Tagged: கையெழுத்து இயக்கம்

ஈழ ஏதிலியர் உரிமை: கையெழுத்து இயக்கம் தொடங்கியது

தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் 27 08 2018 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் திராவிடர் விடுதலைகழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்), செந்தில் (இளம் தமிழகம்), பாரதி (த.தே.வி.இ.), அருண பாரதி (த.தே.பே), சேகர் (தொ.மு.இ.), வன்னி அரசு (வி.சி.), இயக்குனர் மு. களஞ்சியம், இயக்குநர் புகழேந்தி மற்றும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 01092016 இதழ்

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு கையெழுத்து இயக்கம்

”தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” சார்பாக நடைபெறும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம் 27.08.2016 அன்று மாலை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் துவங்கியது.. இந்திய அரசு, இந்தியாவில் உள்ள தமிழீழ ஏதிலியருக்கு இடைக்கால குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. தோழர் கோவை இராமகிருட்டிணன்,தோழர் வன்னியரசு, ஓவியர் தோழர் வீரசந்தானம்,தோழர் செந்தில்,தோழர் அருணபாரதி,தோழர் களஞ்சியம்,தோழர் பாரதி மற்றும் இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் , கழக தோழர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களும் ஏராளமானவர்கள் முன்வந்து கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு கையெழுத்து இயக்கம்

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு சார்பாக 27.08.2016 அன்று மாலை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் , தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்