Tagged: இலங்கை போர்க் குற்றம்

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

இலங்கைக்கு அய்.நா. மனித உரிமைக்கு தந்த கெடு 2017 மார்ச் மாதத்தோடு நிறைவடைகிறது. மீண்டும் உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது இலங்கை. தமிழர்கள் இந்த சதியை முறியடித்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் என்ன? கடந்த 2015 அக்டோபர் மாதம், இலங்கை அரசு அய். நா. வின் மனித உரிமைகள் குழுவிடமும் இலங்கை மக்களிடமும் ஒரு வாக்குறுதியை அளித்திருந்தது. “கடந்த காலத்தில் நடந்தவை குறித்து சட்ட ரீதியான மற்றும் பிற வகைகளிலும் முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உண்மை, நீதி, நிவாரணம் மற்றும் மீண்டும் தவறுகள் நடக்காதிருப்பதை உறுதி செய்வது” என்பதே அந்த வாக்குறுதி. 15 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி 13, 2017 அன்று, இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா, இலண்டனில் நடந்த ஒரு கலந்துரையாடல் கூட்டத்தின் போது, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது என்று...

போர்க் குற்ற விசாரணைக்கு – சான்று தரும் ஆவணம் 0

போர்க் குற்ற விசாரணைக்கு – சான்று தரும் ஆவணம்

“இலங்கை : யானையை மறைக்கும் முயற்சி” என்ற ஆங்கில நூலை சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எழுதி வெளியிட்டிருக்கிறார். இலங்கை அரசின் பயங்கரவாதம், இனப்படுகொலைக்காக கட்டமைத்த அதன் அரசியல், “இறுதித் தீர்வு”க்காக மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட முழுமையான யுத்தம். அதில் பாதிக்கப்பட்டோர், நேரில் கண்டோர் சாட்சியப் பதிவுகள் என்ற மூன்று தலைப்புகளில் நூலாசிரியர் ஈழத் தமிழர் போராட்டம், வரலாற்றுப் பின்னணிகளை சர்வதேச சட்டங்கள், தேசிய இனங்களுக்கான உரிமைகள், ‘இறையாண்மை’க் குரிய அரசுக்கு வரையறுக்கப்பட்டுள்ள உரிமைகள் என்ற பார்வையில் அற்புதமாக விளக்குகிறார். இவற்றோடு, இறுதிக்கட்டப் போரில் பாதிக்கப் பட்டோர், நேரில் கண்டவர் சாட்சியங்கள், கொலைக் களமாக மாற்றப்பட்ட ‘போரில்லாத பகுதி’; அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை; கடமை தவறிய அய்.நா. அமைப்புகளை அம்பலப்படுத்தும் அய்.நா. உள்ளக அறிக்கை; (அந்த அறிக்கையில் பல பகுதிகள் – கறுப்பு மையிட்டு அழிக்கப்பட்டுள்ளன)...