஏன் விக்தியோஜனம் என்று மொழிபெயர்க்கிறீர்கள்? மின் பருக்கை என்று ஏன் கூற மறுக்கிறீர்கள்? பெரியார் கேட்கிறார். நம் மொழி மீது இன்னொரு மொழியின் ஆதிக்கம் வேண்டாம் என்பது சரி; ஆனால் இனத் தூய்மை வாதம் பேசுகிறபோதுதான் சிக்கலே வருகிறது. இனத் தூய்மைவாதம் பேசுகிறவர்களிடம்...

தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)

தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)

1814ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் பிறந்த இராபர்ட் கால்டுவெல், 200 ஆம் ஆண்டுகளில் நினைவு கூரப்படுகிறார். மதம் பரப்புவதற்குத்தான் அவர் இந்தியா வந்தார். ஆனால், அவரது தொண்டு திராவிட மொழிகளின் ஆய்வுகளை நோக்கித் திரும்பியது. ‘திராவிடம்’, ‘திராவிட இயல்’ என்ற கருத்தியலை தனது ஆய்வு மூலம் நிறுவிக் காட்டிய பெருமைக்குரியவர் கால்டுவெல்! கால்டுவெல்லுக்கு முன்பு பிரிட்டிஷ் புலமையாளர்கள் பலரும் ‘இந்தியா’ எனும் நிலப் பகுதி மக்கள், ‘இந்தோ-ஆரிய’ மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்தே உருவானவை என்றும் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். வில்லியம் ஜோன்ஸ், ஹீம் போல்ட் போன்ற “புலமையாளர்கள்” சமஸ்கிருதத்தையும், அதன் பார்ப்பன பண்பாட்டையும் உயர்த்திப் பிடித்தனர். ஆரியப் பார்ப்பனர்கள், அய்ரோப்பிய பண்பாட்டுடன் தங்களை இணைத்து பெருமை பாராட்டிய காலத்தில், கால்டுவெல் முன் வைத்த ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆய்வு’ – ஆரிய மொழிக் குடும்பம் வேறு, திராவிட மொழிக் குடும்பம் வேறு...