Tagged: தமிழீழ ஏதிலியர் உரிமை கூட்டமைப்பு

மறுவாழ்வு ஆணையருக்கு தமிழீழ ஏதிலியர் உரிமை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை

அய்யா!       வணக்கம். அண்மையில் வந்துபோன வர்தா புயல் தந்த பாதிப்புகளை நீங்கள் அறிவீர்கள். அரசு உடனடி நடவடிக்கைகள் செய்ததும் சென்னை மாநகராட்சி தொய்வின்றிச் செய்யும் பணிகளும் நம்மை மீட்டுள்ளன.  முழுமையாக மீளவேண்டியுள்ளது என்பது வேறு செய்தி.        புலம்பெயர்ந்து இங்கே வாழ்ந்து வரும் ஈழத் தமிழரின் முகாம்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை நீங்கள் இந்நேரம் அறிந்திருக்கக் கூடும்.எவ்வித  மீட்புப்  பணிகளும் குறிப்பாக கும்முடிப்பூண்டி முகாமில் நடைபெறவில்லை என்பதை உங்கள் கவனத்திற்குக்  கொண்டு வர விழைகிறோம்.        இப்போதுவரை அங்கே மின்சாரம் மருந்துக்கும் இல்லை. அதனால் தண்ணீரை மேலேற்ற முடியவில்லை. குடிப்பதற்கோ கழுவிக்கொள்வதற்கோ  தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். சில தன்னார்வலர்கள் உதவியால் ஏதோ அடிப்படைத் தேவைகளை சிக்கனமாய் நிறைவு செய்துகொள்ளும் அவலநிலை. இரவெல்லாம் இருண்ட வனவாழ்வு வாழ்கின்றனர். மரங்கள் வீடுகள் மேல் விழுந்ததை அப்புறப்படுத்த அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் எவ்வித முயற்சியும் இல்லை....