Tagged: சரஸ்வதி பூசை (ஆயுத பூசை)

வழிகாட்டுகிறது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அனைவருக்கும் பொதுவான அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மத சம்பந்தமான விழாக்கள் கொண்டாடக்கூடாது ” என்ற நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கழக மாநில அமைப்புச்செயலாளர் தோழர்.இரத்தினசாமி ,மாவட்ட செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் மற்றும் தோழர்கள் சார்பில் நேரில் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்தும்படி அரசு அலுவலகங்களுக்கு உத்தரவிட்டார். இதனால் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி, ஆயுத பூசை கைவிடப்பட்டது. இதனைப் பாராட்டும்விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

சரஸ்வதி பூசை (ஆயுத பூசை) – இந்து மதப் பண்டிகைகள் நூலிலிருந்து

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை.  கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி , அதற்குச் சரஸ்வதி என்று பெயர்  கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி , கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து  கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே , அவர்கள்  படித்துப்பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்”  என்று சொல்லிக்கொண்டு இருக்கின் றார்கள்.   முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கிய தையைக் கவனித்தால் , அது பார்ப்பனர்களின் புராணக் கதை களின்படியே மிக்க  ஆபாசமானதாகும்.  அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக் கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு , அந்தப் பிரம்மனாலேயே  மோகிக்கப் பட்டு அவளைப் புணர அழைக்கையில் , அவள்...