Tagged: தலைமைக் குழு

சென்னையில்  கழக தலைமைக் குழு கூடியது

சென்னையில் கழக தலைமைக் குழு கூடியது

திராவிடர் விடுதலைக்கழக தலைமைக் குழு 7.1.2016 அன்று காலை 11 மணியளவில் சென்னை கழக தலைமையகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை, கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் குறித்த மீளாய்வு, 27 சதவீத பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படாத நிலை, அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பேரறிவாளன் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இறுதியாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. 24.1.2016 அன்று திருச்சியில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 2. ஏப்ரல் மாதம் அறிவியல் மன்றம் சார்பில் மதுரையில் 5 நாள் குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம் நடத்தவும், கழகக் குடும்பப் பெண்களோடு சந்தித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் மகளிர் சந்திப்பு களையும், மாவட்டந்தோறும் குழந்தை களுக்கு ஒரு நாள் பயிற்சிகளையும்...

மே மாதம் முழுதும் கழக பயிற்சி முகாம்கள்!

மே மாதம் முழுதும் கழக பயிற்சி முகாம்கள்!

11.3.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை தலைமை நிலைய அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு கூடியது. கழக செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கூடிய இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்கண்டோர் பங்கேற்றனர்: ஈரோடு ப. இரத்தினசாமி, பால். பிரபாகரன், தி.தாமரைக்கண்ணன், தபசி. குமரன், சூலூர் தமிழ்ச்செல்வி, புதுவை லோகு அய்யப்பன், அன்பு. தனசேகரன், இராம. இளங்கோவன், பல்லடம் விஜயன், மேட்டூர் அ. சக்திவேல், மயிலாடுதுறை இளையராஜா, திண்டுக்கல் இராவணன், கொளத்தூர் குமார், திருப்பூர் சிவகாமி, பேராசிரியர் இராமகிருட்டிணன். தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்: சேலம் மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் ஏற்காட்டிலும், கோவை மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று...