Tagged: தடா

இதில் என்ன குற்றம், சிந்திப்பீர் தமிழர்களே!

இதில் என்ன குற்றம், சிந்திப்பீர் தமிழர்களே!

ராஜிவ் கொலையில் சதி செய்த குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்த 7 பேரை  உச்சநீதி மன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்தது. காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா என்று போராட்டம் நடத்துகிறார்கள். நாட்டின் பிரதமரைக் கொன்றவர்களையே விடுதலை செய்தால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்புக் கிடைக்கும் என்கிறார், ராகுல் காந்தி. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார் சுப்ரமணியசாமி. மக்களின் சிந்தனைக்கு நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்: ராஜிவ் காந்தி கொலையில் சி.பி.அய். 41 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் கண்டது. இதில் நேரடி தொடர்புடையவர்களான தாணு, சிவராசன், சுபா உள்ளிட்ட 12 பேர் ஏற்கனவே தேடுதல் வேட்டையில் இறந்து விட்டார்கள். 26 பேர் குற்றம்சாட்டப்பட்டு, ‘தடா’ நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர். பூந்தமல்லி ‘தடா’ நீதிமன்றம் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை அறிவித்தது. இந்த...

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது கரைபுரண்ட உற்சாகம் – உச்சநீதிமன்றம் – இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தபோது தலைகீழாக மாற்றி ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய 7 சட்டப் பிரச்சினைகளை முன் வைத்துள்ளது, தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு. சட்டங்களின் நுணுக்கங்கள் விவாதங்கள் எப்படி இருந்தாலும், ஒரு சாமான்யனின் பார்வையில் நீதி மறுக்கப்படுகிறது என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட இவர்கள், 23 ஆண்டுகாலம் சிறையில் கழித்துவிட்டார்கள். மரண தண்டனையைக் குறைக்கக் கோரி கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு, அது 11 ஆண்டுகாலம் அது கிடப்பில் போடப்பட்டது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான உயிர் வாழும்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

பொற் கோயிலுக்குள் இராணுவம் நுழைந்து 700 பேர் வரைக் கொன்றுக் குவித்த 30 ஆம் நினைவு நாளன்று பொற்கோயிலில் இரு சீக்கிய பிரிவினர், வாள், ஈட்டியுடன் மோதிக் கொண்டனர்.              – செய்தி இப்படித்தான் அன்றைக்கு இராணுவம் நுழைந்த போதும் நடந்தது என்பதை செயல்முறையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் போல! கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம்; 4 அமைச்சர்களிடம் மோடி ஒப்படைத்தார்.  – செய்தி முதலில் ‘பாவம்’ செய்த பக்தர்கள் ‘பாவத்தை’ கங்கையில் தொலைப்பதற்கு தடை போடுங்க! அதுவரை கங்கை “பாவங்களின்” நதியாகத்தான் இருக்கும்; தூய்மையாகாது. போரில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த ராஜபக்சே நியமித்துள்ள விசாரணைக் குழுவிடம், 18,590 புகார் மனுக்கள் வந்துள்ளன.      – செய்தி அப்புறம், இந்த மனுக்களும் காணாமல் போகும்; அதைக் கண்டுபிடிக்க ராஜபக்சே மற்றொரு குழு போடுவார். இந்திய வெளியுறவுத் துறை அதையும் வரவேற்று அறிக்கை விடும். அட, போங்கப்பா! “கற்பழிப்பு” குற்றவாளிகளை கடவுளால் மட்டுமே தடுக்க...