Tagged: இஸ்லாமிய சிறைவாசிகள்

தமிழக முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் உருக்கமான கடிதம்

தமிழக முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் உருக்கமான கடிதம்

தமிழக சிறைகளில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக்கு உரிய தகுதி பெற்ற சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து முஸ்லீம்கள் அமைப்பு முதல்வருக்கு (ஜமா அத்துல் உலக மாசபை) வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதம் விவரம்: தமிழகத்தில் மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று சிறப்பான முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்களுடன், எங்கள் சமூகத்தின் சார்பாக ஒரு முக்கிய கோரிக்கையை உங்கள் முன் வைத்திட விரும்புகின்றோம். முந்தைய தி.மு.க. அரசு சிறைக் கைதிகள் பொது மன்னிப்பு விடுதலையின்போது முஸ்லிம் சிறைக் கைதிகள் விஷயத்தில் குறிப்பாக அரியானா மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் (உய சூடி,30.2005) வழங்கிய உத்தரவு வழிகாட்டுதலை புறந்தள்ளி பாரபட்சமான முறையில் நடந்து கொண்டது. தமிழக அரசு பொது மன்னிப்பு விடுதலையில் தகுதியற்ற வழக்குகள் எவையெல்லாம் என்பதனை அரசாணை எண். 1762/87 இல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில் இவ்வரசாணையில்...

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக  நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட முடிவெடுத்திருக்கும் நிலையில் ஒரு  வேண்டுகோளை திராவிடர் விடுதலைக் கழகம் அ.இ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அவர்களுக்கும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் முன் வைக்க விரும்புகிறது. தமிழ்நாட்டில் நீண்டகால சிறைவாசிகளையும் இராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாழும் 7 தமிழர்களையும் மாநில அரசுக்கு உரிய உரிமையைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதை செய்தால் அது புதிய ஆட்சிக்கு பெருமை சேர்ப்பதோடு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக்கும் சரியான நினைவுப் பரிசாக வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏற்கெனவே அண்ணா நூற்றாண்டின்போதும் கலைஞர் சட்டமன்றப் பணியின் 50ஆம் ஆண்டு நிறைவை யொட்டியும் ‘சுதந்திரம்’ பெற்று 25ஆம் ஆண்டு நிறைவுக்காகவும் தமிழகத்தில் இதேபோல் சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் முழக்கம் 19012017 இதழ்

‘இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!’

‘இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!’

9-9-2016 அன்று பிற்பகல் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், தமிழக மக்கள் ஜனயாகக் கட்சியின் ஒருங்கிணைப்பில், அக்கட்சியின் தலைவர் புதுக்கோட்டை ஷெரீப் தலைமையில், பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அனைத்து சிறைவாசிகளையும், மத பேதம் இன பேதம் பார்க்காமல் விடுதலை செய் என்ற ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வார்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சி, அமைப்புகள், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 13102016 இதழ்

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

தமிழ்நாட்டில் 14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், அவர்களுக்கான சட்டரீதியான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த சிறைவாசிகளின் உரிமைகளை வலியுறுத்தும் கருத்தரங்கம் கடந்த 20ஆம் தேதி சென்னை இக்ஷா அரங்கில் நடைபெற்றது. இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்பாதுரை, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் பேராசிரியர் சரசுவதி, பேராசிரியர் அ.மார்க்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் அ. சவுந்தர்ராசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் பேசினர். இது குறித்து இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை : அண்ணா பிறந்த நாளின்போது நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் வழக்கத்தை தமிழக அரசு கடைப்பிடித்து வந்தது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க செயலாகும். ஆனால், வழக்குக் காரணத்தைக் காட்டி தமிழக அரசு இந்த பழக்கத்தை சில ஆண்டுகளாக நிறுத்தி...