Tagged: செம்மரம்

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி 20 தமிழக கூலி தொழிலாளர்களின் முதலாம் ஆண்டு, தோழமை உறுதி ஏற்பு தினம்

ஆந்திர படுகொலை, ”முதலாம் ஆண்டு தோழமை உறுதி ஏற்பு தினம்.” 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ம்தேதி ஆந்திர மாநில செம்மரகட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால்,கடத்தி சுட்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி 20 தமிழக கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்கான ”முதலாம் ஆண்டு தோழமை உறுதி ஏற்பு தினம்.” நாள் : 07.04.2016, காலை 09.30 இடம் : சாரண சாரணியர் இயக்க கூட்ட அரங்கு, திருவண்ணாமலை. தலைமை : வழக்கறிஞர் ஹென்றி டிபேன், நிர்வாக இயக்குனர்,மக்கள் கண்காணிப்பகம், உரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம், பேராசிரியர் கல்வி மணி, இருளர் பாதுகாப்பு நலச்சங்கம், அ.மார்க்ஸ்,எழுத்தாளர், பேராசிரியர் சரஸ்வதி PUCL, மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். நிகழ்சி ஏற்பாடு : மக்கள் கண்காணிப்பகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்.