Tagged: ஜாதி மறுப்பு

தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள் !

தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள் !

கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெண்ணடிமைச் சின்னங்களை அகற்றிய ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் கல்கி – தேஜஸ்ஸ்ரீ இருவரும் பி.டெ.க். பட்டதாரிகள். படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தேஜஸ்ஸ்ரீ ஆந்திராவைச் சார்ந்தவர். அவர் தந்தை தெலுங்கு ஆசிரியராக தமிழ் நாட்டில் பணி செய்கிறார். அவர் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி தேஜஸ்ஸ்ரீ – கல்கி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கல்கியின் பெற்றோர் வினோத்- ஸ்டெல்லா ஆகியோர் இந்த திருமணத்திற்கு ஆதரவளித்தனர். வினோத் – ஸ்டெல்லா இணையர் பகுத்தறிவாளர்களாக பெரியாரியலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவரும் தோழர்கள் ஆவர். இந்நிலையில் கடந்த 20.04.2016 அன்று கொளத்தூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தோழர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்களின் திருமணம் குறித்து தேஜஸ்ஸ்ரீயின் பெற்றோருக்கு முறைப்படி தகவல்...

பூரணாகரன் – ஆஷா ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா!

பூரணாகரன் – ஆஷா ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா! நெமிலியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சு.பூரணாகரன்-தி.ஆஷா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணை ஏற்புவிழா, 19.2.2016 அன்று காலை 7 மணிக்கு வேணுகோபால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அருள் மொழி (திராவிடர் கழகம்), அனந்தி சசிதரன் (இலங்கை வடமாகாண சபை உறுப்பினர்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), டேவிட் பெரியார், திரைப்பட இயக்குனர் ஹீரா, சென்னை மாவட்ட கழக செயலாளர் தோழர் இரா. உமாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.