Tagged: கன்னியாகுமரி

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போடாதே குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்

13.9.2015 அன்று நடைபெற்ற கன்னியாகுமரி திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில் அரசு அலுவலகங்களிலுள்ள கற்பனை கடவுளர் படங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் அகற்றவும், ஆயுத பூஜைப் போன்ற மதப் பண்டிகைகளை கொண்டாடவும், தடைவிதித்த அரசாணையையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் அமுல்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 25.9.15 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் தமிழ் மதி, நீதி அரசர், சூசையப்பா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இராம. இளங்கோவன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். ‘அரசு அலுவலகங்களை பூஜை மடங்களாக்காதே’ என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நெல்லை மாவட்ட கழகம் சார்பாக மதியழகன், சாந்தா கலந்து கொண்டனர். குமரேசன் தலைமையில் ஆதித் தமிழர் பேரவையினரும், ஜான் விக்டர்தா° தலைமையில் ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்....