Tagged: இந்து முன்னணியை தடை செய்

இந்து முன்னணி வன்முறை கும்பலை தடை செய்! திருப்பூரில் 2500 தோழர்கள் கைது!

தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுறுத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டு கைதானார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும், கடைகளுக்கு அச்சுறுத்தலாககலவரத்தை ஏற்படுத்தும் இந்து முன்னணியை தடை செய்யவும், அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது  செய்யவும் வலியுறுத்திப் பேசினர்.கோவையில்...

கோவை கலவரம் செய்த இந்து முன்னணியை தடை செய் – திருப்பூரில் ஆர்ப்பாட்டம் கழகத் தலைவர் உரை

கழக தலைவர் உரை! (காணொளியை காண சொடுக்கவும்) மதவாதத்திற்கெதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் 30.09.2016 அன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. கலவரத்தில் ஈடுபட்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்து முன்னணியை தடை செய்! தமிழகம் குஜராத் தாக மாறும் என அச்சுறுத்திய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியை கைது செய் என வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அதில் ஒரு பகுதியினர் காவல் வைக்கப்பட்ட திருப்பூர் காதர் சலீமா திருமண மண்டபத்தில் கூடியிருந்த பல்வேறு அமைப்பு தோழர்கள் மத்தியில் கழக தலைவர் ஆற்றிய உரை.