Tagged: தலித் முரசு

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

‘அகமணமுறை’ பாதிப்புகளை விளக்கிடும் ‘தீவரைவு’ ஆவணப்படம் திரையீடு

கருந்திணை தயாரிப்பில் தோழர் பூங்குழலி இயக்கத்தில் உருவான “தீவரைவு” ஆவணப் படத்தின் திரையிடல் கடந்த 9-05-2014, வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை பனுவல் புத்தகக் கடை அரங்கில் நடைபெற்றது. நமது பண்பாட்டில் உறவுகளை நிலை நிறுத்துவதற்கும், புதிய உறவுகளை உருவாக்கு வதற்கும் திருமணம் ஒரு முக்கிய களமாக இருக் கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, ஜாதியையும் நிலைநிறுத்தி வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஜாதிக்குள் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல் ஊனம், மன ஊனம், மருத்துவ ஊனங்களை அதிகமாக்கி வருகிறது. தொடர்ச்சியாக ஜாதிக்குள் நடைபெற்று வரும் திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு மற்றும் மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம். கருந்திணையும் பனுவலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடல் நிகழ்வில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், இந்த...

போர்க் குற்ற விசாரணைக்கு – சான்று தரும் ஆவணம் 0

போர்க் குற்ற விசாரணைக்கு – சான்று தரும் ஆவணம்

“இலங்கை : யானையை மறைக்கும் முயற்சி” என்ற ஆங்கில நூலை சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எழுதி வெளியிட்டிருக்கிறார். இலங்கை அரசின் பயங்கரவாதம், இனப்படுகொலைக்காக கட்டமைத்த அதன் அரசியல், “இறுதித் தீர்வு”க்காக மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட முழுமையான யுத்தம். அதில் பாதிக்கப்பட்டோர், நேரில் கண்டோர் சாட்சியப் பதிவுகள் என்ற மூன்று தலைப்புகளில் நூலாசிரியர் ஈழத் தமிழர் போராட்டம், வரலாற்றுப் பின்னணிகளை சர்வதேச சட்டங்கள், தேசிய இனங்களுக்கான உரிமைகள், ‘இறையாண்மை’க் குரிய அரசுக்கு வரையறுக்கப்பட்டுள்ள உரிமைகள் என்ற பார்வையில் அற்புதமாக விளக்குகிறார். இவற்றோடு, இறுதிக்கட்டப் போரில் பாதிக்கப் பட்டோர், நேரில் கண்டவர் சாட்சியங்கள், கொலைக் களமாக மாற்றப்பட்ட ‘போரில்லாத பகுதி’; அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை; கடமை தவறிய அய்.நா. அமைப்புகளை அம்பலப்படுத்தும் அய்.நா. உள்ளக அறிக்கை; (அந்த அறிக்கையில் பல பகுதிகள் – கறுப்பு மையிட்டு அழிக்கப்பட்டுள்ளன)...