Tagged: கட்டுரை போட்டி

தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டி

சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக பேச்சுப் போட்டி, இராயப்பேட்டை வி.எம். தெருவிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 24.7.2016 காலை 10 மணிக்கு போட்டிகளை தொடங்கி வைத்து உரையாற்றினார். 􀁏 பெரியாரும் அம்பேத்கரும் ஏன் இன்று தேவை? 􀁏 சமத்துவ மானுடம் அடைவதற்கு அடிப்படை தடையாக இருப்பது ஜாதியா? (அ) மதமா? 􀁏 இன்றைய கல்வி முறையில் உண்மையான நோக்கம் மானுட மேன்மையா? (அ) பொருளியல் மதிப்புகளா? 􀁏 பாலின ஒடுக்குமுறைக்கு காரணமாக அமைவது தனி மனித ஒழுக்கச் சிதைவா? (அ) கலாச்சார கட்டமைப்பா? – என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. நடுவர்களாக பேராசிரியர் அ. பெரியார், முனைவர் விநாயகம், வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் இருந்தனர். சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் க. ஜெயபிரகாசு, செந்தில் (குனுடு), உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), விழுப்புரம் அய்யனார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 30 கல்லூரி மாணவியர் போட்டியில்...

பரிசளிப்பு விழா – கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்தநாள் போட்டி

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் கட்டுரை போட்டி, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 06082016 அன்று அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் துவக்க விழாவின் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்தி வணங்கினார் நம்புங்கள் அறிவியலை, நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கத்தோடு நடைபெற உள்ள பரப்புரை பயணத்தின் துவக்க விழா சென்னை திவிக சார்பில் 08082016 மாலை 6 மணிக்கு லாயிட்ஸ் சாலையில் நடைபெற்றது அவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்